இது சரியான கருத்தா.. தெரியாது.. ஆனால் என் மனதில் பட்ட சரியான கருத்து
சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, 18 நவம்பர், 2018
ஞாயிறு, 11 நவம்பர், 2018
பரியேறும் பெருமாள்...
பொதுவாகவே Off-beat படங்கள் என்றாலே , ஒன்று பிரச்சார நெடியுடன் எடுப்பார்கள் அல்லது அழகுணர்ச்சியில்லாமல் சொதப்பலாக இருக்கும்...
சமீபத்தில் வந்திருக்கும் காதல், காக்காமுட்டை போன்ற படவரிசையில் பரியேறும் பெருமாள் BABL மிக முக்கியமான படைப்பு.. அழகுணர்ச்சி ததும்ப (aesthetic) யதார்த்தமாக poetic முடிவுடன் எடுக்கப்பட்டுள்ளது. இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களின் முதல் படம் என்றால் நம்பவே முடியவில்லை.
காக்கா முட்டை வர்க்கக் கண்ணோட்டத்தைப் பற்றி பேசினால் ப.பெருமாள் தீவிர சாதி ஓடுக்குமுறை பற்றி கதறுகிறது.. இத்தனை உக்கிரத்துடன் ஒரு படம் தமிழில் வந்ததில்லை.
தமிழகத்தில் குறிப்பாக தென்மாவட்டங்களில் காணப்படும் சாதீய ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களை நினைக்கவே பதறுகிறது. அந்தக் கொலைகார கிழவன் வரும் காட்சியிலும் ப.பெருமாளுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்கிற படபடப்பை பார்ப்பவர் மனத்தில் ஆழமாக தைத்துவிடுகிறார் இயக்குனர்.
காதல் படத்தில் அந்த மெக்கானிக் இளைஞன் மனநோயாளியாக பெரியார் சிலை முன்பாக கிடப்பதை சிம்பாலிக்காக காட்டியிருப்பார்கள்.. எத்தனை பெரியார் வந்தாலும் இந்நிலை மாறவில்லை என்பது சோகத்தில் பெரிய சோகம்...
மாரி செல்வராஜ்கள் இவ்வாறு கலைகளில் பதிவு செய்தாலாவது இந்நிலை மாறும் என்று எதிர்பார்ப்போம்..
வாழ்க மாரி செல்வராஜ்...
லேபிள்கள்:
சினிமா
,
பரியேறும் பெருமாள்
திங்கள், 13 ஆகஸ்ட், 2018
ரூபம் இரண்டு
ஒரு ஆங்கில ஹாலிவுட் படத்தை பார்த்ததை போல உள்ளது ...நேர்த்தி ...
திங்கள், 13 நவம்பர், 2017
அறத்தாறு இதுவென வேண்டா ...அறம் திரைப்படம் ...
வழக்கமான முட்டாள்தனமான சண்டைக்காட்சிகள் இல்லை...
பைசா பிரயோஜனமில்லா பன்ச் டயலாக் இல்லை.....
லூசுத்தனமான காதல் காட்சிகள் இல்லை ....
இருந்தாலும் இந்தனை இல்லைகளை தாண்டி ஒரு படம் உருவாக்கமுடியும்.. அதுவும் விறுவிறுப்பு குறையாமல் செய்திப்படமாக ஆகாமல் அதில் சமூக பார்வை புகுத்த முடியும் என்பதை நிரூபித்த கோபி நயினாருக்கு வாழ்த்துக்கள் ...
வெல்லட்டும் உமது பணி ...
புதன், 11 நவம்பர், 2015
தூங்காவனம்....
ஒரு வரிக் கதைக்கு ஒரு வரி விமர்சனம்....
just super.....
தமிழில் ஒரு நல்ல திரைப்படம்... தமிழ் ரசிகர்களின் ரசனையை மாற்றி அமைக்கும் என்று நம்புகிறேன்...
வரவேற்பார்களா என்பது படத்தின் வெற்றியில்தான் தெரியும்
சனி, 15 ஆகஸ்ட், 2015
தமிழில் ஒரு ஈரானிய சினிமா....
முதலில் காக்கா முட்டை படம் வெளியாகி வெகுநாட்களுக்குப் பிறகு விமர்சனம் எழுதுவதற்கு மன்னிக்கவும். ...ஏதோ விஜய் டிவியின் தயவில் பார்க்க நேரிட்டது... வாழ்க விஜய் டிவி....அசிங்கமாக தைய்யா தக்கா என்று குதிக்கும் நமது செந்தமிழ்த் திரைப்படங்களுக்கு மத்தியில் இப்படி ஒரு ரத்தினம் எப்போதோ வந்து திக்குமுக்காட வைக்கிறது...
யார் அந்தப் பையன்கள் மற்றும் படத்தை எழுதி இயக்கிய மணிகண்டன் அவர்கள்.. ???
ஈரானியப் படம் offbeat மேற்குலக செதுக்கிய சிற்பப்படங்கள் என்று சிலாகிப்பது தேவையற்றது என்று நான் உணர்ந்த தினம் இது...
நிச்சயமாக நம்மிடம் உள்ள படைப்பாளிகள் உலகத் தரத்திற்கு சற்றும் சளைக்காதவர்கள்தான் என்பதை அந்த ஆண்டவன் மீது சத்தியமாக கூறுகிறேன்...
ஆனால் அவர்களை எப்படி இனம் காண்பது...
காக்கா முட்டை.....
நமது contemporary வாழ்க்கையை சமகால சமூகத்தை அதன் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை அழுத்தம் திருத்தமாக முகத்தில் அறைந்தாற் போல் தோலுரித்துக் காட்டும் வன்மையாக படம்...
குப்பத்து வாழ்க்கை... தீப்பெட்டி போன்ற இடத்தில் அவர்கள் வசிக்கும் அல்லது அண்டும் வீடு போன்ற ஒரு இடத்தைக் காண்பிப்பதாகட்டும்
சிறு பிரச்சனையை கிடைத்தாலும் அதை எப்படி அரசிலாக்கி சம்பாதிக்கலாம் என்று துடிக்கும் பிழைப்புவாத கட்சிகளாகட்டும்
டிவியின் TRP RATING கிற்காக அதை ஊதிப் பெருக்கும் ஊடகங்களின் பெரும் பசியாகட்டும்
அதை வைத்து காசு பார்க்கும் ரவுடிகளாகட்டும்
நடுவில் போலீஸ் தனது வேலையை காட்டுவதாகட்டும்
எத்தனை நடந்தாலும் எதுவும் தெரியாத அந்தப் பையன்களின் அப்பாவி தாயாகட்டும்
இறுதியில் லாபதிற்காக ஒரு தேர்ந்த முதலாளி என்ன செய்வானோ அதை செய்து விஷயத்தை முடித்துவைத்ததாகட்டும்...
உண்மையாக சினிமா ரசிகர்கள் தமிழ்ச் சினிமா மேலும் மேன்மையுற வேண்டும் என்று உண்மையாக நம்பும் ரசனை மிக்கவர்கள் மணிகண்டன்களை உயர்த்த வேண்டும்...
இதோ... இதோ.... தமிழில் ஒரு ஈரானிய சினிமா....
லேபிள்கள்:
காக்கா முட்டை
,
சினிமா
ஞாயிறு, 5 ஜூலை, 2015
பாபநாசம்.....
த்ருஷ்யம் படத்தின் அனுபவத்திலிருந்து வெளிவருவதற்குள் பாபநாசம் படம் எத்தனை சுகானுபவமாக இருக்கிறது...
கமலுக்கென்ன கேட்கவேண்டுமா...? மோகன்லாலா கமலா என்கிற பேச்சுக்கே இடமில்லை... இருவரும் அவரவரர்க்ள் வாழும் இடத்திற்கேற்றவாறு (மலையாளி, தமிழன்) வாழ்ந்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்...
ஆக கமலைப் பற்றிப் பேசவிரும்பவில்லை... ஆனால் கமல் நடிக்கும் படித்தில் யாராவது ஒரு கேரக்டர் அசத்துவார்கள்... உதாரணம் உத்தமவில்லனில் பாஸ்கர்..
இந்தப் படத்தில் கமலுக்கு அடுத்த படியாக அல்லது அவருக்கு ஈடாக அசத்தியவர் ஆனந்த மகாதேவன்... அவர் வரும் காட்சிகளும் வெகு குறைவு.... பேசும் வசனங்களும் ஒரே ஒரு பக்கத்தில் கூட வந்துவிடும்... இறுதிக் காட்சியில் சில நிமிடங்கள் பேசும் போது உண்மையில் கமலைத் தூக்கிச் சாப்பிட்டுவிடுகிறார்... எத்தனை நேர்த்தி என்ன மிடுக்கு... அபாரம். என்று கைதட்டத் தோன்றுகிறது...
நான் கல்லூரியில் படிக்கும் போது மும்பை வாழ் தமிழராக பல இந்தி சீரியல்களில் அவரை இளமையாக பார்த்திருக்கிறேன்...
இத்தனை நாட்கள் எங்கிருந்தீர்கள் ஆனந்த்.....
வியாழன், 14 மே, 2015
உத்தம கமல் = வில்லன்...?
அனைவரும் எழுதிய பிறகு தாமதமாக எழுத வேண்டியிருக்கிறது... இருந்தும் படத்தைப் பற்றிய ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால்
உத்தமவில்லன் மைனஸ் கமல் = படம் ஒரு அழகோவியம்
இந்த படத்திற்கு வில்லனாக அமைந்ததே கமல் என்கிற மாபெரும் personalityதான்... அவருக்கு எந்தப் பாத்திரமும் அனாயசம் என்றாலும் மனோரஞ்சன் மேல் அனுதாபம் வராததற்குக் காரணம் பாத்திரத்தை ஒரு மெகா ஸ்டார் பாத்திரமாக பார்க்காமல் கமலாகப் பார்ப்பதுதான்... ஒரு வேளை வேறு சிலர் அப்படிப் பார்க்காமல் போகலாம்,,... என்னால் இயலவில்லை... காரணம் அந்தப் பாத்திரமே கமல் சாயலாக முற்போக்குப் பேசுவது etc etc.,
மற்றபடி, சமீபகால இளம் இயக்குனர்கள் சிந்தனையார்கள் எடுக்கும் off-beat வகையில் அதற்கு சற்றும் சளைக்காமல் கமல் என்கிற படைப்பாளி இந்தப் படைப்பைத் தந்திருக்கிறார்...
உண்மையில் கமலுக்குப் போட்டியே மைனா மெட்ராஸ் கோலிசோடா ஜிகர்தண்டா போன்ற சமகாலப் படைப்புகள்தான்...
அந்த வகையில் கமல் என்கிற படைப்பாளியின் வெற்றியே உத்தமவில்லன்....
சனி, 14 மார்ச், 2015
த்ருஷ்யம் - INTELLECTUAL TREAT
பல மாதங்களுக்கு முன்பே என்னிடம் சில நண்பர்கள் த்ருஷ்யம் படம் பார்க்கச் சொன்னார்கள்... மலையாளப் படம் மொழி புரியுமோ புரியாதோ என்று நினைத்தேன்.. அதுவும் இல்லாமல் கமல் வேறு அதை தமிழில் செய்கிறாரே அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தேன்..
லேபிள்கள்:
கலைப் படைப்பு
,
சினிமா
,
த்ருஷ்யம்
,
மலையாளிகள்
,
மோகன்லால்
வெள்ளி, 26 டிசம்பர், 2014
பாலச்சந்தரும் கமலும்
பாலச்சந்தர் இறுதி ஊர்வலத்தில் கமலால் கலந்து கொள்ள முடியவில்லை அவர் அமெரிக்காவில் இருப்பதால்.
அதையொட்டி அவர் பேட்டியை ஒளிபரப்பினார்கள்
"...அவர் இறுதி ஊர்வலத்தில்கூட கலந்து கொள்ள இயலாமல் அவர் சொல்லிக்கொடுத்த சினிமா தொழிலைச் செய்து கொண்டிருக்கிறேன்... அதுவே அவருக்கு அஞ்சலி " என்றார்..
சற்று நேரம் குறுகுறுத்தது.. கமல் ஒரு கவிதையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்
அவர் கூறிய பிறகுதான் பாலச்சந்தர் மேல் மரியாதை மேலும் கூடியது... அன்னாருக்கு அஞ்சலிகள்
லேபிள்கள்:
கமல்
,
சினிமா
,
பாலச்சந்தர்
புதன், 12 நவம்பர், 2014
உங்களை நம்பி.....
இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த தமிழ்க் கலைஞனாம் கலைஞானி
கமல் ஹாசன் அவர்களுக்கு அகவை 60 பிறந்த நாள் வாழ்த்துக்கள்
மகாநதி விருமாண்டி அன்பே சிவம் போலப் படங்கள் மென்மேலும் தமிழ் கூறு நல்லுலகத்திற்கு தருவதற்கு உங்களால்தான் முடியும்...
அந்தப் பாதையில் மென்மேலும் சிறக்க பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
திங்கள், 28 ஏப்ரல், 2014
டமால் டூமீல்..
நான் படம் பார்ப்பதே மிக அபூர்வம்.. அதிலும் புதுப் படங்கள் பார்க்கும் ஆர்வமும் குறைவு நேரமும் குறைவு... தமிழ்ச் சினிமாவைப் பற்றிய எனது பார்வை கமலின் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் ”எல்லா உலகப் படங்கள் மாதிரிதான் நம்வூர் படங்களும்.. ஆனா என்ன கண் தான் சற்று ஒன்றை...” என்பார்... நல்ல வேளை இதற்கு எதிர்ப்பு ஒன்றும் வரவில்லை..
லேபிள்கள்:
சினிமா
,
டமால் டூமீல்
,
தமிழ்ப்படங்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)
