பிஜேபி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிஜேபி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 20 மே, 2019

கருத்துக்கணிப்பு....

எல்லோரும் கருத்துக்கணிப்பு சொல்லிவிட்டார்கள்...
அடியேன் மட்டும் சொல்லாமல் விட விரும்பவில்லை ....

பல ஆண்டுகளாய் அரசியலை பார்த்து வருவதாலும், காய்தல் உவத்தல் இன்றி பேச வேண்டும் என்பதாலும்  , என் சிற்றறிவுக்கு எட்டிய வரை :-

பிஜேபி  200+ என்றும்
காங்கிரஸ் 150+என்றும்
கணிக்கிறேன்..

 இது சரி என்றால் அடியேன் சிறந்த கணிப்பளான் என்று எனக்கு நானே பட்டம் கொடுத்துக்கொள்கிறேன்...

 தவறென்றால் ....

அடியேன் இன்னும் அரசியலை ஆழ்ந்து பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொள்கிறேன் 

சனி, 21 பிப்ரவரி, 2015

குழம்பிய குட்டையில்......

கடந்த வருடம் டிசம்பர் 31 அன்று ஒரு சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று
பாகிஸ்தான் கடல் எல்லையிலிருந்து இந்திய எல்லையை கடந்து வந்தது,, குஜராத்தை நெருங்குவதைப் போலத் தோன்றிய அந்தப் படகு நடக்கடலில் எரிந்து போய் மூழ்கியது..

வெள்ளி, 14 மார்ச், 2014

கேயாஸ் தியரி...

கேயாஸ் தியரி என்பதை அடிப்படையாகக் கொண்டு கமல்   'தசாவதாரம்' படம் எடுத்திருப்பார்... ஏன் அத்தனை செலவு பண்ணுவானேன்... நமது நாட்டு நடப்புகளே பெரும் கேயாஸ் தியரியாக இருக்கிறது..

வியாழன், 6 மார்ச், 2014

பத்து அப்துல்கலாம்களும் பதினொரு கேப்டன்களும்

காலையில்தான் பார்த்தேன்... தினமலர் இணையதளத்தில்... ஜெ. கம்யூ கட்சிகள் பேச்சு வார்த்தை தோல்வி என்று...

சில தினங்களாக தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை  இழுபறியாக சென்று கொண்டிருந்த போதே ஏதோ இருக்கிறது என்பது சாதாரண பார்வையாளர்களான எனக்கே தோன்றியது.. இறுதியில் பூனைக் குட்டி வெளியே வந்துவிட்டது...

அம்மா நாற்பதும் நமதே என்று தமிழகமெங்கும் சங்கநாதம் செய்து வருகிறார்.. அவருக்கு பல கணக்குகள் இருக்கிறது.. நாளை பிஜேபிக்கு நாம் ஆதரளவளிக்க நேர்ந்தால் மூன்றாம் அணி அமைந்தால் என பல கணக்குகள்.. அதனால் அவ்வாறு நடந்து கொள்கிறார்..  ஆனால் சில நண்பர்கள் பேசும் போது ”என்ன துணிச்சல் பாருங்க...” ”கூட்டணியை மதிக்க தெரியல..” ”கலைஞர் கிட்ட இருந்தா இப்படி ஆகுமா..” என எத்தனை அங்கலாய்ப்புகள்...

எல்லாம் சரிதான்... ஆனால் தமிழக மககள் ஏகோபித்த ஆதரவு ஜெ.க்கு இருக்கிறதா இல்லையா...? என்ற கேள்விக்கு சரியான விடையை யாரும் தருவதில்லை... கலைஞர் என்ன செய்தாலும் எப்படி பேசினாலும் அவருக்கு
ஆதரவு என்பது நூறு அல்லது தனிப் பெரும்பான்மைக்கு சற்று அருகே என்றுதானே வாக்களிக்கிறார்கள்.. ஆனால் அம்மாவிற்கு...? தோற்றால் சுத்தமாக ஜெயித்தால் பெரும்பான்மைக்கு மேலே படு மிருக பலத்துடன் தானே தமிழக மக்கள் வாக்களிக்கிறார்கள்...

ஏன் கம்யூனிஸ்டுகள் இத்தனையாண்டு காலம் அரசியல் செய்கிறார்களே.. தமிழகத்தில் ஒரு இரு தொகுதிகளில் மட்டுமே ஜெயிக்க முடிகிறது (தனியாக நின்றால்)  என்கிற கேள்விக்கு மனசாட்சியுடன் பதில் சொல்லட்டுமே..சரியோ தவறோ ஒரு ஜனநாயக சிஸ்டம் நம்மிடம் இருக்கிறது... அதில் சில குறைபாடுகள் இருக்கிறது...  பத்து அப்துல் கலாம்கள் எடுக்கும் முடிவை பதினொரு கேப்டன்கள் மாற்றலாம் என்பதுதான்.... 

அது ஒரு பெரும் குறைதான்...

அதற்கு ஒரு வழியை கண்டுபிடிக்க வேண்டும..

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

எந்தப் பக்கம்...?

சமூக அரசியல் ஆர்வலர்கள்/அறிவுஜீவிகள் முதல் டிவி சீரியல்களில் முழ்கும் சராசரி நபர்கள் வரை (பெண்கள் என்று சொல்ல விரும்பவில்லை.. காரணம் டிவிசீரியல் கலாச்சாரத்தில்  ஆண் பெண் வித்தியாசமில்லை) நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் பற்றி பேசுகிறார்கள்