வியாழன், 28 ஜூலை, 2016

ஞானக் கூத்தன் மறைவு...



Image result for ஞானக் கூத்தன் படம்


கவிஞர் ஞானக் கூத்தன் மறைவு அதிர்ச்சியாக இருந்தது... 
அவரைப் பற்றியும் அவர் கவிதைகள் பற்றியும்  சில வருடங்களாகத்தான் அறிமுகம்....
அவர் கவிதைகள் படிக்க படிக்கத்தான் வாழ்க்கையின் பல பரிமாணங்களையே புரிந்து கொள்ளவே முடிந்தது...

அவரின் பிரபல கவிதை வரிகளே அவருக்கு அஞ்சலியாக கூறவதைத் தவிர வேற எதும் தோன்ற வில்லை....
""இரயிலின் கடைசிப் பெட்டியின் பின்புறம்போல்
சோகம் தருவது உலகில் வேறேது?"


புதன், 20 ஜூலை, 2016

நிஜக் கபாலி....

Image result for piyush manush images


சமீபத்தில் சூழலியலாளர் ப்யூஷ் மனுஷ் கைதைப் பற்றி தொலைக் காட்சியில் காட்டினார்கள்.  நீதியரசரே ப்யூஷ் அவர்களின் சேவையைப் பற்றி பாராட்டி வேறு தனது    கருத்தாகக்        கூறினார்.... 

அவரைப் பற்றிய செய்திகளை முழுவதும் படித்தேன்...  ARM CHAIR CRITICS நமது நாட்டில் அதிகம்... உண்மையில் இவர் ஒரு ஹீரோதான்... 

நம் நாட்டின் இயற்கை வளங்களைப் பற்றி அக்கரை இருப்பவர்கள் இவரின் சேவையை பாராட்டமல் ஆதரவளிக்காமல் இருக்க முடியாது...

இவரைப் பற்றி பாராட்டு தெரிவிப்பவர்களில் முக்கியமானவர்களாக நான் கருதுவது திரு ஜெயமோகன் மற்றும் நண்பர் திரு முத்து நிலவன்... அவர்கள் எழுதிய சுட்டியை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
திரு ஜெயமோகன் சுட்டி http://www.jeyamohan.in/89042#.V470ZNK7iko
திரு முத்துநிலவன் சுட்டி http://valarumkavithai.blogspot.com/2016/07/blog-post_20.html

தொண்டுகென்றே அலைவான்.....
கேலிக்கு ஆளாவான்...
கண்டு கொள்வாய் அவனை
ஞான தங்கமே...
அவன் கடவுளில் பாதியடி ஞான தங்கமே...

என்கிற பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது...

ஞாயிறு, 17 ஜூலை, 2016

மீண்டும் கடவுளை கண்டேன்.....

சுவாதியின் படுகொலையின் தாக்கம் இன்னமும் தீரவில்லை… நானும் ஒரு தகப்பன் என்பதால் இருக்கும்.. இந்தச் சோகம் முழுமையாக மறைய எத்தனை ஆண்டுகள் எனக்குப் பிடிக்குமோ தெரியவில்லை….  ஆனால் நடுநடுவே சிலவற்றை பார்க்கவும் பேசவும் எழுதவும் தோன்றுகிறது…

ஞாயிறு, 3 ஜூலை, 2016

பொறுக்கிகள் கலாச்சாரத்தைத் தடுக்க வேண்டும்….

இந்தப் பிரச்சனையில் யாரும் சாதி மதச்சாயம் பூசாதீர்கள் என்று வேண்டிக் கொண்டார்கள் சுவாதியின் பெற்றோர்..

ஓ.. எத்தனை பெரிய மனம்… உங்களை கைகூப்பி வணங்குகிறோம்… ஒரு சராசரி இந்திய மனம் இத்தகையதுதான் என்று நினைக்கும் போது கண்ணீர் வருகிறது… இந்தியா அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்றால் உங்களைப் போன்ற நல்லிதயங்களால்தான் என்று தோன்றுகிறது..

ஆனால் இந்தத் தங்க மனத்திற்குத்தான் இப்படிப்பட்ட சோதனையா..? என்று நினைக்கும் போது விரக்தி மேலிடுகிறது…

LET GOD GIVE THEM PEACE OF MIND என்று சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்ல…?

பொறுக்கிகள் உருவாக என்ன காரணம்… ஒரு சமயம் எழுத்தாளர் பிரபஞ்சன் சொன்னார்.. தமிழ்ச் சினிமாவைப் பார்த்தால் வேறு நாட்டினார் என்ன நினைப்பார்கள்.. தமிழ் இளைஞர்கள் காதலித்தார்கள் காதலித்துக் கொண்டிருக்கிறார் மேலும் காதலித்துக் கொண்டிருப்பார்கள் என்றுதான்.. அவர்களுக்க வேறு வேலை இல்லை என்றுதான் நினைப்பார்கள் என்பார்… எத்தனை சரியானது..

சம்பந்தமில்லாத ஒரு ரவுடிப் பயல் இருப்பான் அவனை ஒரு வடநாட்டு வெள்ளைத் தோல்காரி உருகி உருகி காதலிப்பாள் என்ற உலக மகா அபத்தத்தை எத்தனை படங்கள் பேசப் போகிறது…

ஆண் பசங்கள் பிறக்கும் போதே BORN WILD ஆகப் பிறக்கக் காரணம் என்ன.. பெண் என்றால்  இவர்களின் போகப் பொருள் என்றா  நினைக்கிறார்களா..?

அண்ணா காலத்திலேயே சொல்லியிருக்கிறார்… சாலையோரத்தில் வேலையற்றதுகள்… வேலையற்றோர் மனதில் விபரீத எண்ணங்கள் என்று.. இந்தக் கால வேலையற்றோர் மனிதில் விபரீத எண்ணங்கள் எப்படிப் போக்குவது…

சுதந்திரப் போராட்டக் காலகட்டத்திலோ இல்லை திராவிட இயக்கக் காலகட்டத்திலோ இப்படி எண்ணங்கள் தோன்றியிருக்காது… தற்போது திராவிட இயக்கங்கள் நீர்த்துப் போய்விட்டது.. வெறும் துவேஷத்தை ஏற்படுத்தும் விஷயங்கள் மட்டுமே இருக்கிறது…. ஒரு புறம் மதவெறி தலைவிரித்தாடுகிறது

..திரையுலகில் சிறப்பான படைப்புகள் வருவது குறைந்துவிட்டது... வருவது  வெறும் வெற்றுக் கூச்சல்கள் மட்டுமே நிறைந்திருக்கிறது..


சமூக ஆர்வலர்கள் சற்றே களம் புக வேண்டிய கால கட்டமிது…

வியாழன், 30 ஜூன், 2016

மனவலியை பொறுக்க முடியவில்லை....

உயிர் வலியைவிட மன வலி பொறுக்க முடியவில்லையே.....

அந்தச் சின்னப் பெண் சுவாதி ரத்த ஆற்றில் விழுந்து கிடந்தது முதல் நடைபெறும் விஷயங்களால் நிச்சயமாக அனைவரும் கடும் மன அழுத்தத்திற்கும் மன  வலிக்கும் ஆளாயிருக்கிறார்கள் என்பது உண்மைதான்.. ஏன்... எதற்கு.. எப்படி... என்று பல விவாதங்கள் அனைத்து ஊடகங்களிலும் கொட்டிக் கிடக்கின்றன.. 

இதில் சாதி மதச் சாயங்கள்,  சாய்வுகள் என்று ஒரு பக்கம் விவாதம் களைக் கட்டியிருக்கிறது... இந்த நாட்டில் ஏதோவொரு சாதியில் , ஒரு மதத்தில்  பிறந்துதான் தீரவேண்டும் ... அது யார் செய்த விதி... யாரை நொந்து கொள்வது ...? 

நடிகர் மகேந்திரன் முகநூலில் தனக்கு வந்ததை பகிரப் போய் அதற்கு தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கிறது... 

கொலை செய்யப்பட்டவள் ஒரு சாதி  ஒரு மதம்.. கொன்றவன் ஒரு சாதி அல்லது மதம்.. அதற்கு யார் என்ன செய்ய முடியும்... நீ அதுவானால் அதைப் பற்றிப் பேசாதே என்பது ஒரு கலாச்சார போலீசிங் தனம்தான்... அவரவர் கோபத்தை அவரவருக்குத் தோன்றுவதைப் போல தெரிவிப்பார்கள்தான்... மகேந்திரன் கிட்டத்தட்ட பிஜேபி என்கிற முத்திரையே குத்திவிட்டார்கள்...

முதுகின் குறுக்கே நூல் இருந்தால் பேசக் கூடாது என்றால் சிரிப்புதான் வருகிறது.. அப்படி தடை போட இவர்கள் யார்...?  விஞ்ஞான ரீதியில் அப்படி நிரூபிக்க முடியுமா..?  யார் முன்னே நிரூபிப்பது.....?  நிருபித்தாலும் அதை சரியென்று யார் சொல்ல முடியும்...? உண்மையில் ஆதிக்க சாதி என்பது இந்த உலகத்தில் அனைத்து இடங்களிலும் இருக்கும்தான்.. ஜெயமோகன் சொல்வதைப் போல பிராமணர்கள்,  ஜனநாயகத்திற்குத் தர வேண்டிய விலைதான் இட ஓதுக்கீடு மற்றும் ஆதிக்க சாதி பட்டம் என்பார்.. தொழிற்சங்கத் தலைவர்  டேவிட் ஞானைய்யாவிடம் நான் இதைப் பற்றி கேட்டதற்கு புராண காலத்தில் இருந்ததுதான் ரிசர்வேஷன் தற்போது இருப்பது DE-RESERVATION என்று கூறினார் .  அவர் கூறுவதும் ஜெயமோகன் சொல்வதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்தான்.. அதாவது வெவ்வேறான பாஷையில் .....
சுவாதி பிரச்சனையில் அவள் பிண்ணனிதான் முற்போக்கு மற்றும் மாதர் இயக்கங்கள் எந்த முன்னெடுப்பும் செய்யவில்லை என்கிற குற்றச் சாட்டு பலமாக உள்ளது என்பதை மறுக்க முடியாது..

என்ன செய்ய முடியும்.. அவளை குற்றுயிராக வெட்டி வீழ்த்தியவனைக் கூட யாரும் பிடிக்க முயலவில்லை .. நிழல் கமல்கள் ரஜினிகள்  முஷ்டியை உயர்த்தவில்லை.. விஜய்கள் ஆள்காட்டி விரலை மடக்கவில்லை.. சிக்லெட் சாப்பிட்டுக் கொண்டு அஜித்கள் நடந்து வந்து காப்பாற்றவில்லை... அதை நிழலில் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டார்கள் அவர் ரசிகப் பெருமக்கள்...

உடுமலை சங்கர் படுகொலை காட்சியே போட்டுக் காட்டினார்கள் அப்போதும் யாரும் அந்தக் கொலையாளிகளை பிடிக்க முயலவில்லை... 

இது ஒரு பொதுப் புத்தியாகத்தான் இருக்கிறது..

நமக்கேன் வம்பு என்பது ஒரு புறம்... போலீஸ் கேஸ் என்று வந்தால் பிரச்சனை என்று மறு புறம்.. பாதிக்கப் பட்டவர் சாதி என்ன மதம் என்ன அதன் மூலம் இயக்கங்கள் நடத்தலாம் என்பது மறுபுறம் என்ன அனுகூலம் பெறலாம் என்பது இன்னொரு புறம்..

நாம் போகவேண்டியது வெகு தூரம் என்பது தெரிகிறது....

திங்கள், 27 ஜூன், 2016

தூக்கும் தண்டனை

தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்கிறார்கள் சில சமூக விஞ்ஞானிகள்.

அவர்கள் பெரியவர்கள்...  அவர்கள் வாதம் சரியாக  இருந்தாலும் இந்தக் காட்சியைப் பார்த்தால் ......................................


Image result for swathi murder

சரி.. பெரியவர்கள் சொல்லட்டும்... தூக்குத் தண்டனையை ஒழிக்கட்டும்..
ஆனால் என்கவுண்டர் இருக்கிறதல்லவா...

வெள்ளி, 24 ஜூன், 2016

பிஜேபிக்குப் பிடிக்காத ராமன்....

ரகுராம்ராஜன் பற்றி பாராட்டுக்களும் விமர்சனங்களும் மாறி மாறி பத்திரிகைகள் சமூக வலைதளங்கள் எழுதிக் குவித்து விட்டன..