NEET
பற்றி நான் தான் தாமதமாக எழுதுகிறேன்
என நினைக்கிறேன் இந்த விஷயம் ஒரே
களேபரமாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக
விவாதிக்கப்படுகிறது..
இதுவரை
படித்த விஷயங்களிலிருந்து நாம் இப்படி தொகுத்துக்கொள்ளலாம்…
NEET
தமிழ் நாட்டில் மட்டும் எதிர்க்கப்படுகிறது ஏன்??
அணு
உலையை தன் மாநிலத்தில் நிறுவ விடாத கேரளாவும்
பினராயி விஜயனும் நீட்டை ஏற்பது ஏன்??
ஏற்கனவே
தமிழக அரசு மசோதாவில் தனியார்
மருத்துவ கல்லூரியில் மட்டும் NEETடை அமல் படுத்தலாம்
என சொல்லப்பட்டுள்ளதாம் … அதை செய்யாமல் விட்டது
ஏன்??
அனிதா
படித்த தனியார் பள்ளியில் 11 வகுப்பு
பாடம் சொல்லியே தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது
NEETல் அதிலிருந்துதான் கேள்விகள் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது CBSE சிலபஸ்
மட்டும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது என்பது உண்மையா...
தமிழ்நாட்டு
கல்வித்திட்டமே சரியானது என்றால் இதுவரை BITS
பிலானியில் ஒருவர் கூட சேர
முடியவில்லை என்பது உண்மையா..
தமிழ்நாட்டு
கல்வித்திட்டம் பல பத்து ஆண்டுகளை
மாற்றப்படவே இல்லை என்பது உண்மையா..
கர்நாடக
மாநிலத்தில் மருத்துவ கட்டண கொள்ளை நீட்டிற்கு
பிறகு குறைந்திருக்கிறது என்று பத்திரிக்கை செய்தி
கூறுகிறது… ஆகவே இந்த போராட்டத்திற்கு
ஆதரவு தனியார் கல்வி வள்ளல்கள்
பின்னணியில் இருக்கலாம் என்பது சரிதானே…
அனிதா
டெல்லி சென்று வர விமான
கட்டணம் தாங்கும் இடம் எல்லாம் கொடுத்து
பின் அவர் சார்பாக உச்சநீதிமன்றத்தில்
வழக்கு
தொடுக்கவில்லை என்ற செய்தி உண்மையா..
கல்வியாளர்கள்
என்ற பெயரில் பல NGO-க்கள்
இதன் பின்னல் இருக்கிறார்கள் என்பது
உண்மையா..
இந்த கேள்விகளை தெரிந்து கொண்ட பிறகு நீட் தேவையா இல்லையா என்பதை முடிவுசெய்யலாம்