காங்கிரஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காங்கிரஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 26 ஆகஸ்ட், 2019

சிதம்பர ரகசியம் -




சிதம்பரம் கைது செய்யப்பட்ட விதம் சற்று உறுத்தலாக இருந்தது என்பது உண்மை ...

அதேசமயம் எனக்கு உள்ள ஒரு சந்தேகம் , அவர் money லாண்டரிங் செய்திருப்பாரா என்பது ..

ஆனால் கார்த்தியை பற்றி தெரியாது ..

1996 -97 என்று நினைக்கிறேன் அப்போது சிதம்பரம் கேபினட் அமைச்சர் . பெரும் கம்யூனிஸ்ட் தலைவர் தலைவர் இந்திரஜித் குப்தா ஹோம் மினிஸ்டர்... அப்போது அந்த மந்திரிசபையில் ராம்விலாஸ் பாஸ்வானும் ஒரு மந்திரி என்று நினைக்கிறேன் ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 40% சதம் உயர்வளிக்கச் சொல்லி நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் ஊதியக் குழு பரிந்துரை இருந்தது ..

அப்போது அந்த கேபினட் குழுவில் இது விவாதத்திற்கு வந்த போது சிதம்பரம் அவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததாக ஒரு தகவல் வந்தது.. அது என்ன 40% ஐந்துக்கு மேல் தரமுடியாது என்று சொன்னதாக ஒரு தகவல்..

இது எங்கள் தொழிற்சங்கக் கூட்டத்தில் சொல்லப்பட்டபோது பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது . ஆனால் இந்திரஜித் குப்தா என்ற மாபெரும் தலைவன் 40% உயர்வு கொடுத்தே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக அந்த 40 சதவீதத்தை உயர்த்தி கொடுத்தார் ...

அதனாலோ என்னவோ என் போன்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த கைது அனுதாபம் அவர் மேல் ஏற்படவில்லை ...

மேலும் அவர் மக்கள் தலைவராக அறியப்பட்டவர் அல்லர் . மக்கள் இருந்து விலகியே இருப்பார் .. ஆனால் நிச்சயமாக பொருளாதார அறிஞர் சட்ட நிபுணர்தான் ..

ஆனால் மக்களிடமிருந்து விலகியிருந்தால், நிச்சயமாக அனுதாபமும் வருவதில்லை... 

தமிழகம் அமைதியாக இருப்பது அப்படித்தான்.

சனி, 27 ஜூன், 2015

மனிதாபிமானத்தின் விலை 30 கோடி....

முதல்வர் வசுந்துரா ராஜே அவர்கள் ல்லித் மோடி குடியேற்றப் பத்திரத்தில் கையெழுத்திட்ட விவகாரத்தில் முதலில் தான் கையெழுத்திடவில்லை என்றார்.. பிறகு ஆமாம் அந்த ஆவணத்தில் கையெழுத்திட்டேன்... ஒரு மனிதாபிமான முறையில் என்றார்... தற்போது ராஜேயின் மகன் துஷ்யந்திற்கு கிட்டத்தட்ட 31 கோடி  அளவிற்காக ஷேர்கள் வழங்கப் பட்டிருக்கின்றன.. கேட்டால் அது ஒரு கிப்ஃட் போலவாம்......


மனிதாபிமானத்தின் விலை 30 கோடி போலும்....(டெல்லி வந்த வசுந்துரா அவர்களை பிரதமர் சந்திக்க மறுத்து விட்டாராம்...)

====================
எமர்ஜென்சி

 ஜூன் மாதம் என்றால் எம்ர்ஜென்சியைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது.... இந்திராகாந்தி அவர்களால் நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்lடது.25 ஜூன் 1975…  நள்ளிரவில் அன்றைய ஜனாதிபதி பக்ரூதின் அலி அகமத் இதற்கான ஒப்புதலை அளித்தார். விடிவதற்குள் நாட்டிலுள்ள அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் மொராஜி தேசாய் ஜெயபிரகாஷ்நாராயணன் ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்றோர் கைது செய்யப்பட்டனர். பத்திரிகைகள் அனைத்திற்கும் மின்சார சப்ளை நிறுத்தப்பட்டது.   அவசரநிலை காலத்தில் கடுமையான அடக்குமுறைகளும்
சொல்லி மளாதவை,,, மக்களின் அனைத்து ஜனநாயக உரிமைகளும் பறிக்கப்பட்டன......சஞ்ஜய் காந்தியின் அதிகார ஆட்டம் மிகப் பிரசித்தம்... மத்திய அரசாங்க அலுவலகங்களில் கெடுபிடி பற்றி இன்னமும் பலர் கூற கேட்டிருக்கிறேன்...

கலைஞர்  துணிந்து (அன்றய கலைஞர்நெருக்கடிநிலையை எதிர்த்து தீர்மானம் போட ஆட்சியதிகாரத்தை இழந்தார்...  26.6.15 அன்று டிவியில் ஸ்டாலின் எமர்ஜென்சி கொடுமைகளைப் பற்றிப் பேசினார்... சிட்டிபாபுவுக்கு ஏற்பட்ட கொடுமை அனைத்தையும் சொன்னார்... மனம் பதைபதைத்தது.. 

அன்றய திமுகவை உருவாக்கியது அதை வளர்த்த்த பல தலைவர்களில் கலைஞர் ஒருவர்... ஆனால் திமுகவிற்காக கொட்ட்டியில் அடிபட்டவர் ஸ்டாலின் என்று தோன்றியது....

சனி, 21 பிப்ரவரி, 2015

குழம்பிய குட்டையில்......

கடந்த வருடம் டிசம்பர் 31 அன்று ஒரு சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று
பாகிஸ்தான் கடல் எல்லையிலிருந்து இந்திய எல்லையை கடந்து வந்தது,, குஜராத்தை நெருங்குவதைப் போலத் தோன்றிய அந்தப் படகு நடக்கடலில் எரிந்து போய் மூழ்கியது..

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

எந்தப் பக்கம்...?

சமூக அரசியல் ஆர்வலர்கள்/அறிவுஜீவிகள் முதல் டிவி சீரியல்களில் முழ்கும் சராசரி நபர்கள் வரை (பெண்கள் என்று சொல்ல விரும்பவில்லை.. காரணம் டிவிசீரியல் கலாச்சாரத்தில்  ஆண் பெண் வித்தியாசமில்லை) நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் பற்றி பேசுகிறார்கள்