திங்கள், 25 டிசம்பர், 2017

TTV வெற்றியின் காரணம் ...

தினகரனின் வெற்றி பற்றி பல காரணங்கள் எதிர் கட்சிகள் முதல் அரசியல் விமர்சகர்கள் வரை பல தகவல்கள் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்....

 OPS EPS திமுக தன்  வாக்கை TTV   மாற்றியது  என்று கூக்குரலிடுகிறது ....

 திமுகவோ இருபது ருபாய் என்ற ஹவாலா கதை சொல்கிறது... ராஜ் தீப் சர் தேசாய் மத்திய அரசை எதிர்ப்பவர்கள்  தென்இந்தியர்கள்தான்... இதில்  TTVதான் சரியாக எதிர்ப்பவர் என மக்கள் நினைக்கிறார்கள் என்கிறார் ..

மத்திய அரசு இவரை முன் வைத்து மெகா ரைடுகள் நடத்தியபோது   TTV எந்த எதிர்ப்பும்   செய்யாமல் கோ பூஜை செய்து கொண்டிருந்தார் ...இதுதான் அவர் எதிர்பரசியல் ...

இவை அனைத்தும் என்னால் ஏற்க முடியவில்லை ....நான் நினைப்பது இதுதான் ...

தமிழக அரசியல் பற்றி ஜெயமோகன் ஒருமுறை எழுதியிருந்தார் திமுக என்பது அண்ணா காலத்திலேயே வாக்கு வங்கிக்காக M.G.R-ஐ  நம்பி வளர்ந்த கட்சிதான்...  வெகு காலமாக திமுக இருப்பதால் அதற்கென்றே ஒரு வாக்கு வாங்கி வைத்திருக்கிறது... ஆனால்  திமுக எதிர்ப்பு மற்றும் M.G.R ஆதரவு என்கிற வாக்கு வாங்கி தமிழகத்தில் மிக அதிகம்... அது எந்தப்பக்கம் மாறுகிறதோ பிரிகிறதோ  அதை வைத்துதான் ...இங்கு அ திமுக திமுக ஆட்சிகள் நடக்கிறது ....மேலும் திமுக ஒரு போதும் ஆட்சிக்கு வருகின்ற போது  பெரும்பான்மை பெற்று வருவதில்லை என்கிற ரீதியில் எழுதியிருந்தார் ..

அதை நான் ஏற்கிறேன்...

 மேலும் TTVயின் வெற்றி என்பது ஜெ மறைவுக்கு பின் புதிய தலைவரை தேடும் தமிழக மக்கள் மன நிலை என்று நான் பார்க்கிறேன் ....TTVன் வெற்றி என்று நான் பார்க்கவில்லை... மேலும் சில புதிய  இளைஞர்களிடம் தேர்தலுக்கு முன் பேசிக்கொண்டிருந்த பொது அவர்கள் கூறுவது   ''எல்லா பயலும் மோசம் சார்... கமல் வந்தால் நாம் ஓட்டு போடலாம்... அவர் வரலை என்றால் TTVஒரு வாய்ப்பு தரலாமே ..'' என்கிறார்கள் இதை போன்ற விஷயங்கள்தான் மனநிலைதான் ஆர் கே நகர் மக்களை இப்படி வோட்டு போட வைத்திருக்கிறது ....

ஞாயிறு, 3 டிசம்பர், 2017

THE BUSINESS OF LIVING........

இப்படி ஒரு ஆங்கிலத் தலைப்பு தருவதற்கு மன்னிக்கவும்.. அதன் காரணத்தைப் பிறகு சொல்கிறேன்.. வேண்டுமானால் தினசரி வாழும் வாழ்க்கை வியாபாரம் என்று சொல்லலாம்.. வாழ்க்கை என்பது வியாபாரம் என்று கவிஞரே சொல்லியிருக்கிறாரே...

சரி விஷயத்துக்கு வருகிறேன்...

எனது குடும்ப நண்பர் இந்தியாவை மிகவும் நேசிப்பவர். எந்த  காரணம் கொண்டும் நம்நாட்டை குறை சொல்வதை அவர் ஏற்கமாட்டார். அவர் எந்தவித குறிப்பிட்ட அரசியல் கட்சியும் ஆதரிப்பவர் இல்லைதான்.. அது ஒரு வித இந்திய பக்தி..

இந்தியாவில் ஊழல் என்று கூறினால்  எந்த நாட்டில்தான் இல்லை என்பார். அரசியல்வாதியை குறைசொன்னால் வேறு எங்கு ஒழுங்காக இருக்கிறது என்பார்..  ரோடு மோசம் என்றால் “ஆமாம்.. மத்த நாட்ல..“ என்று தொடங்கிவிடுவார்..  எனக்கும் கிட்டத்தட்ட அவர் தேசபக்தியில் பெரும்பான்மை சதவிகிதம் உண்டுதான்..  ஆனால் வேறு சில விஷயங்களைக் கேள்விப்படும் போதும் படிக்கும் போதும் சற்றே நெருடும்..  நாம்  வளர்ந்த நாடுகளான அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் மட்டுமே ஒப்பிட்டுப் பேச முடியும்.. நம்மைவிட மோசமான நிலைமைகள் கொண்டுள்ள மூன்றாம் உலக நாடுகள் ஆப்பிரிக்க நாடுகளை ஒப்பிட்டு பேச முடியாது.  காரணம் நாம் நம்மை விட அதிக மார்க் வாங்கும் மாணவர்களை ஒப்பிட்டு பேசுவது போலத்தான் இதுவும்..

நமது நாட்டு போலீஸ் துறையை பற்றி அரசியல்வாதிகளைப்  பற்றி எத்தனையோ திரைப்படங்கள் வந்துவிட்டன...  புதிதாய் சொல்ல வேண்டியதில்லை..  ஜாஸ் என்கிற பழைய பிரபல திரைப்படம்... அந்தப்படத்தில் ஒரு பெண்மணி சுறாவால் கொல்லப்பட்ட தன் மகளை காக்கத் தவறிய அந்தப் போலீஸ் அதிகாரியின் (Martin Brody) கன்னத்தில் அனைவர் முன்பாக அறைவார்... நம்மால் இங்கு அப்படி நினைத்துக் கூட பார்க்க முடியாது..

மேலே சொல்லப்பட்ட நாடுகளில் குற்றமே இல்லை என்று வாதாட வில்லை.. அதன் அளவு ரீதியாக குணம்சரீதியாக மாறுபட்டவை.. இங்கே சராசரியாக சாதாரண பிரச்சனைகளுக்கே ஊழல் என்று அங்கிருப்பதாகத் தெரியவில்லை.. ஒரு ரேசன் கார்ட் வாங்குவதில் தொடங்கி ஒரு டூவீலர் ரிஜிஸ்ட்ரேஷன் செய்வதுவரை எதிலும்  அனைவற்றையும் சகித்துக் கொள்ளவேண்டியிருக்கிறது..

சாலைகள் பராமரிப்பு மக்களின் கல்வியறிவு  மக்களின் சிவில் அறிவு சட்டப்படி நடக்கும் காவல்துறை விரைவாக நீதி வழங்கும் நீதித்துறை போன்றவை மேலே சொன்ன நாடுகளில் உள்ளதைப் போல நம் நாட்டில் உண்டு என்று மார்த்தட்ட முடியுமா....?  சமீபத்தில் பாரீசுக்கு சென்ற எனது உறவினர் சொன்னார் .. அங்கு  மெயின் சிட்டிப் பகுதியில் க்ரைம் ரேட், ஜீரோ சதவிகிதம் என்று.. இதைத்தானே நாம் நம் நாட்டில்  கனவு காண்கிறோம்..

பொதுவாக அமெரிக்கா அல்லது முன்னேறிய ஐரோப்பிய நாடுகளில் குடிபெயரும் நம்மூர்காரர்கள் இந்தியா திரும்பிவருவது மிக மிகக் குறைவு.. 

சரி இப்போது தலைப்பிற்கு வருவோம்...

சமீபத்தில் முன்னாள் இந்திய தேர்தல் கமிஷனராக இருந்த திரு கோபால்சாமி ஒரு கூட்டத்தில் பேசினார்.  அவருடைய உறவினர் ஒருவர் அமெரிக்காவில் இருப்பதாகவும் அவர் பெற்றோர் பல முறை இந்தியாவிற்கு வரச் சொல்லியும் காலந்தாழ்த்தியதாகவும்  அதனால் திரு கோபால்சாமி அவர்களே ஏன் அப்படி செய்கிறாய் என்று கேட்டதாகவும் அதற்கு அவர் இப்படித்தான் பதிலளித்தாராம். .  . “the business of living is easy there...’’

அது உண்மைதானே...  நாமும் நம் நாட்டில் ஒரு சராசரி வாழ்க்கையை எளிதாக்கிவிட்டால்கூட நம் நாடு சொர்க்கலோகம்தான் எனக் கூறுவேன்..

புதன், 29 நவம்பர், 2017

அன்பு நடமாடும் கலைக்கூடம்...

கந்து வட்டிக்கொடுமை சாதாரண மக்கள் முதல் பெரிய மனிதர்களையும் விட்டுவைக்கவில்லை..

 சாதாரண மனிதர்களுக்கு அவசர தேவைகளுக்கு வங்கிகள் கடன் கொடுக்காது ஆயிரம் நிபந்தனைகள் போடுவார்கள்.  அதனால் அவர்களால் வங்கிகளை அணுக முடிவதில்லை. சினிமா போன்ற கானல் நீர் துறைக்கும் வங்கிகள் கடன் கொடுப்பதில்லை ..

 அதே சமயம் சினிமா பிரபலங்கள் கமல்கள்  முதல் கண்களில் ஆயிரம் கனவுகளுடன் வரும் கடைக்கோடி படைப்பாளியும் தம்மை  நிலை நாட்டிக்கொள்ள இப்படித்தான் கந்தில் மாட்டி தவிக்கிறார்கள்..  கமல் போன்றோர் தன் மார்க்கெட மதிப்பால்  தப்பிவிடுகிறார்... ஆனால் சாதாரணமாக எங்கோ தமிழகத்தின் மூலையிலிருந்து எந்த பின்புலமின்றி கனவுகளுடன் வரும் இளைஞனின் நிலை அவன் கடன் வாங்காமல் எதையும் செய்ய முடியாது.... புதியவனான அவனை நம்பி பெரிய தயாரிப்பாளரும் முதலீடு செய்ய மாட்டார்... பிறகு அவன் கடன் வலையில் சிக்கிக் கொள்கிறான்...

  இந்த இடத்தில் நாம் மெகா கதாநாயகர்கள் வாங்கும் சம்பளத்தை பற்றி பேசாமல் இருக்க முடியாது ஒரு படம் தயாரிக்க 2 கோடி என்றால் இவர்கள் சம்பளம் 50 கோடி என்றாகும் போது ஒரு படம் எடுப்பதே கேலிக்கூத்தாகி விடுகிறது (இதில் 50 கோடியை தாண்டி சம்பளம் வாங்குபவரை பற்றி கேட்கவே வேண்டாம்  ) இறுதியில் இவர்கள் நாயகர்களாக மக்கள் மனதில் வலம் வர இவரை வைத்து சூதாடிய அல்லது தயாரித்தவர்கள் கதி அதோ கதியாகிறது ...

 ஆக  இது ஒரு விஷச் சக்கரம் போல ...

இப்போது நாம் யாரை மட்டும் குறை சொல்வது அன்பை மட்டுமா  ..

வியாழன், 23 நவம்பர், 2017

கடவுள் உண்டா அல்லது இல்லையா…?

எனது 30 வயதில் நாத்திகனாகத்தான் இருந்தேன்..  இறை என்பதே ஒரு ஏமாற்று வேலை என்றுதான் நினைத்திருந்தேன்..  20 வருடங்களுக்குப் பின்னர் அப்படி ஒரேயடியாக சொல்ல முடியுமா என்று  தோன்றுகிறது.. சில விஷயங்களுக்கு பதில் இல்லை என்பதுதான் அதற்கு காரணம் 

எங்கோ படித்த ஞாபகம்.. கடவுள் உண்டு என்பதற்கும் ஆதாரம் இல்லை - இல்லை என்பதற்கும் ஆதாரம் இல்லை என்று…

அது ஒரு புறம் இருக்கட்டும்…. ஆனால் இத்தனை பெரிய விஷயத்தை சாதாரணமாக ஒரு சீன படைப்பாளி ஆங்கில திரைப்படத்தில் - நமது ஆன்மாவை தொடும் அதிசயத்தை  ஒரு காட்சியில் காட்டுகிறார் 

… உங்கள் அனைவருக்கும் தெரிந்த திரைப்படம்தான்…  பலர் இதற்கு விமர்சனம் எழுதி அலுத்திருக்கலாம் 

 .....“THE LIFE OF PI” என்கிற ஆங்கிலப் படம்…   MOVIES NOW, HBO, STAR MOVIES போன்ற சாட்டிலைட் டிவியில் எத்தனை முறைகள் போட்டாலும் பார்க்கத் தோன்றுகிறது......மக்களால் மீண்டும் மீண்டும் விரும்பப்படுகிறது ... ஒரு சீனர் இயக்கிய  ஆங்கிலப் படம்..    .நடித்தவர்கள் பெரும்பான்மை இந்திய நடிகர்கள் என்பது அதன் தனிச் சிறப்பில் ஒன்று .. தொடங்குவதும் நமது தமிழ்க்  கலாச்சாரத்திலிருந்து என்பது எத்தனை அழகு.... அந்த படமும் அதன் கதையும் அனைவர்க்கும் தெரிந்தது தான் ..    விபத்து நடந்த கப்பலிருந்து தப்பி ஒரு படகில் , பயங்கரமான வங்கப்புலியுடன் 227 நாட்கள் பசிபிக் கடலில் பயணித்து கரையடைவதுதான் கதை .. மருத்துவ மனையில் படுத்திருக்கும் PISCINE PATEL என்கிற பையை (கதாநாயகன்) வந்து பார்க்கும் அந்த ஜப்பானிய இன்சூரன்ஸ்காரர்களை போல் அந்த கதையை நம்மாலும் நம்ப முடியவில்லை ..  "நம்பும்படியாக சொல்லுங்கள்..."' என்று அந்த ஜப்பானிய இன்சூரன்ஸ்காரர்கள் கேட்கிறார்கள் .. அவர்களுக்காக மிருகங்களுக்கு பதிலாக மனிதர்கள் என்று அதே கதையை மாற்றி  சொல்கிறான் பை .. 

இறுதி காட்சியில் அவனுடைய   கதையை கேட்க வந்த அந்த நாத்திகரான வெள்ளைக்கார எழுத்தாளரிடம் பை சொல்கிறான் "நான் உங்களிடம் இரண்டு கதை சொன்னேன் அதில் எதை தேர்வு செய்கிறீர்கள்...'" என்கிறான் ..அவர் அந்த வங்கப்புலியுடன் படகில் 227 நாட்கள் பயணித்த இந்த "பை'" யின் கதை என்கிறார்... அதற்கு "பை'" அப்போது "அந்த கதை கடவுளுக்கு நெருக்கமானது..." என்கிறான்..

 அந்த நாத்திக எழுத்தாளர் சற்று கண்ணை மூடி யோசிக்கிறார் .  அந்தக் காட்சி ...  அந்தக் காட்சி ....LOVELY  என்று கத்த தோன்றுகிறது ....அந்த சில நிமிடம் என்  உடலில் பல வோல்ட் மின்சாரம் பாய்வதாக உணர்தேன்... கடவுள் உண்டோ இல்லையோ ஆனால் நம்மால் நம்ம முடியாத விஷயங்கள் நடக்கும் பொது தெய்வாதீனம் என்றுதான் கடக்க நேரிடுகிறது  ..

அந்த உணர்வை ஒரு படத்தில் ஒரு காட்சியில் உணர்த்திய  அந்த ஆங் லீ என்கிற சீன  இயக்குனரை வணங்கதோன்றுகிறது..

திங்கள், 13 நவம்பர், 2017

அறத்தாறு இதுவென வேண்டா ...அறம் திரைப்படம் ...

வழக்கமான முட்டாள்தனமான சண்டைக்காட்சிகள் இல்லை...

 பைசா பிரயோஜனமில்லா பன்ச் டயலாக் இல்லை.....

 லூசுத்தனமான காதல் காட்சிகள் இல்லை ....


Image result for ARAM STILLS




இருந்தாலும் இந்தனை இல்லைகளை  தாண்டி ஒரு படம் உருவாக்கமுடியும்.. அதுவும் விறுவிறுப்பு குறையாமல் செய்திப்படமாக ஆகாமல் அதில் சமூக பார்வை புகுத்த முடியும் என்பதை நிரூபித்த கோபி நயினாருக்கு வாழ்த்துக்கள் ...

வெல்லட்டும் உமது பணி ...

செவ்வாய், 31 அக்டோபர், 2017

மேலாண்மை பொன்னுச்சாமி...

மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் மறைவு அதிர்ச்சி..
 அன்னாரை நான் சந்தித்தது இலக்கிய சிந்தனை ஆண்டு விழாவில்..

Image result for MELANMAI PONNUSAMY PICTURE

 அவர் சிறுகதை முதல் பரிசு பெற்றது.   அந்த தொகுப்பில் எனது சிறுகதை ஒன்று இடம் பெற்றது..  அப்போது அவரை சந்திக்கும் வாய்ப்பு..   முதல் சந்திப்புக்கு பிறகு என் பெயரை நினைவு கொண்டு அடிக்கடி இவர்தான் பத்ரி என்று பிறரிடம் அறிமுகம் செய்தார் . இத்தனை பெரிய எழுத்தாளர் DOWN TO EARTH PERSONALITY ஆக இருப்பது  கண்டு வியந்தேன். 

 அவர் படைப்பின் பெரும் பகுதியை படித்திருக்கிறேன். அன்னார் மறைவு ஒரு நெருங்கிய உறவினர் மறைவைபோல் உணர்கிறேன் ..

 அன்னாருக்கு அஞ்சலி

செவ்வாய், 24 அக்டோபர், 2017

முதலில் இதை தடுப்போம் ...

கந்து வட்டிக்  கொடுமையை என்ன வென்று சொல்வது...?

எரிந்து போன அந்த குழந்தைகளை பார்க்கவே ஐயோவென்று இருக்கிறது.. 

ரத்தத்தை அட்டையை விட அதிகமாக உறிஞ்சும் இந்தக் கந்து வட்டியை அதை வசூலிக்கும் மனிதமே இல்லாத இரண்டு கால்  ஜந்துக்களை  மனிதர்கள் வகையிலே சேர்க்க கூடாது..

 இந்த நாயினும் இழிவானவர்கள் கட்சி பேதம் இல்லாது விஷச்செடி போல் பரவி இருக்கிறார்கள் ...

 அனைத்து சட்டங்களையும் தன்  வசம் வைத்துக்கொண்டு ஆட்டம் போடுகிறார்கள் ...

எத்தனை சட்டங்கள் போட்டாலும் அது இவர்களை ஒன்றும் செய்வதில்லை..

முதலில் மேலும் ஒரு ஏழை மரணிக்கும் முன் தடுக்கவேண்டியது இந்தக் கந்துகொடுமையைத்தான் ,,, 

ஞாயிறு, 15 அக்டோபர், 2017

தமிழும், திராவிடமும்....

இந்தத் தலைப்பே சுவாரசியமானது விவகாரமானது விவாதத்திற்குரியதுதான்.. இது முன்பிருந்த சமாச்சாரமானாலும் தற்போது அதிகம் விவாததிற்குள்ளாகியிருக்கிறது.. அதற்கு இணைய உலகம் ஒரு காரணமாக இருக்கலாம்.. 

திராவிடர்கள்தான் தமிழர்கள் என்று ஒரு புறம்.. அதெப்படி மலையாளியும் கன்னடனும் தெலுங்கனும் தமிழை ஏற்கவே மறுக்கிறான் அவனும் திராவிடன்தானே என்று மறு புறம். தமிழிலிருந்து தோன்றிய மொழிகள்தான் மற்ற மொழிகள் என்பதை பிற மாநிலத்தவன் ஏற்க மாட்டான் ஆகவே அவன் திராவிடத்தை ஏற்கவில்லை என்று ஒருவரும் அப்படி ஏற்கவில்லை என்றால் நாம் மட்டும் அதை ஏன் தலையில் ஏற்றிச் சுமக்க வேண்டும் என்று எதிர்வாதமும் மாறி மாறி சுழன்றடிக்கிறது..

எனக்குத் தெரிந்த வகையில் பார்க்கும் போது, திராவிடம் என்கிற சொல்லாடலே பழந்தமிழில் புழக்கத்தில் இல்லாத சொல்லாகத்தான் இருக்கிறது.. காரணம் திருக்குறளில் 1330 குறளிலும் திராவிடம் என்கிற சொல்லே இல்லை.  தொல்காப்பியம் ஆகட்டும் கம்பராமாயணம் சிலப்பதிகாரம் ஆகிய தமிழ்க் காவியங்களிலும் திராவிடம் என்கிற சொல்லாடலே இல்லை.  காரணம் அப்படி ஒரு குறியீடு இல்லை என்றே நாம் கொள்ளவேண்டும். ( ஒரு வேளை அதனால்தான் பெரியார் இவைகளை குப்பைகள் என்றே சொன்னார் போலும்).   சௌத் இண்டியன் லாங்வேஜ் அல்லது திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்  என்பது ராபர்ட் கால்டுவெல் என்பவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு நூலில்தான் அப்படி ஒரு சொல்லாடல் இருக்கிறது என்பதால் அதையே திராவிடக் கட்சிகள் எடுத்துக் கொண்டன என்கிறார் பெ மணியரசன் அவர்கள். 

ஆனால் ஆதிசங்கரர் எழுதிய சௌந்தர்யலஹரியின் ஒரு ஸ்லோகத்தில் (பாடல் 75) திராவிட சிசு என்று ஒரு சொல்லாடல் பார்க்க முடிகிறது.  ஆதிசங்கரர் வாழ்ந்த காலகட்டம் கிபி 4 அல்லது 7 நூற்றாண்டு.  ஆக அப்போது அந்தச் சொல்லாடல் இருக்கலாம்.. ஆனால் அதற்குப் பின்னர் அது வழக்கத்தில் வரவில்லை.  மேலும் திராவிட சிசு என்று ஆதிசங்கரர் தன்னை வர்ணித்தாரா இல்லை திருஞானசம்பந்தரை வர்ணித்தாரா என்பதே குழப்பமாக உள்ளது.. ஆனால் இருவரும் பிராமணர்கள்தான்..  ஏன் பிராமணர்கள் என்கிறேன் என்றால் திராவிடர்கள் பிராமணர்கள் இல்லை என்றே தற்போது அறியப்படுகிறது.. அதற்கு மாறாக ஆதிசங்கரர் குறிப்பிடுகிறாரே...

ஆனால் தமிழ் நாட்டில் திராவிட கட்சிகள்,  தமிழர் முன்னேற்றக் கழகம் என்றோ தமிழர் கழகம் என்றோ தமது கட்சிகளுக்குப் பெயர் வைத்தால்  தமிழைத் தாய் மொழியாக கொண்ட பிராமணர்கள் உள்ளே வந்துவிடுவார்கள் என்கிற உயரிய  (?) நோக்கத்துடன் அதைத் தவிர்த்து பெயரிட்டதாக சொல்லப்படுகிறது.  சரி தற்போது சீமான் பாரதிராஜா போன்றோர் வேற்று மொழிகாரர்களை ஏற்க மாட்டேன் என்கிற போது திராவிடக் கட்சிகள் அதை எதிர்க்கின்றன.. (பாரதிராஜா ரஜினியை மட்டுமல்ல வைகோவைக் கூட தமிழர் தலைவர் என்று ஏற்க மாட்டேன் என்று ஒரு போடு போட்டார்).  இந்த விஷயங்கள் திராவிடக் கட்சிகளை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கிறது.   காரணம் பெரியார் டிஎம் நாயர்  சர் பிடிதியாராயர் போன்றவர்களை திராவிட கட்சிகள் கைவிடமுடியாது அவர்கள்தான் ஜஸ்டிஸ் கட்சியின் தோற்றுவாயாக இருந்தவர்கள்..  அவர்கள் இவாளை ஒதுக்கினார்கள் அதுவே தற்போது வேறுவிதமாக தாக்கி இவர்களையே ஒதுக்கும் சூழல் வருகிறது.  ஆகவே அலறுகிறார்கள். விடுதலைசிறுத்தைகள் ரவிகுமார் ஒரு படி மேலே சென்று சென்று தற்போது ஆரியர்கள் என்பதே முட்டாள்தனமானது என்கிறார்.  காரணம் சென்ற நூற்றாண்டில் பேசியது தற்போதைய 2017 நடைமுறைக்கு  DNA TEST செய்து பார்த்தால் யாருக்கும்  பொருந்தவே பொருந்தாது என்கிறார்.   

ஆனால் காய்தல் உவத்தல் இன்றி பார்த்தால்....

தமிழர்களை, தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள்  (அந்த உணர்வுள்ளர்கள்) ஆட்சி செய்ய வேண்டும் என்பது ஒதுக்கப்பட வேண்டிய விஷயமன்று.  அது ஒரு ஜனநாயகக் கோரிக்கைதான்.  அது ஒரு தேசிய இன அடையாமாகவே பார்க்கலாம் ..  அது காந்திய வழியில் மட்டுமே அடைய வேண்டிய ஒன்றுதான்...

அப்படித்தான் நமக்கு ஒரு காமராசர் கிடைத்தார்.. 


ஞாயிறு, 8 அக்டோபர், 2017

சாருவின் வழியில்…

கமல ஹாசனை விட சாருஹாசன் தமிழகத்தை மிக நன்றாக கணித்து வைத்திருக்கிறார்கள் என்றே கூற வேண்டும்.  அவரின் பேட்டி தந்தி டிவியில் ஒளிபரப்பினார்கள். அவர் கூறிய ஒவ்வொன்றும் முத்தான வார்த்தைகள் என்றால் மிகையில்லை.

 சாதி ரீதியாக பிரிந்து கிடக்கும்  ஒரு நாட்டில், அரசியல் வேட்பாளர்களும் அவ்வாறே தேர்வு செய்யப்படும் சூழலில், கமல் போன்ற சிறுபான்மை சாதியில் பிறந்தவர்கள் என்னதான் முற்போக்கு பேசியினாலும் ஓட்டுக்கள் விழ வாய்ப்பில்லை என்பது உண்மைதான்.

சாரு அவர்களின் பேட்டியில் பல விஷயங்கள் சுவாரிஸ்யமாகவும் சிந்தனைக்குரியதாகவும் இருந்தது. பெரியார்  திராவிட இயக்கம் கடந்த பல வருடங்களாக பிராமண எதிர்ப்பு பிரச்சாரம் வலுவாக செய்ததின் விளைவாக பிராமண எதிர்ப்பும் மறுபுறத்தில் சாதி ரீதியாக திரட்டல் வளர்ந்து கட்டித்தட்டி போய்விட்டது.  பெரியாரின் பகுத்தறிவைவிட பிராமண எதிர்ப்புக்கு அழுத்தம் அவர் காலத்திலேயே தரப்பட்டது. அவருக்கு பின் பகுத்தறிவு பின்னுக்கு தள்ளப்பட்டு முழுவதும் பிராமண எதிர்ப்பே பெரியாரின் வாரிசுகள் எடுத்துக்கொண்டார்கள். அது ஒரு வகையில் அரசியலுக்கு பயன் பட்டது.. இத்தனையாண்டு தமிழகம் அப்படிதான் மாறிப்போய் உள்ளது. அதில் பிராமண எதிர்ப்பு முற்போக்காகவும் சாதி ரீதியில் திரள்வது பிற்போக்காகவும் சொல்லப்பட்டாலும் இரண்டும் பிழையானது என்றே நான் கருதுகிறேன்.  

சாரு சொல்வது போல அதெப்படி எல்லா துறைகளிலும் பிராமணர்கள் மட்டுமே நிறைத்திருந்தார்கள் என்பதில் உண்மை இருக்க முடியும்? அவர்கள் மக்கள் தொகையில் வெறும் 3 சதம் இருக்கும் போது… எல்லா துறையும் அவர்கள் நிறைத்திருந்தார்கள் என்பது லாஜிக் இல்லாத வாதம். உண்மையில் ஜஸ்டிஸ் கட்சியினருக்கும் பிராமணர்களுக்கும் இடையே இருந்த போட்டி மனப்பான்மையே இந்த வாதம் வளர வழி வகுத்தது. இறுதியில் ஒரு பாதி உண்மையான இந்த வாதம் முழு உண்மையாக தோற்றம் அளித்தது. அதுவே மக்களிடம் எடுத்து செல்லப்பட்டு ஜஸ்டிஸ் கட்சியினரின் அரசியல் வாழ்வுக்கு அடித்தளமிட்டது.

ஏன் கேரளாவில் கர்நாடகத்தில் ஆந்திரத்தில் மகாராஷ்டிரத்தில் தலித்துகளோ பிற்படுத்தப்பட்ட மக்களோ இல்லையா…? அவர்களிடம் இந்த வாதம் ஏன் எடுபடவில்லை என்பது மிக முக்கிய கேள்வி. சாரு சொல்வதை போல தமிழகம் என்பது பெரும்பாலும் 60 சதம் பிற மொழிக்காரர்களும் 40 சதம் மட்டுமே  தமிழர்களாகவும் இருப்பதும் ஒரு காரணம். அவர்களை ஒன்றிணைக்க பிராமண எதிர்ப்பு பயன்பட்டது.

என்னதான் பகுத்தறிவு பிரச்சாரம் செய்தாலும், தமிழகத்தில் கடவுள் பக்தியோ சடங்கு சம்பிரதாயங்களோ குறையவே இல்லை. மாறாக அதிகமாகியே உள்ளது. மேலும் பல திராவிட பிரமுகர்களும் இவைகளை கடை பிடிப்பது இணைய தளத்தில் வந்து சிரிப்பாய் சிரிக்கிறது. இந்த சூழலில் பிராமணர்கள்தான் அனைத்துக்கும் காரணம் என்று அவர்கள் மீது அனைத்து பாவங்களை ஏற்றுவது சமூகத்தில் அவர்கள் சிறுபான்மையினர் என்பதுதான் இன்னும் தெளிவாய் சொன்னால் அவர்கள் ஓட்டு தீர்மானிக்கும் ஓட்டல்ல என்பதே.

சாரு சொல்வதை போல, ஒரு வகையில் இந்த தலைமுறை வரை இந்த வாதம் நீடிக்கும் என்பதே நடக்கும்ஆனால் யோசித்துப்பார்த்தால் இந்த விஷயங்களை பற்றி பேசுவது விவாதிப்பது எழுதுவது எல்லோரும் சிறுபான்மையினர்தான்.

 பெரும்பான்மை இதற்கு வெளியே நிற்கிறது. அந்தப் பெரும்பான்மை அவ்வப்போது பிரச்சனைக்கு தகுந்தவாறு எந்தப்பக்கம் சாய்கிறதோ அந்தப்பக்கம் காற்று வீசுகிறது..





வெள்ளி, 29 செப்டம்பர், 2017

இது ஒரு கால கட்டம்....

கமல்ஹாசனின்  திடீர்  பேயாட்டம் காரணம் விளங்கவில்லைதான் ….

“நான் ஹிந்தி எதிர்ப்பு காலத்திலே அரசியலுக்கு வந்து விட்டேன்…” என்பதும் ஜெ உயிருடன் இருந்த போது ஏன் பேச வில்லை என்பதற்கு கமல் கூறும் விளக்கம் எல்லாம் காதில் பூ தான் ….

திரைப்படத்திலேயே தான் இன்னமும் பல முயற்சிகள் செய்யவில்லை என்கிறார் …. அதை ஏன் அம்போ என்று விடவேண்டும்  என்பது புரியாத புதிர்தான்….  பலர் பல காரணங்களை சொல்கிறார்கள்….. ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு முன் தான் வந்துவிட வேண்டும் என்பதுதான்  காரணம் என்று பல அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்…. இருக்கலாம் …..

ஆனால் இந்த திடீர் பிரவேசம் என்பது ஜல்லிக்கட்டால் வந்த வினை என்றே கூறத்தோன்றுகிறது…. சில நேரத்தில் ஒரு பெரிய வேலை நிறுத்தமோ பெரும் போராட்டமோ நடந்தால் அதன் உணர்ச்சி வேகத்தில் சில திடீர் தலைவர்கள் தோன்றுவார்கள்….. அதை போல ஜல்லிக்கட்டு போராட்டத்தினால் ஈர்க்கப்பட்டிருக்கலாம்….. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அந்த இளைஞர்கள்  அரசியல் சார்பற்றவராக காட்டிக்கொள்ள விரும்பினார்கள்…. மேலும் மத சாதி அடையாளத்தைக்கூட துறந்தவர்களாக இருந்தார்கள் என்பதை பார்க்கமுடிந்தது….. ஸ்டாலின் கூட அங்கு வருவதை இளைஞர்கள் விரும்பவில்லை..

  "இது APOLITICALதனம் .. எந்த திட்டம் கொள்கை இல்லை.." என்று வழமையான IDEALISTகள்  கூக்குரலிட்டார்கள் .. ஆனால் அப்படிதான் அது நடந்தது… ஆனால் இந்த லட்சியவாதிகள் நிகழ்ச்சி நிரலை இளைஞர்கள் பின்பற்றவே இல்லை…… அவர்கள் தங்கள் குறிக்கோளுடன் இருந்தார்கள்.. இது சற்று வியப்பாகவே இருந்தது உண்மைதான்..

இது கமலை உசுப்பேற்றிருக்கலாம்

சோவியத் காலகட்டம் ,  இந்திய சுதந்திர போராட்டகாலம் போன்றவை பல தலைவர்கள் உருவாக காரணமாக இருந்தது….  அது ஒரு PHASE ….. IDEALIST PHASE….. ஆனால் தற்போது தலைவர்கள் இல்லாமல் மக்கள் கூடுகிறார்கள் …..  எந்த தலைவரையும் நம்ப முடியவில்லை என்பது ஒரு காரணம்…. அந்தளவு மக்கள் வெறுப்புற்று இருக்கிறார்கள்… இதை கமல் பயன்படுத்த நினைக்கலாம் என்று தோன்றுகிறது…

ஜெயித்தலாலும் ஜெயிக்கலாம்… ஜெ- யை  மக்கள் ஏற்கவில்லையா அதை போல கமல்….

ஆண்டவா…



திங்கள், 18 செப்டம்பர், 2017

மகளிர் மட்டும்...

தமிழில் Offbeat படங்கள் தற்பாேது அதிகம் வருவது நல்ல டிரண்ட்  அவை வெற்றிபெருவது நம்பிக்கையூட்டுகிறது..


அந்த வகையில் மகளிர் மட்டும்
 இழையாேடும் மெல்லிய நகைச்சுவை
தேவையற்ற பரபரப்பின்றி இயல்பான காட்சி அமைப்பு ... நட்சத்திர பந்தா இல்லாத படம்...ஆனால் அழுத்தமில்லாத  திரைக்கதை ஒரு குறை...


வெள்ளி, 15 செப்டம்பர், 2017

உச்ச கட்ட குழப்பம் ...

அதிமுக ஜெக்கு பிறகு மூன்றாக உடைவதற்கு முன்பாக  சசியை பொது செயலாளராக நியமனம் செய்தார்கள் . உடைந்த மூன்றில் இரண்டு சேர்ந்து கொண்டு சசியை பொது செயலாளர் இல்லை என்கிறார்கள் அவரை கட்சியை விட்டு நீக்கினார்களா என்றால் அதுவும் இல்லை  .. 

அதிமுக சட்டப்படி பொதுக்குழுதான் முழு அதிகாரம் படைத்தது .. அதனால் இதில் உள்ள குழப்படியால் என்ன செய்வது என்று முடிவு செய்யாமல் இனி ஜெக்கு பின் பொது செயலர் பதவிக்கு யாரும் இல்லை என்ற  தீர்மானத்தை போட்டுள்ளார்கள்.. 

 தினகரன் அணியோ GOVERNORரிடம் முதலமைச்சரை மாற்றுங்கள் என்று கோருவார்களாம்..  அதை கவர்னர் எப்படி செய்ய முடியும்..? அந்த கட்சியின் உள் கட்சி விவகாரம் இல்லையா போன்ற பல இடியாப்ப சிக்கலுடன் தமிழக அரசியல் இந்தியாவுக்கே வழி காட்டுகிறது.. 

அதிமுக வின் உச்ச கட்ட குழப்ப நிலைக்கு என்ன காரணம் என்று அலசவே தேவையில்லை காரணம் அது M.G.R- ன் வழி வந்த இயக்கம் முழுக்க முழுக்க தனி நபர் கவர்ச்சி தனி நபர் துதியால் ஆன ஒரு கட்சி எந்த தத்துவோமோ கொள்கையோ இல்லாத ஒரு கட்சி ...

திமுக வும் ஏறத்தாழ அப்படி வந்து விட்டாலும் சமூக நீதி மாநில உரிமை என்று சொல்லும்படியாக உள்ளது ...

ஆனால் MGRக்கு   அடுத்து வந்த ஜெ முழுக்க முழுக்க அதை தனி நபர் செல்வாக்குடன் ஆட்டோகிராடிக் -தனமாக வளர்த்து வந்தார்... அது எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது ...

தமிழக அரசியல் என்றுதான் சரியான கொள்கை உடைய கட்சிகளால் வழிநடத்தப்படுமோ என்று ஏக்கமாக இருக்கிறது 

சனி, 9 செப்டம்பர், 2017

இந்தியாவிற்கு எதிரானது எது...



 சமீபத்தில் ஏ ஆர் ரஹ்மான்                     சாெல்லியிருந்தார்.... கெளரி லங்கேஷ்  படுகாெலையை ஒட்டி....
This is not my India..
ஆம்... வேறு என்ன  சாெல்வது.

திங்கள், 4 செப்டம்பர், 2017

NEET என்பது NEAT ஆக இருந்திருக்கலாமே ...

 NEET பற்றி நான் தான் தாமதமாக எழுதுகிறேன் என நினைக்கிறேன் இந்த விஷயம் ஒரே களேபரமாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது..

இதுவரை படித்த விஷயங்களிலிருந்து நாம் இப்படி தொகுத்துக்கொள்ளலாம்…
NEET தமிழ் நாட்டில் மட்டும் எதிர்க்கப்படுகிறது ஏன்??

அணு உலையை தன் மாநிலத்தில் நிறுவ விடாத கேரளாவும் பினராயி விஜயனும் நீட்டை ஏற்பது ஏன்??

ஏற்கனவே தமிழக அரசு மசோதாவில் தனியார் மருத்துவ கல்லூரியில் மட்டும் NEETடை அமல் படுத்தலாம் என சொல்லப்பட்டுள்ளதாம்அதை செய்யாமல்  விட்டது ஏன்??

அனிதா படித்த தனியார் பள்ளியில் 11 வகுப்பு பாடம் சொல்லியே தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது NEETல் அதிலிருந்துதான் கேள்விகள் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது CBSE  சிலபஸ் மட்டும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது  என்பது உண்மையா...

தமிழ்நாட்டு கல்வித்திட்டமே சரியானது என்றால் இதுவரை BITS பிலானியில் ஒருவர் கூட சேர முடியவில்லை என்பது உண்மையா..

தமிழ்நாட்டு கல்வித்திட்டம் பல பத்து ஆண்டுகளை மாற்றப்படவே இல்லை என்பது உண்மையா..

கர்நாடக மாநிலத்தில் மருத்துவ கட்டண கொள்ளை நீட்டிற்கு பிறகு குறைந்திருக்கிறது என்று பத்திரிக்கை செய்தி கூறுகிறது… ஆகவே இந்த போராட்டத்திற்கு ஆதரவு தனியார் கல்வி வள்ளல்கள் பின்னணியில் இருக்கலாம் என்பது சரிதானே…

அனிதா டெல்லி சென்று வர விமான கட்டணம் தாங்கும் இடம் எல்லாம் கொடுத்து பின் அவர் சார்பாக உச்சநீதிமன்றத்தில்  வழக்கு தொடுக்கவில்லை என்ற செய்தி உண்மையா..


கல்வியாளர்கள் என்ற பெயரில் பல NGO-க்கள் இதன் பின்னல் இருக்கிறார்கள் என்பது உண்மையா..

இந்த கேள்விகளை தெரிந்து கொண்ட பிறகு நீட் தேவையா இல்லையா என்பதை முடிவுசெய்யலாம் 

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

எது உண்மையான இடம்...?

15 ஆண்டுகளுக்கு முன்பாக கொடுத்த பாலியில் புகார்.. 
ஏற்கனவே கொலைக் குற்றச்சாட்டு வேறு தனியாக விசாரிக்கப்பட்டு வருகிறது...


தண்டனையை அறிவிக்க நீதிபதி சிறைக்கே செல்லவேண்டிய நிலை..
எத்தனை பேர் பலி எத்தனை வாகனம் தீக்கிரை எத்தனை நாசம்

எல்லாம் மனிதக் கடவுளுக்காக..  தேரா சச்சா சௌதா...  உண்மையான இடமாம்..    என்ன உண்மையோ.....

தமிழகத்தில் பிரேமானாந்தா கைது செய்யப்பட்டுள்ளார்...

நித்தியானந்தா புகார் போது அவரது ஆசிரமமே அடித்து நொறுக்கப்பட்டது.

அவ்வளவு ஏன் ஒரு தீபாவளியின் போது சங்கராச்சாரியே கைது செய்யப் பட்டார்..

இங்கே எந்த கலவரமும் இல்லை...  காரணம் பகுத்தறிவு பேசியதால்.. 

அதை நினைத்துப் பெருமையடைவோம்.. பிறருக்கு உதாரணமாக விளங்கினோம்...

வட இந்தியா எப்போது விழித்துக் கொள்ளப் போகிறது...




ஞாயிறு, 30 ஜூலை, 2017

விக்ரமும் வேதாவும்

 SUSPENSE AND THRILLER என்கிற இரண்டு வகை உள்ளது என்பார்கள்...



Image result for VIKRAM VEDHA STILLS

SUSPENSE என்பது நடிப்பவர்களுக்கும் தெரியாது அதைப் பார்க்கும் நமக்கும் தெரியாது...

THRILLER  என்கிற வகை அதில் நடிப்பவருக்குத் தெரியாது ஆனால் பார்ப்பவர்களுக்குத் தெரியும் என்பார்கள்...

விக்ரம் வேதா இரண்டும் சேர்ந்த வகை... நல்ல விறுவிறுப்பு...

தமிழில் புதிய முயற்சி... வாழ்த்துக்கள் புதிய படைப்பாளிகளுக்கு...

வியாழன், 13 ஜூலை, 2017

பிக் பாஸ் - முழுச் சாப்பாடு ஊறுகாயாக....

 Image result for big boss stills

பிக் பாஸ் நிகழ்ச்சி சர்ச்சையாக வரும் முன் கமல் என்ன சொல்கிறார் என்று பார்த்தேன்.. பிறகு பார்க்கவில்லை.. ஆனால் சேரி சைவம் போன்று பல விஷயங்கள் நடந்த பின், அதை ஒட்டி கமலின் தன்நிலை விளக்கம், பிரஸ் மீட், அதை ஒட்டி டிவி விவாதம், என்று ஒரு ரவுண்டு கட்டி ஆடுகிறது பிக் பாஸ்...

 என்னை பொறுத்தவரை அந்த நிகழ்ச்சி ஒரு ஊறுகாய் போல அதை முழுவதும் சாப்பாடாக  சாப்பிட முடியுமா ...?

சனி, 3 ஜூன், 2017

கலைஞர் ......

அவர் பெரிய செல்வந்தப்  பின்னணி கொண்டவர் இல்லை.... 
ஜாதி பின்புலம் இல்லை...
 ஜாதி கூட்டமும் பின்னால்  இல்லை....
இவைகள் தேவை இல்லை என நிரூபித்தவர் ... 
மெத்தபடித்தவர் இல்லை.... 
இத்தனை இல்லைகள் இருந்தாலும் தமிழகம் மட்டும் இல்லாமலும் 
இந்திய தேசம் முழுவதும் இவருக்கு இணையான இவர் அளவு உயர்ந்த பெரும் அரசியல்வாதி  எவரும் இல்லை  ........


Image result for kalaignar still



இவர் ஒருவரே எந்த பின்புலமும் தேவை இல்லை உன் ஆற்றல் ஒன்றே நம்பி முன்னேறலாம் என்பற்கான வாழும் உதாரணம் ..... 
ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் அதை புறந்தள்ளி வளர்ந்த பெரும் தலைவர்..... 
EMERGENCY காலத்தில் ஜனநாயகத்தை காக்க நின்ற ஒரே அரசியல் தலைவர்......
ஒரு சாதாரண மனிதனுக்காக எழுதப்பட்ட   குறளோவியம் ஒன்றே போதும் படிக்க படிக்க இன்பம் தரும்  ...

கலைஞர் வாழ்க