இது சரியான கருத்தா.. தெரியாது.. ஆனால் என் மனதில் பட்ட சரியான கருத்து
அஞ்சலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அஞ்சலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018
திங்கள், 15 ஜனவரி, 2018
ஞாநி.....
ஞாநி.. பல ஆண்டுகளாக ஞாநியின் கட்டுரைகள் வாசித்து வந்தாலும் இலங்கை தமிழ் போராளிகளை ஒட்டி அவர் எழுதிய ஒரு நாவல் முக்கியமானது .. அதனால் அவரை நேரில் பார்க்க ஆசை பட்டேன் .. அதற்கு ஒரு சந்தர்ப்பம் எனது நாவல் மூலம் வந்தது ..
எனது முதல் நாவலான ''நவீன கற்காலம் புத்தகத்திற்கு அவரின் அணிந்துரையை வேண்டி அவரை சந்தித்தித்தேன் .2003 ஆண்டில் அந்த நாவல் வெளி வந்தது அதற்கு வெளியீட்டுவிழா வைக்கச்சொன்னார் அதை நான் நிறைவேற்ற வில்லை .. ஒரு முறை புத்தக கண்காட்சியில் பழ நெடுமாறனிடம் என்னை அறிமுக படுத்தி வைத்தார் ''சார்.. நான் இப்பதான் எழுதிட்டு வர்றேன் '' என்று நெளிந்தேன் ..
கடந்த சில காலம் அவர் நோயுற்ற பிறகு பார்க்க .. முடியவில்லை இடது சாரி விஷயங்கள் போன்று எத்தனையோ விஷயங்கள் பரிமாறிக்கொண்டோம் .. பெரிய மேதாவி அவர்... ஆனால் என்னை போன்றவர்களிடமும் சரிசமமாக பேசுவார்... அத்தனை எளிமை .. DOWN TO EARTH PERSONALITY...
அன்னாருக்கு அஞ்சலி
வெள்ளி, 24 மார்ச், 2017
அசோகமித்திரன் ....
என்ன சொல்வது மனுஷ்யபுத்திரன் அஞ்சலியைவிட வேறு வார்த்தை இல்லை நன்றி மனுஷ்யபுத்திரன்
=================================================
ஒரு சிறிய ஸ்டாம்பின்
பன்புறம் எழுதக்கூடிய அளவு
எவரும் எவரிடமும்
திரும்ப வர முடியாத அளவு
அவ்வவு சிறியதுதான்
இந்த வாழ்க்கை எனில்
சிறிய அன்பும்
சிறிய வருத்தங்களும்
சிறிய திருட்டுகளும்
நமக்குப்
போதும்தானே..(மனுஷ்யபுத்திரன்)"
லேபிள்கள்:
அசோகமித்திரன்
,
அஞ்சலி
ஞாயிறு, 11 டிசம்பர், 2016
ஜெ ஜெ சில குறிப்புகள்.....
சற்று காலதாமதமாக எழுதுவதால் இந்தத் தலைப்பு உட்பட அனைத்தும் எழுதப்பட்டுவிட்டது.. ஜெ யைப் பற்றி பல பேட்டிகள் கட்டுரைகள் காட்சி ஊடகங்கள் சமூக வலைத் தளங்கள் என்று எழுதிக் குவிக்கப்பட்டுள்ளது.. அதில் முற்போக்கு பிற்போக்கு சாதியவாதம் மதவாதக் கருத்துக்கள் இடது சாரி பார்வை என்று கொட்டிக் கிடக்கிறது
இவற்றில் எது உண்மை ... வழக்கப்படி காலம் பதில் கூறும்...
என்னைப் பொருத்தவரை முதலில் ஜெ இறந்தார் என்பதையே நம்ப முடியவில்லை.. கடந்த ஆகஸ்ட் மாதம்கூட அவர் பேட்டியை பார்க்க நேர்ந்தது... உடல் ரீதியாக எந்த வித கோளாறு இருந்ததாக தெரியவில்லை.. அப்படி ஒரு தகவலும் இருப்பதாகவும் தெரியவில்லை....
பொதுவாகவே பெண் என்பதாலும் அவர் சுபாவத்தாலும் அவரைப் பற்றிய எந்த வித செய்திகள் வருவதை விரும்பதாக நபர் தான் அவர் என்பது தற்போது புரிகிறது.. 75 நாட்கள் சிகிச்சை பெற என்ன காரணம் என்பது பற்றி கௌதமி கூட கேள்விகள் எழுப்பும் அலங்கோலம் நடைபெறுகிறது..
பொதுவாகவே பெண் என்பதாலும் அவர் சுபாவத்தாலும் அவரைப் பற்றிய எந்த வித செய்திகள் வருவதை விரும்பதாக நபர் தான் அவர் என்பது தற்போது புரிகிறது.. 75 நாட்கள் சிகிச்சை பெற என்ன காரணம் என்பது பற்றி கௌதமி கூட கேள்விகள் எழுப்பும் அலங்கோலம் நடைபெறுகிறது..
உண்மையில் அப்போலோ நிர்வாகம் ரிச்சர்ட் பேலே போன்றவர்கள் பொய்கள் கூற என்ன அவசியம் .. அவர்களை நம்ப மாட்டேன் என்பதும் ஏற்றக் கொள்ள மாட்டேன் என்பதும் புரியவில்லை.. சி ஆர் சரஸ்வதி கூறியபடி ஜெயலலிதா தன்னைப் பற்றியோ தன் உடல்நிலை பற்றியோ பிறர் தெரிந்து கொள்ள விருப்பப்பட்டிருக்க மாட்டார்.. சி ஆர் சரஸ்வதி சொல்வதில் நியாயம் இருப்பதைப் போலவே தோன்றுகிறது... ஆனால் அரசியல் என்று வந்துவிட்டால் எதில் வேண்டுமானாலும் அரசியல் செய்யலாம்தானே..
மற்றபடி ஜெ என்றதும் நினைவுக்கு வருவது... அதிகாரம்.. போலீஸ் ... இதுதான் அவர் ஆட்சி முறை...
ஆனால் பெண்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு கணிசமாக உள்ளது என்பதை மறுக்க முடியாது.. அதன் காரணம் என்ன உளவியல் என்பது ஆராயப்பட வேண்டும்.. சாதாரண சாமானிய மக்கள் ஜெ மேல் அதீத பாசம் வைத்திருப்பதும் என்ன வித உளவியல் என்பது புரியவில்லை... இத்தனைக்கும் அவர் ஏழைகளின் தலைவர் என்பதை அதிமுக வேண்டுமானாலும் சொல்லலாம்... அவற்றில் சற்றும் உண்மையில்லை..
ஜெ யின் வாழ்க்கை என்பது BORN WITH SILVER SPOON OR EVEN GOLDEN SPOON என்றுதான் சொல்ல வேண்டும்.. அவரே சட்டசபையில் அப்படி சொன்னதாக நினைவு ... ஏழைப் பங்காளன் ஏழைகளின் ராபின்வுட் என்பதெல்லாம் தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்வதுதான். சற்று நகைச்சுவையாக வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்..
அவரின் முதல் ஐந்தாண்டு கால ஆட்சியில்தான் சிதம்பரம் பத்மினி பாலியில் கொடுமை வாச்சாத்தி கொடுமை போலீஸ் கெடுபிடி போன்றவை நடந்தன.. ஆனால் அவற்றை பற்றி அவர் ஏதும் கூறியதாகத் தெரியவில்லை.. மாறாக இவற்றையெல்லாம் கண்டு கொள்ளத் தேவையில்லை என்றே கூறியிருந்தார்.. நீதியரசர் லட்சுமணன் மகன் மேல் வழக்கு பதிவு செய்ய அவர் ஜெக்கு எதிரான வழக்கை எடுக்கவே மறுத்தார்
அவரின் அடுத்த ஐந்தாண்டு ஆட்சியில் 1 லட்சம் அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ் மற்றும் சாலைப் பணியாளர் வேலையிழப்பும் நடந்தன.. செரினா என்கிற பெண்ணின் மேல் கஞ்சா வழக்கு போன்றவை அவர் ஆட்சியில் இல்லாத போதும் மனதை பதைபதைக்க வைக்கும் தர்மபுரி பஸ் எரிப்புக் கொடுமை சகிக்க முடியாமல் நடந்தது
மூன்றாவது முறை ஆட்சியின் போது கமலின் விஸ்வரூபம் படத்திற்கு தடை விஜய்யின் தலைவா படத்திற்கும் பிரச்சனை போன்றவை நடந்தன
அதே சமயம் ஜெயந்திரன் வழக்கு கலைஞரே தயங்கும் ராஜீவ் கொலைக் குற்றவாளிக்கு ஆதரவான விடுதலை சட்டசபை தீர்மானம்போன்றவை கணக்கிலெடுக்க வேண்டியுள்ளது..
ஆகச் சிறந்த ஆட்சி என்று சொல்ல முடியவில்லை என்றாலும் அவரின் சமீப கால ஆட்சியில் சற்றே mend ஆகியிருந்ததாகவே தெரிந்தது.. அவரின் மரணம் எதிர்பாராதது தீடீரென்று நிகழ்ந்துள்ளது..
எம்ஜியாரால் அரசியலில் அறிமுகப்படுத்தப்படும் முன்பு ஒருவட இந்திய பத்திரிகை ”சான்ஸ் இல்லாத நடிகை” என்று கேலி பேசியிருந்தது.. அதைப் பற்றி அவரே கைப்பட எழுதியிருந்த கடிதத்தில் தான் ராணி போல் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்...
ஆக அவர் கூற்றின்படி
அவர் ராணியாகவே வாழ்ந்தார் ராணியாகவே மறைந்தார்...
புதன், 23 நவம்பர், 2016
ஞாயிறு, 11 அக்டோபர், 2015
பிறவிக் கலைஞர்
எத்தனையோ கலைஞர்களைப் பார்த்தாலும் ஒரு சிலர் பிறவிக் கலைஞராகத் திகழ்வார்கள்....
அந்த வகையில் மனோரமா ஒருவர்....
அன்னாருக்கு அஞ்சலிகள்.....
வியாழன், 30 ஜூலை, 2015
அப்துல் கலாம்...
கடையடைப்பு செய்யச் சொல்லி எவரும் வற்புறுத்தவில்லை....ஆனால் பெரும்பான்மை கடைகள் மூடப்பட்டிருந்தன.....மக்கள் நடமாட்டம் நகரில் காணப் படவில்லை....ஒரு “பந்தைப்“ போல தெருக்கள் காட்சியளித்தது இன்று....
படித்தவர்கள் மட்டுமல்ல பாமரர்களும்கூட உண்மையில் வருந்திய ஒரே இழப்பு....
ஆட்டோ ஓட்டுனர்கள, கூலித் தொழிலாளிகள் முதல் மாணவர்கள் அரசு தனியார் ஊழியர்கள் அனைவரும் தன்னெழுச்சியாக எந்த அரசும் கேட்டுக் கொள்ளாமல் அஞ்சலிக் கூட்டம் செலுத்துகிறார்கள்... போஸ்டர் ஒட்டுகிறார்கள் ப்ளக்ஸ் பேனர்கள் வைக்கிறார்கள்...
ஆக மொத்தம் மக்கள் ஒரு தன்னெழுச்சியாக நாடெங்கும் திரண்டார்கள்..
இந்த மகா மனிதனுக்கு...
வரலாற்றில் மகாத்மா காந்திக்குப் பிறகு உண்மையில் மக்கள் அஞ்சலி நடந்தது இன்றுதான்...
அப்துல் கலாம்.... வாழ்க நீ எம்மான்....
என்றும் உன் புகழ் நீடித்து நிலைத்து நிற்கும்....
லேபிள்கள்:
அஞ்சலி
,
அப்துல் கலாம்
செவ்வாய், 14 ஜூலை, 2015
இசைத் தேன்.....
காதில் தேனைப் பாய்ச்சியவர்......
கண்களில் நீரைப் பாய்ச்சிவிட்டார்......
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)
