ஸ்டெர்லைட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்டெர்லைட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 24 ஜூலை, 2018

உண்மை சுடும் ...

https://tamil.thehindu.com/india/article24500604.ece

இன்றைய இந்து நாளேட்டின் சுட்டி ...

அப்போது எத்தனை பொய்கள் சொன்னீர் ...இப்போது நிலத்தடி வாரியம் யார் தலைமையில் இயங்குகிறது ...மத்திய அரசின் கீழ் இயங்குகிறது ...அப்போது அதுதான் அரசின் அதிகார பூர்வ கருத்து..... 

இந்த கருத்தை சொன்னவன் தீவிரவாதி கிறிஸ்துவ மதவாதி பாதிரியாரிடம் பணம் வாங்கினவன் என்று எத்தனை அவதூறு... அவதூறின் எல்லைக்கே சென்றீர்கள் ....இப்போது மத்திய அரசை அப்படி சொல்லுங்கள் பாப்போம்....

 மத்திய அரசின் அதிகார பூர்வ கருத்தை சொன்னதற்காகவா இத்தனை பேரை சுட்டு கொன்றீர்கள் ..

..ரஜினியை விட்டு போராட்டம் செய்பவர்கள் சமூக விரோதி என்றீர்களே  ..  மத்திய அரசின் அதிகார பூர்வ கருத்தை சொன்னதற்காகவா  சமூக விரோதி பட்டம்   ...

ஏதோ எவனோ எடுத்த பொய் வீடியோ போட்டு காட்டினீர்கள் எத்தனை பொய்கள் இப்பொது உண்மை உங்கள் முன் வெளிப்பட்டு நிற்கிறதே பொய் அம்பலப்பட்டு பல் இளிக்கிறதே ...


..புரிந்து கொள்பவர் புரிந்து கொள்ளட்டும் இனியாவது 

ஞாயிறு, 3 ஜூன், 2018

தலைகீழ் உலகம்.....

தந்தி டிவியில் வைகோவுடனான பாண்டேயின் கேள்விக்கென்ன பதில் பார்க்க நேர்ந்தது..

 முதல் முறையாக பாண்டேயின் மீதான நம்பிக்கைத் தளர்ந்தது..  அதே சமயத்தில் இது நாள் வரை வைகோவைப் பற்றி சமூக ஊடகங்கள் எத்தனை மீம்ஸ்கள் கேலிகள் கிண்டல்கள் என அவரை நோகடித்திருக்கிறார்கள்... 

அவர் தமிழரில்லை என்று வேறு அவரை அவமானப்படுத்தியிருக்கிறார்கள்...   அவர் ஒரு பஃபூன் போல எத்தனை சித்தரிப்புகள்...   ஆனால் நேற்று அவர் பேட்டியைப் பார்த்த போது  இது ஒரு குருட்டு உலகமடா என்கிற வேதனைதான் மிஞ்சியது..

வைகோ அத்தனை உண்மையும்  போட்டு உடைக்கிறார்.. அதனால்தான் அவரை கோமாளி என்கிறார்கள் ..

மனதில் பட்டத்தை உள்ளொன்று வைத்து புறம் பேசத் தெரியவில்லை அதனால் அவரை பஃபூன் என்கிறார்கள்...

இதுதான் உலக நியதி போலும்...

எந்தப் போராட்டத்திலும் பங்கேற்காத எந்த மக்கள் பிரச்சனைகளையும் பற்றித் தெரியாத  வயதாகிய பிறகு  இளைப்பாருவோமே என நினைப்பதற்கு அரசியல் என்பது பொழுது போக்கு அல்ல...  

அது ரத்தம் சிந்தாத யுத்தம் என்பதே தெரியாது  ஆளும் வர்க்கம் சொன்னதை  கடமையாக ஏற்று மக்களுக்கு உபதேசம் செய்துவிட்டு போகும்  மேனாமினிக்கிகள் எங்கே...

வாழ்நாள் முழுவதும் மக்கள் பிரச்சனைகள் என அலைந்து பல வழக்குகள்  பல அச்சுறுத்துதள்  சந்தித்து வரும்  வைகோ எங்கே...

உண்மையான கதாநாயகன் இவர்தான்....  ஆனால் நாம் பொய்களின் பின்னால் அணிவகுக்கிறோம்...

 வைகோ போன்ற  முற்போக்கு சக்திகள் மற்றும் கம்யூனிஸ்டுகள் போன்ற மக்கள் நேசர்கள் பக்கம் நிற்பதால் மட்டுமே சாதாரண சாமானிய மக்களுக்கான நீதி கிடைக்கும் என்பது எத்தனை எளிய உண்மை....

THE GREATEST THINGS IN THE WORLD ARE THE SIMPLEST TRUTH.....