தமிழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 31 மார்ச், 2018

A FEW GOOD MEN...

பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சனை தற்போது பிஜேபி தீர்த்துவிடும் என முதலமைச்சர் நம்பினார்...

 இன்னும் ஒரு நாள் காத்திருக்கலாம் என்றார்....

 கடைசி  குடிமகனுக்கும்  தெரியும் கர்நாடக தேர்தல் இன்னமும் முடியவில்லை என்று ....

இதில் எல்லா கட்சியும் ஒருவரையொருவர் சாடி கொள்வதும்  குற்றம் சாட்டுவதும் கேலி கூத்து ....இந்த பிரச்சனைக்கு  அனைத்து  தரப்பும் காரணம் ...

கர்நாடகத்தின்  அடாவடிக்கு எந்த நியாயமும்  தார்மிகமும்  இல்லை ...இருந்தும் தமிழர்கள் அமைதியாகத்தான் இருக்கிறார்கள் ...

மே மாதம் கர்நாடக தேர்தல் முடிந்து விடும்... காவேரி மேலாண்மை அமையுமா என்பதை நாட்டின் கொஞ்ச நஞ்ச நியாயஸ்தர்கள் ஜனநாயகவாதிகள் அவர்கள் எந்த மாநிலத்தில் எந்த உலகத்தில்  இருந்தாலும் குரல் தரட்டும் ...

வெள்ளி, 29 செப்டம்பர், 2017

இது ஒரு கால கட்டம்....

கமல்ஹாசனின்  திடீர்  பேயாட்டம் காரணம் விளங்கவில்லைதான் ….

“நான் ஹிந்தி எதிர்ப்பு காலத்திலே அரசியலுக்கு வந்து விட்டேன்…” என்பதும் ஜெ உயிருடன் இருந்த போது ஏன் பேச வில்லை என்பதற்கு கமல் கூறும் விளக்கம் எல்லாம் காதில் பூ தான் ….

திரைப்படத்திலேயே தான் இன்னமும் பல முயற்சிகள் செய்யவில்லை என்கிறார் …. அதை ஏன் அம்போ என்று விடவேண்டும்  என்பது புரியாத புதிர்தான்….  பலர் பல காரணங்களை சொல்கிறார்கள்….. ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு முன் தான் வந்துவிட வேண்டும் என்பதுதான்  காரணம் என்று பல அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்…. இருக்கலாம் …..

ஆனால் இந்த திடீர் பிரவேசம் என்பது ஜல்லிக்கட்டால் வந்த வினை என்றே கூறத்தோன்றுகிறது…. சில நேரத்தில் ஒரு பெரிய வேலை நிறுத்தமோ பெரும் போராட்டமோ நடந்தால் அதன் உணர்ச்சி வேகத்தில் சில திடீர் தலைவர்கள் தோன்றுவார்கள்….. அதை போல ஜல்லிக்கட்டு போராட்டத்தினால் ஈர்க்கப்பட்டிருக்கலாம்….. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அந்த இளைஞர்கள்  அரசியல் சார்பற்றவராக காட்டிக்கொள்ள விரும்பினார்கள்…. மேலும் மத சாதி அடையாளத்தைக்கூட துறந்தவர்களாக இருந்தார்கள் என்பதை பார்க்கமுடிந்தது….. ஸ்டாலின் கூட அங்கு வருவதை இளைஞர்கள் விரும்பவில்லை..

  "இது APOLITICALதனம் .. எந்த திட்டம் கொள்கை இல்லை.." என்று வழமையான IDEALISTகள்  கூக்குரலிட்டார்கள் .. ஆனால் அப்படிதான் அது நடந்தது… ஆனால் இந்த லட்சியவாதிகள் நிகழ்ச்சி நிரலை இளைஞர்கள் பின்பற்றவே இல்லை…… அவர்கள் தங்கள் குறிக்கோளுடன் இருந்தார்கள்.. இது சற்று வியப்பாகவே இருந்தது உண்மைதான்..

இது கமலை உசுப்பேற்றிருக்கலாம்

சோவியத் காலகட்டம் ,  இந்திய சுதந்திர போராட்டகாலம் போன்றவை பல தலைவர்கள் உருவாக காரணமாக இருந்தது….  அது ஒரு PHASE ….. IDEALIST PHASE….. ஆனால் தற்போது தலைவர்கள் இல்லாமல் மக்கள் கூடுகிறார்கள் …..  எந்த தலைவரையும் நம்ப முடியவில்லை என்பது ஒரு காரணம்…. அந்தளவு மக்கள் வெறுப்புற்று இருக்கிறார்கள்… இதை கமல் பயன்படுத்த நினைக்கலாம் என்று தோன்றுகிறது…

ஜெயித்தலாலும் ஜெயிக்கலாம்… ஜெ- யை  மக்கள் ஏற்கவில்லையா அதை போல கமல்….

ஆண்டவா…



புதன், 3 மே, 2017

மலரும் தாமரை ...?


அதிமுக வில் நடக்கும் கூத்தை பார்த்தால், CHARISMATIC தலைவர் இல்லாத வெறும் தனி நபர் கவர்ச்சியை மட்டும் நம்பி உள்ள அரசியல்   எந்த லக்ஷணத்தில் இருக்கும் என்பது தெரிகிறது

நீட் தேர்வு நிலைப்பாடின்மை.... மணல் கொள்ளை..... டாஸ்மாக் பிரச்சனை....... பஞ்சாயத்து அப்ரூவ்ட் நிலங்கள் பதிவு செய்வதில் தமிழக அரசு முறை படுத்தாததால் நீதி மன்ற தடை நீடிப்பு இதனால் சாதாரண மக்கள் தங்கள் நிலங்களை விற்க முடியாமல் திண்டாடுவது... RERA சட்டம் அமுலுக்கு வந்தாலும் அதற்கான ஆணையம் தமிழகத்தில் மட்டும் அமைக்காத அவலம் ... இதனால் மக்கள் படும் அவதி....

இவர்கள் இரு அணிகள் பஞ்சாயத்துக்கே பெரும் நேரம் செலவிட படுவதால் ஒரு குழப்பமான நிலையே திகழ்கிறது ஒட்டு மொத்தமாக நாம் இதற்கு பிஜேபியை குறை குறை முடியாது ...

தற்போது தி மு க மட்டுமே ஸ்டாலின் தலைமையில் நிமிர்ந்து நிற்கிறது... அடுத்ததாக உள்ள கட்சிகள் எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது..... விஜயகாந்த் தலைமை எந்த முன்னேற்றமும் காட்டவில்லை..... ராமதாஸ் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டுமே...... வைகோ ஒரு வேடிக்கையாக  முடங்கிப்போனது...... கம்யூனிஸ்ட் அடுத்த ஜென்மத்தில்தான் தலை தூக்குவார்கள்......    

 ஆக  பிஜேபி என்னை பொறுத்தவரை தமிழகத்தில் காத்திருக்கும் ஒரு சக்தியாகத்தான் பார்க்க முடிகிறது ..... தமிழகத்தில் பிஜேபி வர முடியாது என்று கூறுபவர்கள் தற்போது புதிய தலை முறை இளைஞர்களை கணக்கில் கொள்ளாமல் பேசுகிறார்கள் என்றே தோன்றுகிறது  .... 60களில் தி மு க அப்படித்தானே இருந்தது   .. அரசியலில் எதுவும்  நடக்கலாம்...  அதனால் தான் நாளை தமிழகத்தில் பெரிய சக்தியாக வர வாய்ப்புண்டு என கருதுகிறேன் ..

திங்கள், 14 ஏப்ரல், 2014

பின்புலம்

rjini and modi-3
ஒருவர் எந்த இடத்தை பின்புலமாக கொள்கிறார்களோ அதாவது சுருங்கச் சொன்னால் எந்த இடத்தில் பிறக்கிறார்களோ அந்த வாசத்துடன்தான் சிந்திகிறார்கள் என்பது உண்மை..