தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 23 மே, 2019

ம நீ ம...

ம நீ ம...

 ஒரு ஆச்சர்யம் ......தேர்தல் முடிவுகளே ஒரு ஆச்சர்யம்தான்.....

 இருந்தாலும் ....மக்கள் நீதி மையம்  -அவர் தலைவர் போல் கிராமங்களில் ஓடவில்லை ...ஆனால் நகரத்தில் நன்றாக ஓட்டுவேட்டை ஆடி மூன்றாம் இடம் வந்துள்ளார்கள்...

 உண்மையில் வருங்காலத்தில் நகரங்களில் ம நீ ம ஒரு தவிர்க்கமுடியாத சக்திதான் ....

ஞாயிறு, 12 மார்ச், 2017

தேர்தல் பாடம்....

வட மாநில தேர்தல்கள் சற்றே ஆழமாகப் பார்த்தால் பெரிய வியப்பெல்லாம் இல்லை....

அதே சமயம் பாஜகவினர்கள் கூறும்படி அவர்களுடைய demonitizationக்கு ஆதரவான அலையாகவும் தெரியவில்லை,,

முதலில் உ.பியில் அந்த முலயம் குடும்பம் போட்டுக் கொண்ட குழாயடிச் சண்டை... அப்போதே இது வெறும் யாதவ் குடும்ப பிரச்சனையாக சந்தி சிரித்தது.. மக்கள் இவர்களை நம்பவில்லை .. அதனால் வேறு வழியில்லாமல் பாஜக என்று மக்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்.. மாயாவதியின் வாக்கு எந்திரக் குற்றச்சாட்டு நமது புரட்சித் தலைவி பாணியில் சொல்லி முடித்துக் கொண்டார்.   ஆக இப்படித்தான் உ,பியைப் பார்க்க வேண்டும்.. 

உத்தரகாண்டில் ANTI INCUMBANCY என்பதுதான் காரணம் எனலாம்

பஞ்சாப்பில் காலூன்ற இயலவில்லை.. காரணம் அதன் தனித்துவம்..

கோவாவில் இழுபறி மற்றும் அதே ANTI INCUMBANCY பிரச்சனை

மணிப்பூரில் தனித்துவமான தன்மை..

அதனால் இது பாஜகவின் கொள்கைகான வெற்றி  என்று எடுத்துக் கொள்ள முடியாததான்...

அதே சமயம் சில விஷயங்கள் சற்றே ஆச்சரியமும் அதிர்ச்சியும் 

முதலில் உ,பியின் முஸ்லிம்களின் ஓட்டை பாஜக பெற்றது எப்படி என்பது... முழுக்க முழுக்க முஸ்லிம் மக்கள் ஜனநாயகத்தை விரும்புவதைத்தான் இது காட்டுகிறது..

இரண்டாவது ஐரோம் ஷர்மிளா - அவர் ஏதோ நாளை மணிப்பூர் முதல்வர் ஆகிவிடுவார் என்றே ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டிருந்தது.. 16 ஆண்டுகள் உண்ணாவிரதப் போராட்டம்... அப்படியென்றால் மக்களுடன் CONNECT ஆகாமல் அவர் ஏதோ வீம்புக்காக இருந்ததைப் போன்றே தோன்றுகிறது...

மூன்றாவது.. வடிவேலை வைத்து மீம்ஸ் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது... அதாவது.. இந்த மாநிலங்களில் இன்னமும் கம்யூனிஸ்ட்டு கட்சியின் ஓட்டை எண்ணவே ஆரம்பிவில்லை என்று சிரிப்பாய்ச் சிரிக்கிறது..

 இதிலிருந்து அரசியல் இயக்கங்கள்  பாடம் கற்கவேண்டும்

வெள்ளி, 20 மே, 2016

தமிழக மக்கள் நடத்திய பாடம்....

பண்டிட்டுகள் வேறு மக்கள் வேறு என்பது எப்போதுமே நிறுவப்பட்டு வரும் உண்மை என்பதைத்தான் 2016 தமிழக சட்டமன்றத் தேர்தல் நமக்கு மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறது..

திங்கள், 16 மே, 2016

ஜனநாயகக் கடமை...

நான் உட்பட என் நண்பர்கள் சிலர் ஜனநாயகக் கடமை ஆற்ற முடியவில்லை என்பது காலத்தின் கோலம்தான்...

திங்கள், 19 அக்டோபர், 2015

எதுக்கு வம்பு....

ஒரு வழியாக நடிகர் சங்க அமர்க்களம் முடிந்து விட்டது.. விஷால் அணி வெற்றி... 

சந்தோஷம்.... 

ஊடகங்கள் நடந்து கொண்ட விதம் தொண்டையை கவ்விவிட்டது... 
எத்தனை பேட்டிகள்...

எத்தனை குற்றச் சாட்டுகள்...

இந்த உலகில் நடிகர் பிரச்சனைகள் தவிர வேறு எதுவும் இல்லையோ என்று தோன்ற வைத்து விட்டது...

ஒரு நாள் முழுதும் கவரேஜ்....

இந்த அணி வெற்றி பெற்றதால் இனி உலகமே மாறிவிட்டதோ என்கிற பிரமை... சுஜாதா பாணியில் சொல்ல வேண்டும் என்றால் ஊரையே அலம்பிவிட்டது போல் பிரமை...

சரி... நாமும் வாழ்த்தி வைப்போம்... ஏனெனில் நாளை அரசியல் தலைமையே இவர்களிலிடமிருந்துதான் வரலாம்... அதுதானே  தமிழ்நாட்டு நிலைமை...

எதுக்கு வம்பு....

புதன், 23 ஏப்ரல், 2014

ஜனநாயகம்.....?

தேர்தல் சுரம் நாடெங்கும் பற்றிக் கொண்டு மக்கள் பார்வை முழுவதும் தேர்தலிலும் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதிலும் பரபரப்பாக ஆவலுடன் காத்திருக்கும் போதுதான் விஜய் டிவியில் அந்த நிகழ்ச்சி கடந்த ஞாயிறு (20.4.14) அன்று ஒளிபரப்பாகியது..

வியாழன், 6 பிப்ரவரி, 2014

குதிரை வளரட்டும்...

மாண்புமிகு அரவிந்த கேஜ்ரிவா......ல் அவர்கள்... நேற்று ராய்டர் நிருபர் ஒருவருக்குப் பேட்டியளித்திருக்கிறார்.. அதாகப்பட்டது காப் பஞ்சாயத் (KHAP PANCHAYAT) (தமிழில் கட்டப் பஞ்சாயத்து)