நாேய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாேய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

கிரெளஞ்ச வதம்..

எனக்குத் தெரிந்த இரு உறவினர்கள் புற்றுநோய்க்கு ஆட்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். அருகிலிருந்து அந்நோயின் கொடுமையை  அவ்விருவர் அவதிப்படுவதைப் பார்த்து வந்தேன்..

நமது சினிமாவில் காட்டப்பட்டதைப் போல இல்லை இந்நோய்.
வேறு வகைப்பட்டது.  குரூரமானது. இரக்கமற்றது.  மரண தண்டனையை விடக் கொடுமையானது என்பதே      நான் அறிந்து கொண்ட உண்மை.

புராணக் கதைகளில் வருகின்ற சபிக்கப்பட்டவர்களைப் போல பாதிக்கப்பட்டோரை மரணபயம் காட்டி அவர்கள் கம்பீரத்தைக் காலி செய்து பின்னர் காய்ந்த சருகுகளைப் போல் அடித்து துவம்சம் செய்து கதையை முடிக்கும் அவலத்தை பார்ப்பதே ஒரு கொடுமை.

இவற்றைப் பார்க்க நேரும்போது கடவுள் உண்டா இல்லையா என சந்தேகம் வருகிறது என பாதிக்கப்பட்டவர்கள் அரற்றும் போது யாரிடமும் அதற்கு பதிலில்லை.

கீமோதெரபி தான் இதற்கான மருந்து என்கிறார்கள். அதே சமயம் அந்த மருந்துதான்  நோயாளியை உருக்குலைக்க வைக்கிறது என்கிறார்கள்.

எது எப்படியோ இதற்கான சரியான மருந்தை கண்டுபிடிப்பவர் உண்மையில் அந்தக் கடவுளர்களை விட மேலானவர்.

எனது இரண்டு உறவினர்கள் பெருங்கொடுமையை அனுபவித்து உயிர் துறந்ததைப் பார்க்கும் போது அவர்கள் செய்த எந்தக் குற்றத்திற்கு இந்த தண்டனை என நினைக்கத் தோன்றுகிறது ...

இது இயற்கையின் ஒரு கிரெளஞ்சவதமில்லாது வேறு   என்ன...?