நடிகர் சங்கம் பற்றிய செய்திகளை அவ்வப்போது படிக்க நேர்கிறது. நடிகர் சங்கம் தேர்தல் பற்றிய வழக்கு இன்னமும் நிலுவையில் இருக்கயில் தீர்ப்பு வந்தபின் தான் தேர்தல் பற்றி தெளிவாகும் ...
இது சரியான கருத்தா.. தெரியாது.. ஆனால் என் மனதில் பட்ட சரியான கருத்து
வெள்ளி, 24 ஜூலை, 2015
நடிகர் சண்டை....
லேபிள்கள்:
நடிகர் சங்கம்
,
விஷால்
செவ்வாய், 14 ஜூலை, 2015
இசைத் தேன்.....
காதில் தேனைப் பாய்ச்சியவர்......
கண்களில் நீரைப் பாய்ச்சிவிட்டார்......
வெள்ளி, 10 ஜூலை, 2015
ஆபத்தான பாதை...
பீஹார் மாநிலத்தின் மேலவைக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் பாதிக்கு மேல் கிரிமினல் வழக்கு உள்ளவர்களாம் என்கிற செய்தியைப் படிக்க நேரிட்டது.....
இந்தப் பக்கம் மத்திய பிரதேசத்தில் நடப்பது எல்லாமே விபரீதம்தானோ என்று எண்ணத் தோன்றுகிறது... முதலில் யூனியன் கார்பைட் படுகொலைகள் தற்போது “வியாபம்“ என்கிற SERVICE COMMISSION ... பொதுவாக எல்லா மாநிலத்திலும் அந்தந்த மாநில சர்வீஸ் கமிஷன் பரிட்சையில் ஊழல்கள் இருக்கும்... தமிழகத்திலும் நாம் கேள்விப் படுகிறோம்,.... ஆனால் ம.பி யில் நடப்பது வெறும் ஊழல்கள் மட்டுமல்ல கிட்டத்தட்ட 48 படுகொலைகள்... அனைவரும் இந்த ஊழல்கள் வெளிவர காரணமானவர்கள்... “அட அது அதிகம் பேசறாங்க சார்.. ஒரு ஏழு அல்லது எட்டு (?) பேர்தான் இருக்கும்...“ என்கிறார்கள் ஆளும் கட்சி ஆதரவாளர்கள்...
சற்றும் ஏற்க முடியாத கொடுமைகள் இவைகள்... ஊழல்களைக் கூட சகித்துக் கொண்டு வாழ்ந்துவிடலாம்... படுகொலைகளை சற்றும் ஏற்க முடியாது....
மக்களின் சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் பெரும் ஆபத்திற்கான அறிகுறிகள் இவைகள்...
முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியவை....
ஞாயிறு, 5 ஜூலை, 2015
பாபநாசம்.....
த்ருஷ்யம் படத்தின் அனுபவத்திலிருந்து வெளிவருவதற்குள் பாபநாசம் படம் எத்தனை சுகானுபவமாக இருக்கிறது...
கமலுக்கென்ன கேட்கவேண்டுமா...? மோகன்லாலா கமலா என்கிற பேச்சுக்கே இடமில்லை... இருவரும் அவரவரர்க்ள் வாழும் இடத்திற்கேற்றவாறு (மலையாளி, தமிழன்) வாழ்ந்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்...
ஆக கமலைப் பற்றிப் பேசவிரும்பவில்லை... ஆனால் கமல் நடிக்கும் படித்தில் யாராவது ஒரு கேரக்டர் அசத்துவார்கள்... உதாரணம் உத்தமவில்லனில் பாஸ்கர்..
இந்தப் படத்தில் கமலுக்கு அடுத்த படியாக அல்லது அவருக்கு ஈடாக அசத்தியவர் ஆனந்த மகாதேவன்... அவர் வரும் காட்சிகளும் வெகு குறைவு.... பேசும் வசனங்களும் ஒரே ஒரு பக்கத்தில் கூட வந்துவிடும்... இறுதிக் காட்சியில் சில நிமிடங்கள் பேசும் போது உண்மையில் கமலைத் தூக்கிச் சாப்பிட்டுவிடுகிறார்... எத்தனை நேர்த்தி என்ன மிடுக்கு... அபாரம். என்று கைதட்டத் தோன்றுகிறது...
நான் கல்லூரியில் படிக்கும் போது மும்பை வாழ் தமிழராக பல இந்தி சீரியல்களில் அவரை இளமையாக பார்த்திருக்கிறேன்...
இத்தனை நாட்கள் எங்கிருந்தீர்கள் ஆனந்த்.....
திங்கள், 29 ஜூன், 2015
வந்துவிட்டான் எமது ஆபத்பாந்தவன்.....
மெட்ரோ ரயில்கள் ஒரு வழியாக (?), பல்வேறு அரசியல் மாச்சரியங்களைத் தாண்டி, ஓடத் தொடங்கிவிட்டன... சந்தோஷம்....
லேபிள்கள்:
பயணிகள்
,
மெட்ரோ ரயில்கள்
சனி, 27 ஜூன், 2015
மனிதாபிமானத்தின் விலை 30 கோடி....
முதல்வர் வசுந்துரா ராஜே அவர்கள் ல்லித் மோடி குடியேற்றப்
பத்திரத்தில் கையெழுத்திட்ட விவகாரத்தில் முதலில் தான் கையெழுத்திடவில்லை
என்றார்.. பிறகு ஆமாம் அந்த ஆவணத்தில் கையெழுத்திட்டேன்... ஒரு மனிதாபிமான
முறையில் என்றார்... தற்போது ராஜேயின் மகன் துஷ்யந்திற்கு கிட்டத்தட்ட 31
கோடி அளவிற்காக ஷேர்கள் வழங்கப்
பட்டிருக்கின்றன.. கேட்டால் அது ஒரு கிப்ஃட் போலவாம்......
மனிதாபிமானத்தின் விலை 30 கோடி போலும்....(டெல்லி வந்த வசுந்துரா அவர்களை பிரதமர் சந்திக்க மறுத்து விட்டாராம்...)
====================
எமர்ஜென்சி
ஜூன் மாதம் என்றால் எம்ர்ஜென்சியைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது.... இந்திராகாந்தி அவர்களால் நாட்டில் அவசரநிலை பிரகடனம்
செய்யப்பட்lடது.25 ஜூன் 1975…
நள்ளிரவில் அன்றைய ஜனாதிபதி பக்ரூதின் அலி அகமத் இதற்கான ஒப்புதலை அளித்தார்.
விடிவதற்குள் நாட்டிலுள்ள அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் மொராஜி தேசாய் ஜெயபிரகாஷ்நாராயணன்
ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்றோர் கைது செய்யப்பட்டனர். பத்திரிகைகள் அனைத்திற்கும் மின்சார
சப்ளை நிறுத்தப்பட்டது. அவசரநிலை காலத்தில் கடுமையான அடக்குமுறைகளும்
சொல்லி மளாதவை,,, மக்களின் அனைத்து ஜனநாயக உரிமைகளும் பறிக்கப்பட்டன......சஞ்ஜய் காந்தியின் அதிகார ஆட்டம் மிகப் பிரசித்தம்... மத்திய அரசாங்க அலுவலகங்களில் கெடுபிடி பற்றி இன்னமும்
பலர் கூற கேட்டிருக்கிறேன்...
கலைஞர் துணிந்து (அன்றய கலைஞர்) நெருக்கடிநிலையை எதிர்த்து தீர்மானம் போட ஆட்சியதிகாரத்தை
இழந்தார்... 26.6.15 அன்று டிவியில்
ஸ்டாலின் எமர்ஜென்சி கொடுமைகளைப் பற்றிப் பேசினார்... சிட்டிபாபுவுக்கு ஏற்பட்ட கொடுமை அனைத்தையும் சொன்னார்... மனம் பதைபதைத்தது..
அன்றய திமுகவை உருவாக்கியது அதை வளர்த்த்த பல
தலைவர்களில் கலைஞர் ஒருவர்... ஆனால் திமுகவிற்காக கொட்ட்டியில் அடிபட்டவர்
ஸ்டாலின் என்று தோன்றியது....
லேபிள்கள்:
அரசியல்
,
எமர்ஜென்சி
,
காங்கிரஸ்
,
பா%க
செவ்வாய், 16 ஜூன், 2015
பழையன கழிதல்...
ரயில்வே துறையை தனியார் மயமாக்கப்போவதாக செய்திகள் வருகின்றன.... பலம் வாய்ந்த ரயில்வே தொழிற் சங்கங்கள் இப்போதே போர்கொடி தூக்க தொடங்கியுள்ளன ... அரசு சற்று அடக்கித்தான் வாசிக்கும் என்று தெரியும்... பொதுவாக இந்த விசயத்தில் பல்வெரு கருத்து மாறுபாடுகள் எனக்கு உண்டு.. எங்கள் துறையை சார்ந்த மறைந்த தலைவர் ஓ பி குப்தா பேசும்போது சொல்வார் "நீங்கள் உடல் சரியில்லை என்றால் தனியார் மருத்துவமனைக்கு செல்வீர்களா... அல்லது அரசு மருத்துவமனைக்கு செல்வீர்களா...." பலர் அவர் கூறுவதை கேட்டு கோபப்படுவார்கள்.. மனசாட்சியுடன் பதில் சொன்னால் நாம் தனியாருக்குத்தான் போவோம்... உயிர்ப் பிரச்கனை ஆயிற்றே..
காய்தல் உவத்தல் இல்லாமல் பார்த்தால் ... இரன்டும் இன்றய சுழலில் தேவை என்றே
தோன்றும்..... BSNL இல்லையா... ??? நாம்
கூடாது என்று சொல்லும் போதே நம்மிடம் weakness உள்ளது என்பது தெரியும்...கால
தேச வர்தமான மாற்றங்களுக்கு ஏதுவாக மாற வேண்டிய கட்டாயம் உள்ளது..
முற்போக்கு
என்ற பார்வையில் சில கோட்பாடுகளை கொண்டு பழைய
முறை சமாச்சாரங்களை பார்த்து விட்டோம்... எனக்கு
அதில் நம்பிக்கை இல்லை... உண்மையில் அவை வெற்றி
பெறவில்லை என்பதே எனது துணிபு
லேபிள்கள்:
சமூகம்
,
தனியார்மயம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)