வியாழன், 30 ஜூலை, 2015

அப்துல் கலாம்...

கடையடைப்பு செய்யச் சொல்லி எவரும் வற்புறுத்தவில்லை....ஆனால் பெரும்பான்மை கடைகள் மூடப்பட்டிருந்தன.....மக்கள் நடமாட்டம் நகரில் காணப் படவில்லை....ஒரு “பந்தைப்“ போல தெருக்கள் காட்சியளித்தது இன்று....

படித்தவர்கள் மட்டுமல்ல பாமரர்களும்கூட உண்மையில் வருந்திய ஒரே இழப்பு....

ஆட்டோ ஓட்டுனர்கள, கூலித் தொழிலாளிகள் முதல் மாணவர்கள் அரசு தனியார் ஊழியர்கள் அனைவரும் தன்னெழுச்சியாக எந்த அரசும் கேட்டுக் கொள்ளாமல்  அஞ்சலிக் கூட்டம்  செலுத்துகிறார்கள்... போஸ்டர் ஒட்டுகிறார்கள் ப்ளக்ஸ் பேனர்கள் வைக்கிறார்கள்...

ஆக மொத்தம் மக்கள் ஒரு தன்னெழுச்சியாக நாடெங்கும் திரண்டார்கள்..
இந்த மகா மனிதனுக்கு... 

வரலாற்றில் மகாத்மா காந்திக்குப் பிறகு உண்மையில் மக்கள் அஞ்சலி நடந்தது இன்றுதான்...
Image result for abdul kalam stills

அப்துல் கலாம்.... வாழ்க நீ எம்மான்....
என்றும் உன் புகழ் நீடித்து நிலைத்து நிற்கும்....

வெள்ளி, 24 ஜூலை, 2015

நடிகர் சண்டை....

நடிகர் சங்கம் பற்றிய  செய்திகளை அவ்வப்போது படிக்க  நேர்கிறது.   நடிகர் சங்கம் தேர்தல் பற்றிய   வழக்கு இன்னமும் நிலுவையில்  இருக்கயில் தீர்ப்பு வந்தபின் தான்  தேர்தல் பற்றி தெளிவாகும் ...

செவ்வாய், 14 ஜூலை, 2015

இசைத் தேன்.....




காதில் தேனைப் பாய்ச்சியவர்......
கண்களில் நீரைப் பாய்ச்சிவிட்டார்......


வெள்ளி, 10 ஜூலை, 2015

ஆபத்தான பாதை...

பீஹார் மாநிலத்தின் மேலவைக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் பாதிக்கு மேல் கிரிமினல் வழக்கு உள்ளவர்களாம் என்கிற செய்தியைப் படிக்க நேரிட்டது.....

இந்தப் பக்கம் மத்திய பிரதேசத்தில்  நடப்பது எல்லாமே விபரீதம்தானோ  என்று எண்ணத் தோன்றுகிறது...  முதலில் யூனியன் கார்பைட் படுகொலைகள் தற்போது “வியாபம்“ என்கிற  SERVICE COMMISSION ... பொதுவாக எல்லா மாநிலத்திலும் அந்தந்த மாநில சர்வீஸ் கமிஷன் பரிட்சையில் ஊழல்கள் இருக்கும்... தமிழகத்திலும் நாம் கேள்விப் படுகிறோம்,....  ஆனால் ம.பி யில் நடப்பது வெறும் ஊழல்கள் மட்டுமல்ல கிட்டத்தட்ட 48 படுகொலைகள்... அனைவரும் இந்த ஊழல்கள் வெளிவர காரணமானவர்கள்... “அட அது அதிகம் பேசறாங்க சார்.. ஒரு ஏழு அல்லது எட்டு (?) பேர்தான் இருக்கும்...“ என்கிறார்கள் ஆளும் கட்சி ஆதரவாளர்கள்...

சற்றும் ஏற்க முடியாத கொடுமைகள் இவைகள்... ஊழல்களைக் கூட சகித்துக் கொண்டு வாழ்ந்துவிடலாம்... படுகொலைகளை சற்றும் ஏற்க முடியாது....

மக்களின் சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் பெரும் ஆபத்திற்கான அறிகுறிகள் இவைகள்...

முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியவை....

ஞாயிறு, 5 ஜூலை, 2015

பாபநாசம்.....

த்ருஷ்யம் படத்தின் அனுபவத்திலிருந்து வெளிவருவதற்குள் பாபநாசம் படம் எத்தனை சுகானுபவமாக இருக்கிறது...
Image result for papanasam movie stills

கமலுக்கென்ன கேட்கவேண்டுமா...? மோகன்லாலா கமலா என்கிற பேச்சுக்கே இடமில்லை... இருவரும் அவரவரர்க்ள் வாழும் இடத்திற்கேற்றவாறு (மலையாளி, தமிழன்)   வாழ்ந்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்... 

ஆக கமலைப் பற்றிப் பேசவிரும்பவில்லை... ஆனால் கமல் நடிக்கும் படித்தில் யாராவது ஒரு கேரக்டர் அசத்துவார்கள்... உதாரணம் உத்தமவில்லனில் பாஸ்கர்..  

இந்தப் படத்தில் கமலுக்கு அடுத்த படியாக அல்லது அவருக்கு ஈடாக அசத்தியவர் ஆனந்த மகாதேவன்... அவர் வரும் காட்சிகளும் வெகு குறைவு.... பேசும் வசனங்களும் ஒரே ஒரு பக்கத்தில் கூட வந்துவிடும்... இறுதிக் காட்சியில் சில நிமிடங்கள் பேசும் போது உண்மையில் கமலைத் தூக்கிச் சாப்பிட்டுவிடுகிறார்... எத்தனை நேர்த்தி என்ன மிடுக்கு... அபாரம். என்று கைதட்டத் தோன்றுகிறது...

நான் கல்லூரியில் படிக்கும் போது மும்பை வாழ் தமிழராக பல இந்தி சீரியல்களில் அவரை இளமையாக பார்த்திருக்கிறேன்...

இத்தனை நாட்கள் எங்கிருந்தீர்கள் ஆனந்த்.....