தற்போதுதான் கபாலி பார்க்க முடிந்தது... மிகப் பெரிய வணிகப் புயல் வணிக சுனாமியால் உடனடியாகப் பார்க்க இயவில்லை....
ரஜினி, ரஞ்ஜித், தலித் அடையாளம், பெரும் பட்ஜெட் என்று மாறி மாறி ரஜினியின் எந்தப் படத்திற்குமில்லாத ஒரு ஹைப் இந்தப் படத்திற்கு உருவாகிவிட்டது... ஒரு சாதாரண ஆனால்உ ண்மையான ரஜினி ரசிகனால் படத்தை பார்க்க முடியாமல் ITகாரர்கள் ஆக்கிரமித்துவிட்டார்கள் என்கிற குற்றச் சாட்டை வினவு உட்பட பல ஊடகங்கள் ஆதாரத்துடன் வெளியிட்டன...
எல்லாம் ஒரு புறம் இருக்க...
ஒரு படத்தை படமாகப் பார்க்க வேண்டும் என்று பார்த்தால், இந்தப் படம் பற்றிய ஒரு தீர்க்கமான முடிவுக்கே வர முடியவில்லை... ஒரு புறம் ரஞ்ஜித் என்கிற புதுமை இயக்குனர்....... மெட்ராஸ் என்கிற கலைப்படைப்பை தந்தவர்.
மறுபெரும் ரஜினி என்கிற பெரிய பிம்பம்... இன்ன பிற பிரபல நடிகரைவிட உண்மையில் ரஜினி முறைப்படி நடிப்புக் கலையை பயின்றவர்... அவரின் உண்மையான திறமையை இது வரை எந்தப் படமும் வெளிக் கொண்டு வரவில்லை என்பதுதான் என் எண்ணம் ... காரணம் அவர் விரும்பியோ விரும்பாமல் அவரைத் தொடர்ந்த அந்த மாஸ் ஒளிவட்டம் ...
அதையும் மீறி ரஞ்ஜித் கலைப் படமாக்க முயற்சித்திருக்கிறார்... ஆனால் வெற்றி பெற வில்லை என்பதுதான் உண்மை... ஆக கலைப் படத்திற்கும் மசாலாவிற்கும் இடையே படம் அல்லாடுகிறது...
இன்னமும் முயற்சி தேவை ......