இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 21 டிசம்பர், 2018

பிரபஞ்சன் அஞ்சலி...


Image result for பிரபஞ்சன்

பிரபஞ்ஜனின் பல சிறுகதைகள் மானுடம் வெல்லும் போன்ற படைப்புக்களை வியந்திருக்கிறேன் .. எல்லாவற்றையும் விட , அவரின் சிறுகதை ஒன்று (பெயர் தெரியவில்லை) ஒரு கிளி ஜோசிய கிழவன் நாள் முழுவதும் போனியாகாமல் இருக்கும் பொது ஒரேயொரு வாழைப்பழம் கிடைக்கிறது . அன்று முழுவதும் கொலை பட்டினி    யாசகத்திற்கு   விருப்பமில்லை ..தனக்கு கிடைத்த வாழைப்பழத்தையும் அந்த கிளிக்கு கொடுத்துவிட்டு பட்டினியோடு படுத்துறங்குவான் என முடித்திருப்பார்.. படித்து முடித்தவுடன் என்னால் என் கண்ணீரை அடக்கவே முடியவில்லை.

இதை பற்றி  ஒரு கூட்டத்தில் சந்தித்தபோது சொல்ல நினைத்தேன்.. அவரிடம் பேசும்போது தொண்டை அடைத்துக்கொண்டது  என்னால் சொல்லவே முடியவில்லை..

 நண்பர் என்னை அறிமுகம் செய்ய கை கொடுத்துவிட்டு அகன்றார்..


.மறக்கமுடியாத படைப்பாளி ..

அன்னாருக்கு அஞ்சலி

செவ்வாய், 31 அக்டோபர், 2017

மேலாண்மை பொன்னுச்சாமி...

மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் மறைவு அதிர்ச்சி..
 அன்னாரை நான் சந்தித்தது இலக்கிய சிந்தனை ஆண்டு விழாவில்..

Image result for MELANMAI PONNUSAMY PICTURE

 அவர் சிறுகதை முதல் பரிசு பெற்றது.   அந்த தொகுப்பில் எனது சிறுகதை ஒன்று இடம் பெற்றது..  அப்போது அவரை சந்திக்கும் வாய்ப்பு..   முதல் சந்திப்புக்கு பிறகு என் பெயரை நினைவு கொண்டு அடிக்கடி இவர்தான் பத்ரி என்று பிறரிடம் அறிமுகம் செய்தார் . இத்தனை பெரிய எழுத்தாளர் DOWN TO EARTH PERSONALITY ஆக இருப்பது  கண்டு வியந்தேன். 

 அவர் படைப்பின் பெரும் பகுதியை படித்திருக்கிறேன். அன்னார் மறைவு ஒரு நெருங்கிய உறவினர் மறைவைபோல் உணர்கிறேன் ..

 அன்னாருக்கு அஞ்சலி

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

டிரைலாஜி (TRILOGY)...

பணியிடம் மாற்றத்தால் எதையும் எழுத முடியவில்லை.. ஆனால் பார்க்க முடிந்தது..  குறிப்பாக புரட்சி என்றால் என்ன  போராட்டம் என்றால் எப்படி இருக்கும் ....?  ஜல்லிக்கட்டுக்காக   மாணவர்கள் இளைஞர்கள் நடத்திய போராட்டம் ஒரு மிகப் பெரிய படிப்பினை...

எத்தனை பெரிய போராட்டத்திலும் இப்படிப்பட்ட ஒழுங்கு இருந்திருக்குமா என்பது தெரியவில்லை.. கடந்த வருடம் மத்திய அரசு வெறும் அனுமதி வழங்கிய போதே நான் இப்படி எழுதியிருந்தேன்::-
ஆனால் அந்தப் பதிவு காய்வதற்குள் மீண்டும் தடை வந்தது.. தற்போது அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறது.., மக்களின் கோபம் ஏன் என்பதைற்கு பல காரணங்கள் இருக்கிறது

1) கர்நாடகாவின் தண்ணீர் திறப்புக்கு முட்டுக்கட்டை மற்றும் தமிழர்கள் மீதான் தாக்குதல்
2) அரசியல் வாதிகள் சூது, ஊழல், மக்களின் பிரச்சனை மீதான்  மெத்தனம்
3) தமிழக மக்களின்  உண்மையான அபிலாஷைகளை பிரதிபலிக்காமல் வெற்றுக் கூச்சலிடும் சுயநலம் பிடித்த அனைத்து அரசியல் கட்சிகள்
4) நமது அமைப்புகளின் தடித்தனங்கள்

போன்றவை மக்களை கொதிப்படைய செய்திருக்கின்றன என்பது தெளிவாகப் புரிகிறது..

ஆனால் மத்திய அரசு அரசாணையை ஏற்றுக் கொண்டவுடன் அப்போதே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம்.. வழமையான நம்பிக்கையின்மை தலைமையின்மை ஆகிவற்றாலும் போராட்டத்தில் கலந்து கொண்டு அதிருப்தி கொண்ட ‘சிறு குழுக்கள்’ உட்புகுந்து தங்களின் அஜெண்டாவை உட்புகுத்தியதாலும் போலீஸ் தங்கள் வழக்கமான முகத்தைக் காட்டியது... அது ஒரு சோக முடிவு எனலாம்
                                                    +++++++
நான் சமீபத்தில் படித்த ஒரு அற்புதப் படைப்பு பின் தொடரும் நிழலின் குரல்.. அப்பப்பா... இத்தனை நாட்கள் இதை வாசிக்காமல் இருந்திருக்கிறேனே என்கிற குற்றவுணர்வுதான் மேலோங்கியது.. பொதுவாக ஜெமோவின் பெரும்பான்மை  படைப்புகள் படித்திருக்கிறேன்.. தினந்தோறம் அவர் வலைத்தளத்தை படிப்பதையே ஒரு கடமையாக செய்து வருகின்றேன்.. ஆனால் அந்த அற்புதப் படைப்பை ஏன் விட்டிருக்கிறேன்..
ஒரு நாவல் என் மனதைப் போட்டு பாடாய்ப் படுத்தும் என்பது ரொம்ப நாட்களுக்குப் பின் தற்போதுதான் பார்க்கிறேன்.. காரணம் எனது முப்பது வயதுகளில் கல்கத்தா நகர் வீதிகளில் UP UP SOCIALISM DOWN DOWN CAPITALISM என்று கத்திக் கொண்டு சென்றவன்தான்... சோவியத் வீழ்ச்சி பற்றி உலகில் சிறப்பான படைப்புகள் வந்திருக்கலாம்.. ஆனால் இந்தப் படைப்பு அதற்கு சற்றும் குறைவில்லாத படைப்பு... என் தொழிற்சங்கப் பணியில் அருணாச்சலம் அளவிற்கு அனுபவம் இல்லைதான்.. ஆனால் ஒரு 5 சதவிகிதம் அனுபவம் இருப்பதால் இது ஒரு ஆன்மாவைத் தொடும் படைப்பு.,, எனது கேள்விகளுக்கு இந்தப் படைப்பு பதில் கூறிகொண்டே செல்வதைக் கண்டு பிரம்மிப்பாக படித்து முடித்தேன்.. மீண்டும் சுவைக்கப் போகிறேன்...
(ஆனால் மார்க்சீய அறிமுகமில்லாதவல்கள், தொழிற்சங்க அனுபவம் இல்லாதவர்கள், சோவியத் பற்றி அறிமுகமில்லாதவர்கள், படுபிற்போக்கு மதவாத முதலாளித்துவ மனம் கொண்டவர்களால் புரிந்து கொள்ளவே முடியாத படைப்பு இது)
                                                     •••••••••••••
க சீ சிவகுமார்... 20 ஆண்டுகளுக்கு முன்னாள் மதுரையில் பார்த்தேன்.. முற்போக்கு கலை இலக்கிய அமைப்பில் இருந்தவர்.. அவருடன் பேசிக்       கொண்டிருக்கும் போது அவரின் விஷயஞானத்தைப் பார்த்து வியந்திருக்கிறேன்.. பல நாட்கள் சென்னையில் பார்க்கும் போது அவர் படைப்புகளைப் பற்றி பேசியிருக்கிறேன்.. வசீகரிக்கும் அவர் எழுத்து நடை எப்போதும் படிக்காமல் விடாது.. அன்னாரின் அகால மரணம் பேரதிர்ச்சிதான்...எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..

வியாழன், 28 ஜூலை, 2016

ஞானக் கூத்தன் மறைவு...



Image result for ஞானக் கூத்தன் படம்


கவிஞர் ஞானக் கூத்தன் மறைவு அதிர்ச்சியாக இருந்தது... 
அவரைப் பற்றியும் அவர் கவிதைகள் பற்றியும்  சில வருடங்களாகத்தான் அறிமுகம்....
அவர் கவிதைகள் படிக்க படிக்கத்தான் வாழ்க்கையின் பல பரிமாணங்களையே புரிந்து கொள்ளவே முடிந்தது...

அவரின் பிரபல கவிதை வரிகளே அவருக்கு அஞ்சலியாக கூறவதைத் தவிர வேற எதும் தோன்ற வில்லை....
""இரயிலின் கடைசிப் பெட்டியின் பின்புறம்போல்
சோகம் தருவது உலகில் வேறேது?"


ஞாயிறு, 18 ஜனவரி, 2015

ஓட்(டு)டைகள்.....


சுமார் 1996 ஆண்டு வாக்கில் என்னுடைய சிறுகதை விஷயமாக தினமணிக் கதிர் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். அப்போது மறைந்த கவிஞர் ராஜமார்த்தாண்டன் ’இவருதான் பெருமாள் முருகன்..’ என்று எனக்கு அறிமுகப் படுத்தினார்.   சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.  அப்படியே காயிதே மில்லத் பேருந்து நிலையம்  வரை நடந்து பேசிக் கொண்டே வந்தோம்...அவர் பேராசிரியர் என்பதும் தெரிந்தது..  அவர் பேச்சிலே அவர் ஒரு பெரியாரியவாதி போலவும் தெரிந்தது... ஆனால் தற்போது அவர் நிலைபாடு என்ன என்பது சரியாக தெரியவில்லை.. 

என்னைப் பற்றி விசாரித்தார்... அவர் உயரத்திற்கு என்னைப் பற்றியும் என் எழுத்தைப் பற்றியும் சொல்ல சற்று complex ஆக இருந்தது...  கலைஞானியிடம் நேற்று வந்த ஒரு உதிரி நடிகர் பேசுவதைப் போன்று தோன்றியது..

அன்பாகச் சிரித்தார்... அந்த ’குழந்தை’ சிரிப்பு இன்னமும் என் மனத்தில் இருக்கிறது....

என்ன வென்று சொல்வது... கருத்துரிமையா ஓட்டா என்று நமது சமூகம் பலவாறு தடுமாறிக் கொண்டுதான் செல்கிறது... இதன் ஊடேதான் அனைத்தும் நிகழ்கிறது...

நமது ஜனநாயகம் சிறந்ததுதான்... ஆனால் இதைப் போன்ற ஓட்(டு)டைகள் அவற்றை எப்படி அடைக்கப் போகிறோம் என்பதுதான் மிலியன் டாலர் கேள்வி.....