திரைப்படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரைப்படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 11 ஜூன், 2018

காலா.....

இன்றைய தினங்களில் வரும் பல குப்பை படங்களில் காலா சற்றே வித்தியாசமான படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை..

 மேலும் எங்களது இலாகாவின் தொழிற்சங்க முன்னணி தோழர் ஆதவன் தீட்சண்யா வசனம் எழுதியுள்ளார் .....

வசனங்களும் மிக கூர்மையாக உள்ளது ....பெரும் பிரச்சார நெடி வாராமல் ஒரு படத்தை எடுப்பது மிக சிரமம்... அதை இயக்குனர்       பா ரஞ்சித் நேர்த்தியாக செய்துள்ளார்...

Image result for KAALA  PICTURE

ரஜினி இந்த படத்தில் இயக்குனருக்கு அடங்கி நடித்திருப்பதை போலத்தான் தெரிகிறது 


 இருந்தாலும்... இருந்தாலும்..... அவர் இயக்கிய மெட்ராஸ் மனதில் ஒட்டியதை போல மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் அதே கலைத்தன்மை அவரின் அடுத்த படைப்பில் தருவார் என்கிற நம்பிக்கையில் அவருக்கு வாழ்த்துக்கள் 

ஞாயிறு, 30 ஜூலை, 2017

விக்ரமும் வேதாவும்

 SUSPENSE AND THRILLER என்கிற இரண்டு வகை உள்ளது என்பார்கள்...



Image result for VIKRAM VEDHA STILLS

SUSPENSE என்பது நடிப்பவர்களுக்கும் தெரியாது அதைப் பார்க்கும் நமக்கும் தெரியாது...

THRILLER  என்கிற வகை அதில் நடிப்பவருக்குத் தெரியாது ஆனால் பார்ப்பவர்களுக்குத் தெரியும் என்பார்கள்...

விக்ரம் வேதா இரண்டும் சேர்ந்த வகை... நல்ல விறுவிறுப்பு...

தமிழில் புதிய முயற்சி... வாழ்த்துக்கள் புதிய படைப்பாளிகளுக்கு...

திங்கள், 1 மே, 2017

மாற்றான் தோட்டத்து மல்லிகை....

இந்த படத்தில் முதல் பாகம் வந்த பொது நான் பார்க்கவே இல்லை... ''அட போயா..... இந்த காலத்துல நல்ல சமூக படம் எதார்த்த படம் குடுக்காம சில தெலுங்கு காரங்க நம்ம தமிழ் நடிகரை வெச்சு என்னமோ பேண்டஸி பண்றங்க ..'' என்று என் நண்பர்களிடம் சொல்லிக்கொண்டு  படம் வந்து பல நாட்களை பார்க்காமல் இருந்தேன்.... ஆனால் ஆனால் பார்த்தபிறகு தான் நான் தவறு செய்து விட்டேன் என்று உணர்ந்து கொண்டேன் .....
Image result for BAAHUBALI 2 STILLS

நிச்சயமாக ராஜ் மௌலி வித்தியாசமான படைப்பாளி தான் சந்தேகமே இல்லை...... தெலுங்கர்கள் என்று வேண்டுமானாலும் நாம் வெற்று வெறுப்பு காட்டலாம் ஆனால் இந்த மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கவே செய்கிறது 


ஞாயிறு, 26 மார்ச், 2017

மாநகரம்....

Maanagaram Movie

மாநகரம் மற்றொரு இளம்புதுமுக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முயன்றிருக்கும் ப்ளாக் காமெடி வகை படம்..

சமீபகாலமாக பல ப்ளாக் காமெடி வகைப்படங்கள் பார்க்க நேர்கிறது.. பெரும்பாலும் புது இளம் இயக்குனர்கள்... சூது கவ்வும் நடுவில கொஞ்சம் பக்கத்தக்காணோம் மூடர்கூடம் போன்றவை.. கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் படமும் அந்த வகைதான்..

இந்தப் படத்தைப் பொருத்த வரையில் எத்தனை புதிய நாயகர்கள் வந்தாலும் உண்மையான கதாநாயகன் சார்லிதான் என்பேன்.. படத்தின் மையமே அதுதான் என்று கூறத் தோன்றுகிறது... உலகில் எத்தனை அயோக்கியர்கள்  அயோக்கியத்தனங்கள் நடக்கின்றன என்றாலும் நாம் அவற்றை பார்க்கும் விதம் என்கிற கோணம் என்கிற ரீதியில் சார்லியின் வசனம் இதயத்தை தொடும் சங்கதி... படம் முழுவதும் சார்லி சிறு நேரமே வந்தாலும் அவரின் பாடி லாங்வேஜ் அசத்தல்.. உலகம் எப்படி இருந்தால் என்ன.. நான் நேர்மையாக இருப்பேன் என்கிற வெள்ளேந்திப் பார்வை..

பலே..
தமிழ்ப்படங்கள் முன்னேறி வருகிறது என்பதற்கு சாட்சி என்றே சொல்லத் தோன்றுகிறது 

சனி, 13 பிப்ரவரி, 2016

விசாரணை......

பீரியட் (PERIOD) படம்  என்பார்கள்...  அதைத்தான்  கூறுத் தோன்றுகிறது... விசாரணை  படம் பார்த்த பிறகு...

திங்கள், 18 மே, 2015

புறம்போக்கும் பொது உடைமையும்...

பொது உடைமைதான் என்ன?“ என்பது பற்றி அரிச்சுவடி தெரியாதவர்கள் இந்தப் படத்தைப்  பார்த்ததால் நல்ல விறுவிறுப்பா ஜெயில் ப்ரேக் பத்தி சொல்லியிருக்காங்க....” என்று சொல்லிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விடுவார்கள்... ஆனால் எனக்கு பொது உடைமை பற்றி  அரிச்சுவடி வரை தெரியும் என்பதால் அப்படி முடித்துக் கொள்ள விரும்பவில்லை..

முதலில் எனக்குத் தலைப்பு புரியவில்லை... பொதுஉடைமையை நக்கல் செய்வது போல அமைந்திருக்கிறது.. எல்லா புறம்போக்கு நிலமும் பொதுஉடைமைதான் ...
ஒரு வேளை அதுதான் தலைப்பா...?


போராளிகளின் திட்டம் தவிடு பொடியாகிறது..  அதனால் அவர் கடல்கடந்து போவ்தாக ஒரு காட்சி வருகிறது... இந்தியாவை விட்டே தப்பிக்கிறாரா...?
ஒருவேளை போராளிகள் வெறும் சாகசவாதிகள் என்கிறாரா...?

மெக்காலே என்கிற பாத்திரப் பெயர் புரிகிறது... ஆனால் அந்த மெக்காலே கல்வி கற்ற போலீஸ்காரன்தான் ஜெயிக்கிறான்.. அவன் திட்டம்தான் துல்லியமாக இருக்கிறது...
ஒருவேளை மெக்காலே கல்விதான் சிறந்தது என்கிறாரா ஜனநாதன்...?


மொத்தத்தில் விறுவிறுப்பான குழப்பம்தான்....


புதன், 5 நவம்பர், 2014

இன்னமும் தீட்டப் பட வேண்டிய ‘கத்தி‘

கமர்சியல் இயக்குனர்களில் முருகதாசின் உலகம் சற்று வித்தியாசமானதுதான்... தனக்கென சில சிந்தனைகளை கொண்டிருப்பவர் முருகதாஸ்... 

செவ்வாய், 14 அக்டோபர், 2014

மைனாவும் மெட்ராசும்

ஆங்கில M என்கிற எழுத்தில் தொடங்கும் இந்த இரு படங்களின் ஒற்றுமை
இன்னொரு விஷய்த்திலும் இருக்கிறது.. அதுதான் விளம்பு நிலை மக்கள்
வாழ்க்கைப் பற்றிப் பேசியது...

புதன், 20 ஆகஸ்ட், 2014

முரண்...நகை....

நம்ப முடியாத சில விஷயங்கள் கொண்டதுதான் வாழ்க்கை என்பது இவர்கள் வாழ்வின் மூலம் தெரிந்து கொள்வதுதான் மிகப் பெரிய முரண்...