சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 26 ஜூலை, 2019

ஒரு மாதிரி இருப்பதெல்லாம் ஒரே மாதிரி இருப்பதில்லை...


கீழ்க்கண்ட படங்கள் அத்தனை ஊடகங்களில் கிடைக்கிறது.





இவர்கள் நாளைய மாணவச் செல்வங்கள்


என்ன . . ? பேனாவுக்கு பதில் பட்டாக்கத்தி வைத்திருப்பதால் போலீஸ் கவனித்திருக்கிறது.    அட. . அதிசயம் பாருங்கள் அனைத்து மாணவர்களும் ஒரே மாதிரியாக பாத்ரூமில் "வழுக்கி " விழுந்துள்ளதால், ஒரே மாதிரி இடத்தில் ஒரே மாதிரி கட்டு போட வேண்டிருப்பதாக போலீஸ் தரப்பு கூறுகிறது.



சமூக ஆர்வலர்கள் தரப்பும் அதன் எதிர்த்தரப்பும் நிறைய விவாதங்கள் செய்கிறார்கள்.



இதை சமூக விஞ்ஞான பார்வையில் அணுக வேண்டும் என்று வாதிடுகிறார்கள் சில சமூக ஆர்வலர்கள்...



இந்த ஜல்லியடியெல்லாம் வேண்டாம் இவர்களையெல்லாம் கழுவில் ஏற்றுங்கள் என்கிறார்கள் சுஜாதா பாணியில் எதிர்த்தரப்பு .



சரி அடியேனும் சுஜாதா பாணியில் இதைப் பார்க்கிறேன்.



சுஜாதாவின் பிரபல சிறுகதை  நினைவுக்கு வருகிறது.( மூன்று கடிதங்கள்)



ஒர் இளம் தம்பதி.   வேலைக்குச் செல்லும் பெண் .  அவள் அலுவலகத்தில்  ஒரு முறை ''காசுவல்'' பணியாளர்களால்

(இளைஞர்கள்) பலாத்காரம் செய்யப்படுகிறார். போலீஸ் அந்த
 இளைஞர்களை கைது செய்து அந்த யுவதியை அடையாளம்
காட்டச் சொல்கிறார்கள்

அந்தச் சிறுகதையின் ஒரு பகுதி::

அந்தப் பையன்களைக் கண்டு பிடிச்சுட்டாஙக.என் மனைவியை அடையாளம் காட்டச்
சொன்னாங்க. நீங்க 'இருள் வரும்  நேரம்' எழுதின மாதிரி எந்த வக்கீலும் எங்களை வந்து தொந்தரவு செய்யலைபோலிஸ் ஸ்டேஷன் போய் அவங்களை     

தெளிவா அடையாளம் காட்ட முடிஞ்சுது.திருதிருன்னு முழிச்சுக்கிட்டு ஒருத்தனுக்கு பத்தொம்பது வயசிருக்கும்.மத்தவனுக்கு  இருபத்தஞ்சு . இன்னொருத்தனுக்கு மீசை கூட முளைக்கலை.

அவங்களுடைய அப்பா அம்மா வந்து 'நல்லாத்தானேங்க வளர்ததோம் '
என்று அங்கலாயத்தது எல்லாம் எனக்கு தற்காலிகமான ஆரவாரங்கள்தான்

நடந்ததுக்கு யாரைக் குற்றம் சொல்றது


விதியையா? சமூகத்தையா?

சிக்கலான சமூக அமைப்பில் நகர வாழ்க்கைக்கும் நெருக்கடிக்கும் ஏழைமைக்கும் கொடுக்கும் விலை 


இது. சம்பவம் திரும்ப நிகழாமல் பாதுகாக்க வேண்டும் அவ்வளவுதான்.




என முடித்ததிருப்பார்


இந்த ரீதியிலும் பார்த்தால் எதிர்த்தரப்பினர் (சமூக ஆர்வலர்) கூற்று விளங்கும்


வியாழன், 2 மே, 2019

பொன்பரப்பி ..

பொன்பரப்பி கொடுமைகளை பற்றி என்ன சொல்ல....

 நாகரீக சமூகத்தை வளர விடாமல் செய்யும் ஒரு தடைக்கல் ....
எந்த வைகையிலும் ஜீரணிக்க முடியாத வன்முறை ....

ஆனால் கண்ணுக்கு கண் என்ற பார்வையில் பார்க்கக்கூடாது ...

''அவர்களை ஜனநாயகப்படுத்தி வெல்லவேண்டும்....'' என்று  தொல் திருமாவின் மொழியில் கேட்டபோது -  காந்தி வாழ்கிறார் என்றே தோன்றுகிறது ..

வாழ்க திருமா ....

வெள்ளி, 15 மார்ச், 2019

பெண்ணாய்ப் பிறப்பது பாவமா?

பொள்ளாச்சி விவகாரம் அனைத்து ஊடங்கள் அரசியல் கட்சிகள் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்வும் கவலையும் தந்துள்ளது.

இவற்றில் வரும் பல வாதப் பிரதிவாதங்களில் என் இதயத்தை வலிக்கச் செய்யும் வாதம் " இந்த பொம்பள புள்ளைங்க ஒழுங்கு      மரியாதயா அடக்கமா இருக்க மாட்டங்கறாங்க .. " என்னும் வாதம் தான்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது அத்தனை தவறல்ல என தோற்றமளிக்கும் இந்தக் கூற்றில்  படுமோசமான ஆணாதிக்க வெறி பொதிந்துள்ளது.  ஆணுக்கு அனைத்து உரிமை - அவளை அனுபவிக்கும் உரிமையையும் சேர்த்துத் தரும் கிரிமினல் வெறி பொதிந்துள்ளது.  இதைத் தான் U.P முலயாம் boys are boys என்கிறார்.

இந்த வாதத்தைத் தகர்க்காமல் சமத்துவம் சாத்தியமில்லை.

இது தான் இந்நாட்டு நியதி என்றால் பெண்ணாகப் பிறப்பதே ஒரு பாவம்

வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

கிரெளஞ்ச வதம்..

எனக்குத் தெரிந்த இரு உறவினர்கள் புற்றுநோய்க்கு ஆட்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். அருகிலிருந்து அந்நோயின் கொடுமையை  அவ்விருவர் அவதிப்படுவதைப் பார்த்து வந்தேன்..

நமது சினிமாவில் காட்டப்பட்டதைப் போல இல்லை இந்நோய்.
வேறு வகைப்பட்டது.  குரூரமானது. இரக்கமற்றது.  மரண தண்டனையை விடக் கொடுமையானது என்பதே      நான் அறிந்து கொண்ட உண்மை.

புராணக் கதைகளில் வருகின்ற சபிக்கப்பட்டவர்களைப் போல பாதிக்கப்பட்டோரை மரணபயம் காட்டி அவர்கள் கம்பீரத்தைக் காலி செய்து பின்னர் காய்ந்த சருகுகளைப் போல் அடித்து துவம்சம் செய்து கதையை முடிக்கும் அவலத்தை பார்ப்பதே ஒரு கொடுமை.

இவற்றைப் பார்க்க நேரும்போது கடவுள் உண்டா இல்லையா என சந்தேகம் வருகிறது என பாதிக்கப்பட்டவர்கள் அரற்றும் போது யாரிடமும் அதற்கு பதிலில்லை.

கீமோதெரபி தான் இதற்கான மருந்து என்கிறார்கள். அதே சமயம் அந்த மருந்துதான்  நோயாளியை உருக்குலைக்க வைக்கிறது என்கிறார்கள்.

எது எப்படியோ இதற்கான சரியான மருந்தை கண்டுபிடிப்பவர் உண்மையில் அந்தக் கடவுளர்களை விட மேலானவர்.

எனது இரண்டு உறவினர்கள் பெருங்கொடுமையை அனுபவித்து உயிர் துறந்ததைப் பார்க்கும் போது அவர்கள் செய்த எந்தக் குற்றத்திற்கு இந்த தண்டனை என நினைக்கத் தோன்றுகிறது ...

இது இயற்கையின் ஒரு கிரெளஞ்சவதமில்லாது வேறு   என்ன...?

வெள்ளி, 21 டிசம்பர், 2018

பிரபஞ்சன் அஞ்சலி...


Image result for பிரபஞ்சன்

பிரபஞ்ஜனின் பல சிறுகதைகள் மானுடம் வெல்லும் போன்ற படைப்புக்களை வியந்திருக்கிறேன் .. எல்லாவற்றையும் விட , அவரின் சிறுகதை ஒன்று (பெயர் தெரியவில்லை) ஒரு கிளி ஜோசிய கிழவன் நாள் முழுவதும் போனியாகாமல் இருக்கும் பொது ஒரேயொரு வாழைப்பழம் கிடைக்கிறது . அன்று முழுவதும் கொலை பட்டினி    யாசகத்திற்கு   விருப்பமில்லை ..தனக்கு கிடைத்த வாழைப்பழத்தையும் அந்த கிளிக்கு கொடுத்துவிட்டு பட்டினியோடு படுத்துறங்குவான் என முடித்திருப்பார்.. படித்து முடித்தவுடன் என்னால் என் கண்ணீரை அடக்கவே முடியவில்லை.

இதை பற்றி  ஒரு கூட்டத்தில் சந்தித்தபோது சொல்ல நினைத்தேன்.. அவரிடம் பேசும்போது தொண்டை அடைத்துக்கொண்டது  என்னால் சொல்லவே முடியவில்லை..

 நண்பர் என்னை அறிமுகம் செய்ய கை கொடுத்துவிட்டு அகன்றார்..


.மறக்கமுடியாத படைப்பாளி ..

அன்னாருக்கு அஞ்சலி

சனி, 3 நவம்பர், 2018

என் பெயர்............?




ஒரு நாள் உலகம் நீதி பெறும்  என்று நானும் நம்பி வாழ்கிறேன்...
அன்று நீ உலகிற்குத் திரும்பி வா...தாயே...

வியாழன், 25 அக்டோபர், 2018

மீடூ , சபரிமலை...


METOO#  பற்றியும் சபரிமலை பற்றியும்  கருத்தென்ன என்று சில நண்பர்கள் கேட்டார்கள் ...ஒரே அல்லோலகல்லோல படுகிறதே ..

METOO# வில் வரும் பல விஷயங்களில்  பொய்யான தகவல்கள் இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவுதான் ..அதே சமயம் வருவதற்கும் வாய்ப்பு உண்டு என்பதற்கு மறுப்பதற்கில்லை ..அதே சமயம் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது மிக மிக முக்கியமானது... அது பெண்ணை பெற்றவர்களுக்கு நன்கு தெரியும் . அதற்கு என்னதான் சட்டங்கள் இருந்தாலும் இவ்வாறான EXPOSE செய்வது தேவைதான் ...அப்போதுதான் பெண்கள் மீதான குற்றங்கள் குறையும் என நினைக்கிறன் 

மேலும் ஜெயமோகன் கூறிய இந்த வரிகள் என்னை துணுக்குற செய்தது ::-

ஆண் உடலில் இருந்து தர்க்கபூர்வமாகப் பெண்ணைப் புரிந்துகொள்வது எளிதல்ல என்று படுகிறது................................ஆணுக்கிருக்கும் இந்த புரிந்துகொள்ளமுடியாமையில் இருந்தே metoo போன்ற இயக்கங்கள் மேல் ஆண்கள் எழுப்பும் அசட்டு கேள்விகள் [இவ்வளவுநாள் ஏன் சொல்லலை? இப்ப மட்டும் என்ன வந்திச்சு? இது விளம்பரம்தானே? – போன்றவை ] எழுகின்றன என நினைக்கிறேன்.  

எத்தனை உண்மை ...ஒரு ஆணாக பிறந்தவனுக்கு பெண்ணின் பிரத்யேக பிரச்னைகள் எதுவும் தெரிய வாய்ப்பில்லை..அதனால் ஒரு பெண் இவ்வாறு கூறும் பொது அந்த பெண்ணை சகட்டுமேனிக்கு  தகாத வார்த்தைகளால்  திட்டி தீர்க்கிறான்..இந்த களேபரத்தில் அவள் சார்ந்த சாதி மதம் என்று வேறு புகுந்து விளையாடுகிறது என்பது என் கருத்து..  ஆக பெண்கள் தற்போது அனைத்து துறைகளில் சாதிக்கும் இந்த காலத்தில் அவர்களுக்கான பாதுகாப்புக்காக எந்த நடவடிக்கையையும் ஆதரிக்கலாம் ..  அதே சமயம் அப்பாவிகள் தாக்கப்படக்கூடாது ..

சபரிமலை விஷயத்திலும் பல்வேறு சாதிய மத தாக்குதல்கள் .. தீர்ப்பை அளித்த நீதியரசர் தீபக் மிஸ்ராவை பற்றி அனைவருக்கும் தெரியும் ..அவர் இந்து தானே ... நமது நாட்டு அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு இந்த தீர்ப்பை அளித்திருக்கிறார் என்றே பார்க்கிறேன்.. எனவே இந்த தீர்ப்பை வணங்கி ஏற்கிறேன் என்றே நான் சொல்வேன் ...

நாகரீக சமூகம் செய்யவேண்டியதும் அதுதான் 

சனி, 29 செப்டம்பர், 2018

சிங்கப்பூர் - PART II : ஓர் அழகிய பெரிய பிக் பாஸ் நகரம் ...

முதலில் இந்த சுட்டியை படிக்கவும் 
https://www.thenewsminute.com/article/stalked-trapped-hotel-us-travel-blogger-recounts-sexual-harassment-india-88186

முதல் முறையாக ஒரு இந்தியன் என்று சொல்ல வெட்கப்படுகிறேன்
இது என்ன ஒரு கொடுமை இப்படி சிங்கப்பூரில் நடந்துவிடுமா
நடந்தால் என்ன எதிர் விளைவுகள் உண்டு என்பதை சொல்லித்
தெரியவேண்டியதில்லை நாம் இன்னமும் பயணிக்க வேண்டியதூரம் அதிகம்..

 சரி .இது ஒரு புறம் தற்போது சில விடுபட்ட சிங்கப்பூர் செய்திகள் 

-நான் இருந்த நாட்கள் வரை ஒரு தெரு நாயையோ சுற்றி திரியும் மாடுகளையோ பார்க்கவில்லை

* Signalக்கு   பாதசாரிகளும் வண்டிகளும் அத்தனை மரியாதை தருகிறார்கள் 

*பேருந்துக்கு நடத்துனர் கிடையாது ஓட்டுநர் மட்டுமே 

* பேருந்தில் ஏதாவது மாற்றுத்திறனாளி ஏறினால் அவர்களுக்கு பெரிய கதவை திறந்து அவர் ஏறுவதற்க்காக தன் இருக்கையை விட்டு வந்து உதவுகிறார் ஓட்டுநர்

* அனைத்தும் பேருந்து சரியாக பேருந்து நிறுத்தத்தில் வந்து நிற்க முன்பக்க கதவுகள் வழியாக அனைவரும் ஏறவேண்டும் நடுவில் உள்ள பெரிய கதவு மாற்று திறனாளி ஏறுவதற்கும் அனைத்து பயணிகள் இறங்க மட்டுமே .. யாரும் அதை மீறுவதில்லை ..

* அங்கங்கு மிதிவண்டிகள் கிடக்கின்றன .. அவற்றை தேவைப்பட்டவர்கள் எடுத்து உபயோகம் செய்துகொள்ளலாம் (நம் ஊரில் அவ்வாறு இருந்தால் என்ன நடக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும் )

* அனைவரும் உடல் ஆரோக்கியத்திற்கு  முக்கியத்துவம் தருகிறார்கள்  .. CYCLING SWIMMING, JOGGING WALKING போன்றவை ...

சென்ற பதிவில் ஒரு நண்பர் சிங்கப்பூரில் காவல் நிலையத்தை நீங்கள் பார்க்கவில்லை ஆனால் எங்கும் இருக்கிறது என்றார்..  இருக்கலாம் ... நான் லிட்டில் இந்தியாவில் மட்டுமே பார்த்தேன் மேலும் 15 வருடங்களுக்கு மேல் சிங்கப்பூர் வாழ் நிரந்தர குடிமகன் என் நண்பர் அவ்வாறு சொன்னதால் அதை பதிவிட்டேன் ..

சரி.. சரி... இவையெல்லாம் நம் நாட்டில் இல்லையா இருக்கிறதுதான்.... சட்டம் இருக்கிறது ...ஆனால் நாம் மதிப்பதில்லை அவ்வளவே ....எனவேதான் சிங்கப்பூர் ஓர் அழகிய பெரிய பிக் பாஸ் நகரம் 



புதன், 26 செப்டம்பர், 2018

சிங்கப்பூர் ::: பெரிய பிக் பாஸ் நகரம் ..



சிங்கப்பூரைப் பற்றி பல கட்டுரைகள் தமிழில் இருக்கிறது. ஒவ்வொன்றும் ஒரு பார்வையில். இது எனது குறிப்பு.  நான் பார்த்த குர்கான் (GURGAON),  மும்பை. பெங்களூர் ஆகியவற்றை கலந்து சுத்தமாக வைத்தால் அதுதான் சிங்கப்பூர்.  சுத்தமென்றால் உங்கவீட்டு சுத்தம் எங்க வீட்டு சுத்தமில்லை..அத்தனை சுத்தம்.  அவர்கள் சுத்தத்திற்கு தரும் முக்கியத்துவதிற்கு ஒரு உதாரணம். ஒரு சீனர் தன்னுடைய 
நாயை அழைத்துவந்தார் ஒரு கையில் 
நாயை பிடித்துக்கொண்டு இன்னொரு கையில் ஒரு பேப்பரை                         வைத்திருந்தார் ..  ` 

ஒரு வேளை அந்த நாய் ''காக்கா''   போய்விட்டால்,  இவர் தான் அதை 
அப்புறப்படுத்த சுத்தப்படுத்த வேண்டும்..  

அத்தனை பயம்..   சட்ம்.... சட்டம் .... அதை மூர்க்கத்தனமாக     அமல்படுத்துவதில் சிங்கப்பூர் நிர்வாகம் காட்டும்முனைப்பு உண்மையில் வியக்கவைக்கிறது.   சுத்ததிற்கு இன்னொரு உதாரணம்  ஒரு மெட்ரோ ரயில் பிளாட்பாரத்தில் லேசாக தண்ணீர் கொட்டி விட்டது . நான் அதன் அருகே சென்று விட்டேன் உடனே ஒரு சீன பெண் அதிகாரி அலறினாள்.  தன் வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவித்து பணியாளரை அழைத்து அதை துடைக்கவிட்டாள் . இந்த களேபரத்தில் அங்கங்கு மைக்கில் அறிவுப்பு அலறல் .. ஒரு சின்ன விஷயத்திற்கு எதோ வெடிகுண்டு வைத்திருப்பதைப்போல 

 சுத்தம் என்றாலும் ஒழுங்கு என்றாலும் சட்டத்தை நீட்டுகிறது சிங்கப்பூர் நிர்வாகம். அதை போல ஒரு இடத்தில் பிரதான ரோட்டிலிருந்து பாத சாரிகள் நடக்கும் ஒரு சிறு பாதை .. அங்கு ஒரு அறிவிப்பு..  இந்த இடத்தில் பெட்ரோல் வாகனமோ பைக்கோ வந்தால் சிங்கப்பூர் டாலர் 55000 அபராதம் அதாவது ரூ 29 லட்சம் ...சொத்தையே எழுதி வைக்க வேண்டும் .. இருந்தாலும் சீனர்களிடம் எனக்கு பிடித்தது .. அவர்கள் சட்டத்தை மதிக்கும் பண்பு மற்றும் பணிவு .  

.இந்த ஊருக்கு வந்தால் பொதுவாக விடுதி எடுத்து தங்குவது சிறப்பு..  பிறர் வீட்டில்  தங்குவது என்றால்...   ஒருவர் OK.. பலர் என்றால் சிங்கப்பூரின் டிஜிட்டல் கண்பார்வையில் தண்ணீர்  மின்சாரம் போன்றவை  எவ்வளவு செலவாகிறது என்கிற அளவீடுகள் காட்டிக்கொடுத்துவிடும். இங்கு காண்டோ டைப் அல்லது ஹவுசிங் போர்டு வீடுகள்..  ஒன்றை போலவே உள்ளது . தற்போது சென்னையிலும் காண்டோ டைப் பிளாட்டுகள் வந்துவிட்டது .. வீட்டு உரிமையாளர்கள் அனுமதி இன்றி யாரும் உள்ளே வரமுடியாது...  வெளியேயும் செல்ல முடியாது .   இங்கு தொலைந்து போய்விட்டார் என்கிற பேச்சே கிடையாது .. காரணம் ஊர் முழுவதும் பிக் பாஸ் வீட்டை போல காமிரா இருப்பதால் காட்டிக்கொடுத்துவிடும் `.

சில தகவல்கள் 
*இங்கு சீதோஷணம் நம் ஊரை போலத்தான் ஆனால் வியர்க்காது ....
*பெரும்பாலான சாலைகள் நான்கு மற்றும் அதற்க்கு மேல்  lane..சாலைகளில் நெருக்கடிகள் இல்லை.....
* அனைத்து வாகனங்களும் 100 கி மி மேல் செல்கிறது .....
நகரம் முழுவதும் இரவில் ஒளிர்கிறது மின் விளக்கால் வண்ண மயம்தான் ....
பெண்கள்  இரவில் எத்தனை  நேரத்திலும் பாதுகாப்பாக அலைகிறார்கள் ஒரு சின்ன EVE TEASING புகார் கிடையாது (காந்தி கண்ட கனவை நினைவாக்கும்  சிங்கப்பூர்
* LITTLE இந்தியா தவிர வேறு எங்கும் காவல் நிலையத்தை பார்க்கவில்லை ஆனால் எங்கும் போலீஸ் உஷார் நிலையில் இருக்கிறார்கள் ..
க்ரைம் ரேட் வெகு குறைவு 

 பிடித்த விஷயம் :: சீனர்கள் சுறுசுறுப்பு பணிவு உழைப்பு 
பிடிக்காத விஷயம்::: காஸ்டலி நகரம் 
வருத்தப்பட்ட விஷயம்::: பெரும்பாலும் உடல் உழைப்பு ஈடுபடுத்தப்படுபவர்கள்  இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் (சாலை பணி,  கட்டுமான பணி )
நண்பர் செந்தில் சொன்னார் தமிழ்நாட்டில் குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் விவசாயம் பொய்த்த பின் இங்கு பெரும்மையினர் வேலைக்கு வந்ததாக சொன்னார் 
(நண்பர்கள் சூரி செந்தில் மற்றும் லக்ஷ்மணன் அவர்களுக்கு நன்றி )

வெள்ளி, 7 செப்டம்பர், 2018

இறைவன் இருக்கிறானா .....

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் ஒரு லட்சத்து பத்தாயிரம் பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகியுள்ளார்கள்.

 இது கடந்த காலங்களை விட இரட்டிப்பு எண்ணிக்கையிலானது. 

இது இந்திய உள்துறை அமைச்சக தகவல்.(GRIHA MANTHRALAY) 

Image result for ஒரு லட்சத்து பத்தாயிரம் பெண்கள் பாலியல் பலாத்கார

இத்தனை பக்தி பழங்கள்  நிறைந்த நாட்டில் இதுதான் நிலைமை என்றால் - இறைவன் இருக்கிறானா என்று கேட்பதை விட வேறு என்ன சொல்ல 

திங்கள், 6 ஆகஸ்ட், 2018

மாற்றும் ஏமாற்றும் ...

ஹீலர் பாஸ்கர் கைதை ஒட்டி  இந்த மாற்று மருத்துவ முறை விவாத பொருளாக பேசப்படுகிறது ..


நமது வழக்கத்தில் உள்ள அலோபதி மருத்துவ முறை பற்றி அதில் உள்ள குறைகளை பூதகரமாக்கித்தான் இவ்வித மாற்று மருத்துவமுறை பற்றி கதையாடல்     பின்னப்பட்டுள்ளது ..

 உண்மையில் அலோபதி மருத்துவ முறையில் குறைபாடுகள் இருக்கிறது அதை டாக்டர்களே மறுப்பதில்லை. ஆனால் அவற்றில் உள்ளவை குறைதான் தவிர அந்த மருத்துவ முறை தவறு என்று இந்த புதிய விஞ்ஞானிகள் கூறுவது சற்றும் ஏற்கமுடியாது...  அது ஒரு  சொத்தை வாதம் .. பெரும் கதை ..

காசு பார்ப்பது விளம்பரம் தேடுவது போன்றவையே இவர்களின் நோக்கமாக உள்ளது .. அலோபதி மருத்துவம் என்பது உலகலாவியது மேலும் மேலும் திருத்தப்படுவது - ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு உட்பட்டது .. எல்லாவற்றும் மேலாக அலோபதி மருத்துவ முறை என்பது வெளிப்படையானது - மூடு மந்திரமில்லாதது என்பதை உணரவேண்டும் .. 

அதை விடுத்தது அதன் மேல் சேற்றை வாரி இறைத்து இந்த மாற்றுக்கள் சொல்பவர்கள் முதலில் தங்களை நிரூபிக்கட்டும் .. 

அதை விடுத்தது மனித உயிர்களுடன் விளையாடக்கூடாது ...