சமீபத்தில் சில காங்கிரஸ் அறிவுஜீவிகள் IITஇல் படித்த ஜெயராம் ரமேஷ், தலைசிறந்த சட்ட மேதை அபிஷேக் மனு சிங்கவி, UN பதவிக்கு போட்டியிட்ட சசி தரூர் ஆகியோர் "பிஜேபியை மடத்தனமாக காங்கிரஸ்காரர்கள் demonize செய்யக்கூடாது.." என்று கருத்து சொல்லுகிறார்கள்..
அதை எதிர்த்து தமிழ் நாட்டு கே எஸ் அழகிரி 4 பக்க அறிக்கை விட்டுஇருக்கிறார் .. அதில் மேற்கண்ட அறிவுஜீவிகள் காங்கிரஸ் விட்டு ஓடுங்கள் என்று வேறு சொல்லி இருக்கிறார்.. நேற்று ஒரு tv டிபேட்டில் கலந்துகொண்ட விஜயதரணி MLA ''காங்கிரஸில் யார் என்ன சொல்கிறார்கள் என்று தெரியல.... நாங்கள் யார் பக்கம் பேசணும்ன்னு தெரியாம இந்த டிபெட்டுல கலந்துகொள்ள வேண்டியிருக்கு ..'' என்று புலம்புபிய போது, அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை ...
இப்படி ஒவ்வொரு பக்கமும் ஒருவர் இழுப்பதால் கட்சியே கலகலத்து போயிருக்கிறது ..
இதை இப்படி சொல்லலாம் பிஜேபி இந்துக்கள் ஒருங்கிணைப்பு என்று மக்களை POLARIZE செய்கிறது திமுக திராவிடம் என்றும் கம்ம்யூனிஸ்ட் தோழர் என்றும் மக்களை POLARIZE செய்கிறார்கள்..
ஆனால் காங்கிரஸுக்கு எதை வைத்து மக்களை தன்பக்கம் இழுப்பது என்ற ஒரு சித்தாந்த போண்டித்தனம் உள்ளது ..
இதுவே காங்கிரஸ் நம் முன் சீட்டுக்கட்டுபோல சரிந்து விழுகிறது என்பதே என் கருத்து
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக