கீழ்க்கண்ட படங்கள் அத்தனை ஊடகங்களில் கிடைக்கிறது.
இவர்கள் நாளைய மாணவச் செல்வங்கள்.
என்ன . . ? பேனாவுக்கு பதில் பட்டாக்கத்தி வைத்திருப்பதால் போலீஸ் கவனித்திருக்கிறது. அட. . அதிசயம் பாருங்கள் அனைத்து மாணவர்களும் ஒரே மாதிரியாக பாத்ரூமில் "வழுக்கி " விழுந்துள்ளதால், ஒரே மாதிரி இடத்தில் ஒரே மாதிரி கட்டு போட வேண்டிருப்பதாக போலீஸ் தரப்பு கூறுகிறது.
சமூக ஆர்வலர்கள் தரப்பும் அதன் எதிர்த்தரப்பும் நிறைய விவாதங்கள் செய்கிறார்கள்.
இதை சமூக விஞ்ஞான பார்வையில் அணுக வேண்டும் என்று வாதிடுகிறார்கள் சில சமூக ஆர்வலர்கள்...
இந்த ஜல்லியடியெல்லாம் வேண்டாம் இவர்களையெல்லாம் கழுவில் ஏற்றுங்கள் என்கிறார்கள் சுஜாதா பாணியில் எதிர்த்தரப்பு .
சரி அடியேனும் சுஜாதா பாணியில் இதைப் பார்க்கிறேன்.
சுஜாதாவின் பிரபல சிறுகதை நினைவுக்கு வருகிறது.( மூன்று கடிதங்கள்)
ஒர் இளம் தம்பதி. வேலைக்குச் செல்லும் பெண் . அவள் அலுவலகத்தில் ஒரு முறை ''காசுவல்'' பணியாளர்களால்
(இளைஞர்கள்) பலாத்காரம் செய்யப்படுகிறார். போலீஸ் அந்த
இளைஞர்களை கைது செய்து அந்த யுவதியை அடையாளம்
காட்டச் சொல்கிறார்கள்.
அந்தச் சிறுகதையின் ஒரு
பகுதி::
அந்தப் பையன்களைக் கண்டு பிடிச்சுட்டாஙக.என் மனைவியை அடையாளம் காட்டச்
சொன்னாங்க. நீங்க 'இருள் வரும் நேரம்'ல
எழுதின மாதிரி எந்த வக்கீலும் எங்களை வந்து தொந்தரவு செய்யலை. போலிஸ் ஸ்டேஷன் போய் அவங்களை
தெளிவா அடையாளம் காட்ட முடிஞ்சுது.திருதிருன்னு முழிச்சுக்கிட்டு ஒருத்தனுக்கு பத்தொம்பது வயசிருக்கும்.மத்தவனுக்கு இருபத்தஞ்சு . இன்னொருத்தனுக்கு மீசை கூட முளைக்கலை.
அவங்களுடைய அப்பா அம்மா வந்து 'நல்லாத்தானேங்க வளர்ததோம் '
என்று அங்கலாயத்தது எல்லாம் எனக்கு தற்காலிகமான ஆரவாரங்கள்தான்
நடந்ததுக்கு யாரைக் குற்றம் சொல்றது?
விதியையா? சமூகத்தையா?
சிக்கலான சமூக அமைப்பில் நகர வாழ்க்கைக்கும் நெருக்கடிக்கும் ஏழைமைக்கும் கொடுக்கும் விலை
இது. சம்பவம் திரும்ப நிகழாமல் பாதுகாக்க வேண்டும் அவ்வளவுதான்.
என முடித்ததிருப்பார்
இந்த ரீதியிலும் பார்த்தால் எதிர்த்தரப்பினர் (சமூக ஆர்வலர்) கூற்று விளங்கும்