திங்கள், 12 அக்டோபர், 2015

எழுத்தாளர்களின் அறச் சீற்றம்....

(இந்திய) வரலாறு காணாத வகையில் எழுத்தாளர்களின் எழுச்சியைப் பார்க்க நேர்கிறது... நயன்தாராசேகல் கவிஞர் அசோக் வாஜ்பேயியை தொடர்ந்து, உருது நாவலாசிரியர் ரகுமான் அப்பாஸ் தனக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளிக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.     பரிசுகளை திருப்பிக் கொடுப்போர் பட்டியல் தொடரும் போலத் தெரிகிறது.. 

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

பிறவிக் கலைஞர்


Image result for manorama photos

எத்தனையோ கலைஞர்களைப் பார்த்தாலும் ஒரு சிலர் பிறவிக் கலைஞராகத் திகழ்வார்கள்....
அந்த வகையில் மனோரமா ஒருவர்....
அன்னாருக்கு அஞ்சலிகள்.....

வெள்ளி, 2 அக்டோபர், 2015

போகுமிடம் வெகு தூரம்......

இலங்கை அரசின் போர்க்  குற்றம் பற்றிய வரைவுத் தீர்மானம் ஐநா சபையில் நிறைவேறியிருக்கிறது...

வியாழன், 10 செப்டம்பர், 2015

இரண்டு லட்சம் கோடி.....

 உலக முதலீட்டார்கள் மாநாட்டின் பயனாக இரண்டு லட்சம் கோடிக்கு முதலீடுகள் வந்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது... உண்மையில் மகிழ்ச்சியான விஷயம்தான்...

சனி, 15 ஆகஸ்ட், 2015

தமிழில் ஒரு ஈரானிய சினிமா....

Image result for kaaka muttai

முதலில் காக்கா முட்டை படம் வெளியாகி வெகுநாட்களுக்குப் பிறகு விமர்சனம் எழுதுவதற்கு மன்னிக்கவும். ...ஏதோ விஜய் டிவியின் தயவில் பார்க்க நேரிட்டது... வாழ்க விஜய் டிவி....அசிங்கமாக தைய்யா தக்கா என்று குதிக்கும் நமது  செந்தமிழ்த் திரைப்படங்களுக்கு மத்தியில் இப்படி ஒரு ரத்தினம் எப்போதோ வந்து திக்குமுக்காட வைக்கிறது...

யார் அந்தப் பையன்கள் மற்றும் படத்தை எழுதி இயக்கிய மணிகண்டன் அவர்கள்.. ???

ஈரானியப் படம் offbeat மேற்குலக செதுக்கிய சிற்பப்படங்கள் என்று சிலாகிப்பது தேவையற்றது என்று நான் உணர்ந்த தினம் இது...  

நிச்சயமாக நம்மிடம் உள்ள படைப்பாளிகள் உலகத் தரத்திற்கு சற்றும் சளைக்காதவர்கள்தான் என்பதை அந்த ஆண்டவன் மீது சத்தியமாக கூறுகிறேன்...

ஆனால் அவர்களை எப்படி இனம் காண்பது...

காக்கா முட்டை.....

நமது contemporary வாழ்க்கையை சமகால சமூகத்தை அதன் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை  அழுத்தம் திருத்தமாக முகத்தில் அறைந்தாற் போல் தோலுரித்துக் காட்டும் வன்மையாக படம்... 

குப்பத்து வாழ்க்கை... தீப்பெட்டி போன்ற இடத்தில் அவர்கள் வசிக்கும் அல்லது அண்டும் வீடு போன்ற ஒரு இடத்தைக் காண்பிப்பதாகட்டும்

சிறு பிரச்சனையை கிடைத்தாலும் அதை எப்படி அரசிலாக்கி சம்பாதிக்கலாம் என்று துடிக்கும்  பிழைப்புவாத கட்சிகளாகட்டும்

டிவியின் TRP RATING கிற்காக அதை ஊதிப் பெருக்கும் ஊடகங்களின் பெரும் பசியாகட்டும்

அதை வைத்து காசு பார்க்கும் ரவுடிகளாகட்டும்

நடுவில் போலீஸ் தனது வேலையை காட்டுவதாகட்டும்

எத்தனை நடந்தாலும் எதுவும் தெரியாத அந்தப் பையன்களின் அப்பாவி தாயாகட்டும்

இறுதியில் லாபதிற்காக ஒரு தேர்ந்த முதலாளி என்ன செய்வானோ அதை செய்து விஷயத்தை முடித்துவைத்ததாகட்டும்...

உண்மையாக சினிமா ரசிகர்கள் தமிழ்ச் சினிமா மேலும் மேன்மையுற வேண்டும் என்று உண்மையாக நம்பும் ரசனை மிக்கவர்கள்  மணிகண்டன்களை உயர்த்த வேண்டும்... 

இதோ... இதோ.... தமிழில் ஒரு ஈரானிய சினிமா....

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

சுந்தர் பிச்சை.......


  1. Image result for sundar pichai

  2. மைக்ரோசாஃப்டின் தலைவராக சத்ய நாராயண நாதெள்ள வந்த போதும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது,,,

ஆனால் தற்போது சுந்தர் பிச்சை கூகிளின் தலைராக வரும் போது அது இரட்டிப்பு மகிழ்ச்சியாகிறது,,

அது வேறு ஒன்றுமில்லை... தமிழர் என்பதால்.....

நான் மொழிப்பித்தனல்லன்...

இருப்பினும் ,,,,,

தனி மகிழ்ச்சி,,,,

வாழ்க சுந்தர்...

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

சசிபெருமாள்- மதுவிலக்கு- ராஜாஜி

புரட்சியும் போராட்டக்களமும் தமிழக சூழலில் கேலிப் பொருளாகத்தான் இருக்கிறது... இருப்பினும் நாம் அவ்வப்போது சில உண்மையான மகாத்மாக்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்... நம் கண் முன் தோன்றி மறைந்து கொண்டிருக்கிறார்கள்..... அப்துல்கலாம் மறைவை ஒட்டி  மிக வேதனையான தருணம் சசிபெருமாள் என்கிற காந்தியவாதியின் மறைவு...