புதன், 24 ஜூலை, 2019

இது உலக மகா விசித்திரம்..

என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு சட்டம் பாராளுமன்றத்தில் ஓட்டுக்கு விடப்பட்டது.. இது ஓட்டுக்கு விடப்பட்டதற்கு காரணம் ஓவெசி AIMIN கட்சியின் தலைவர்.. 

 இது மாநில சுயாட்சிக்கு எதிரானது என்று சண்டமாருதம் செய்கிறது திமுக மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள்..

 திமுக சொல்லும் காரணம் இதுதான்…

 ‘’ சிறுபான்மை மக்களின் மீது இச்சட்டம் தவறாக  பயன்படுத்தப்படக்கூடாது. சிறுபான்மை மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்தவும் இச்சட்டத்தில் வழிவகை காணவேண்டும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அச்சட்டத்தில் கொண்டுவரப்பட்ட மேலே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு  திருத்தங்கள் அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை பறிக்கும் விதத்தில் எந்த புது அதிகாரத்தையும் காவல்துறைக்கு வழங்கிடவில்லை யென்பதோடு, வலைதளங்களில் பரப்பப்படுவதுபோல புதிய எந்த பிரிவுகளையும் கூடுதலாக சேர்க்கவும் இல்லை.’’

கம்யூனிஸ்டுக்கட்சிகள் இந்த சட்டத்தை எதிர்த்தார்கள்…  அதைப்போல ஓட்டுக்கு வந்தபோது அதை எதிர்த்தும் வாக்களித்தார்கள் ..

ஆனால் இத்தனை காரணங்கள் சொல்லி இதனால் நாங்கள் ஆதரிக்கிறோம் என்று ஆதரித்து ஓட்டளிக்கிறார்கள்  திமுக மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள்..


இது உலக மகா விசித்திரம்..

திங்கள், 15 ஜூலை, 2019

உலகக் கோப்பையும் ஞானப்பழமும் ..

கிரிக்கெட் பார்த்து பல காலமாயிற்று. எப்போது இந்த            "பெட்டிங்" வந்ததோ அப்போதே அடியேன் பார்ப்பதை கைவிட்டு விட்டேன்.

உலகக் கோப்பை - அதுவும் இறுதிப் போட்டி என்பதால் இறுதிக் கட்டத்தைப் பார்க்க நேர்ந்தது.

50 ஓவரும் Tie.. அதன் பின்னர் வந்த கூடுதல் (super over) ஓவர் வைத்தாலும் அதிலும் Tie.

ஆனால் இங்கிலாந்து தன் கூடுதல் ஓவரில் இரண்டு Four அடித்து விட்டார்களாம் -

அதனால் கோப்பை இங்கிலாந்துக்காம்.

ஆமாம். இந்தப் போட்டிகளின் ஏற்பாட்டாளர்கள் என்ன தான் செய்வார்கள். கோப்பையை எடைக்கா போட முடியும்? ஏதேனும் ஒரு வழி கண்டு பிடிக்க வேண்டுமே !

நம் பழைய திருவிளையாடல் புராணத்தில் பிள்ளையார் பெற்ற ஞானப் பழம் நினைவுக்கு வந்தது...

புதன், 12 ஜூன், 2019

ராஜராஜசோழன் .....

ராஜ ராஜ சோழன் இப்படி செய்யவில்லை அப்படி செய்யவில்லை என்று இன்றும் பட்டியல் செய்யலாம் தான் ..

ஆனால் பயன் என்ன...?

 ராஜ ராஜ சோழன் காலகட்டம் என்பது 10 நூற்றாண்டாகும் ... அப்போது உள்ள நிலை என்ன..? அப்போதுள்ள விஞ்ஞான வளர்ச்சி என்ன ..? என்ற கேள்விகளுக்கெல்லாம் எந்த விடை இல்லாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற பாணியில் பேசுவது என்பது ஏற்புடையது அன்று...

காலத்தை கடந்து வந்த அந்த பெரும் படைப்பு... பெருவுடையார் கோயில் ....அதன் கம்பீரம்....  அந்த ஒன்று நமது கட்டிடக்கலையை பறைசாற்றவில்லையா ....?

குறைதானே  கண்டுபிடிக்கவேண்டும் .....

  ராஜராஜசோழன் சோசலிசம் கொண்டுவர முயற்சி செய்யவில்லை என்று கூட சொல்லலாம்...

 கால தேச வர்த்தமானம் என்று ஒன்று தேவை இல்லை போலும்....


 அது சரி புத்தர் புலால் உண்பதை எதிர்த்தார் அல்லவா..?  பழைய சனாதன கொள்கையில் எருதை கொள்வது பாவம் என்று தானே பௌத்தம் சொன்னது ...

ஒரே குழப்பம் போங்கள் 

வியாழன், 6 ஜூன், 2019

புரிந்து கொள்ள முடியவில்லை.........

  இந்தி பாடல்களை     ரசித்துக்கொண்டிருந்த தமிழர்களை,  தமிழ் பாடல்கள் பக்கம் மீண்டும் திரும்ப வைத்தவர்த்தான்   இசைஞானி ..

தமிழ் இசைக்கு மீண்டும் புத்துயிர் அளித்த இசை இசைஞானியின் இசை என்பதில் இரு வேறு கருதில்லைதான் ..

ஆனால் என் பாடல்களை பாட ராயல்டி தரவேண்டும் என்கிற ஞானியின் கண்டிப்பு சற்று புருவத்தை உயரவைக்கிறது ..

புரிந்து கொள்ள முடியவில்லை...


வியாழன், 30 மே, 2019

பாதுகாவலர்கள் ...

என்ன செய்யப்போகிறார்கள் இந்த பஞ்ச பாண்டவர்கள்..?


 தேசிய கட்சி என்ற அந்தஸ்தை இழந்தாலும், ஐந்து எம் பி அதுவும் தமிழகத்தில் மட்டும்  நான்கு என்று கம்யூனிஸ்டுகள் பாராளுமன்றத்திற்குள் செல்கிறார்கள் ..

ஆயிரம் கருத்து மாறுபாடுகள் இருந்தாலும்  தொழிலாளர்கள் பற்றி குரல் எழுப்ப இந்த ஐந்து நபர்கள்தான் ......... இவர்களை விட்டால் யாரும் இல்லை 

அம்பானிகளுக்கும் அதானிகளுக்கும் ஆயிரம் சேவகர்கள் இருக்கிறார்கள் ..

நம்மை போன்ற உழைக்கும் மக்களுக்கு இவர்கள்தான் ..

இவர்களை தொழிலாளர்கள் பாதுகாவலர்களாக பார்க்கிறோம் ...

புதன், 29 மே, 2019

( பாகம் 2) - .தேர்தலும் படிப்பினைகளும்..


சென்ற பாகத்தில் சில கருத்துக்கள் பற்றிப் பார்த்துவிடுவோம்:

 “பிராமணர்கள்  இப்போதுதான் ஆக்கிரமிப்பு செய்தார்கள் என்று திராடவிடர்கள் பிரச்சாரம் செய்தார்களா ‘’ என்ற கேள்வியை சில அன்பர்கள் கேட்டார்கள்…  

இது தற்போது செய்யப்பட்ட பிரச்சாரம் இல்லை.. மாறாக பல ஆண்டுகளாய் நடக்கும் விஷயம் …. இது காலம் காலமாக திராவிட கட்சிகள் தமிழக பெரும்பகுதி B.C. உழைக்கும்   மக்களுக்கு கூறிவருவது…    பெரும்பகுதி B.C. உழைக்கும் மக்களை ஆக்கிரமித்துள்ள சிந்தனை….  இதுவே திராவிட கட்சிகளின் உயிர்நாடியாக உள்ளது...  தமிழகம் கேரளம் தென்னிந்தியாவில் வாழும் உழைக்கும் மக்கள் கல்வி வேலைவாய்ப்பு ஆகியவற்றில்  காட்டும் அதீத முனைப்பையே இது … வட இந்தியர்களை விட ….. யாரினும் மேலாக….

சரி இப்போது பிரதான கேள்விகளுக்கு வருவோம்..
பி யில் பிஜேபி 50%சதம் மேல் வாங்கி (MAHA GADBANTHAN)  மகா கூட்டணியை  வீழ்த்தியுள்ளதுஇந்தச் செய்தி கூறுவது என்ன ? எப்படி தமிழக மக்களை திராவிடக்கட்சிகள் ஒரு கேள்விக்குள் வைத்திருந்தோ….  அதே போல் வேறு ஒரு  கேள்வியை இந்தி பேசும் வட நாட்டு மக்களிடம் பிஜேபி மற்றும் அதன் துணை அமைப்புகள் தொடர்ச்சியாக வைத்தன…

நாம் ஹிந்து .. நமது கலையை கலாச்சாரத்தை பண்பாட்டை சிறுபான்மை மதங்களும் அதனை ஆதரிக்கும் கட்சிகளும் சீரழிக்கின்றன….. இந்த ஒரு பிரச்சாரம் பல வழிகளில் வகைகளில் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாய் மௌனமாக நடந்து வர வர அம்மக்கள் முழுமையாக இந்த பிரச்சாரத்திற்குள் சென்று விட்டதையே பிஜேபி வெற்றி நமக்கு எடுத்துக்காட்டுகிறது… இந்த சிந்தையிலிருந்து அம்மக்கள் பிஜேபி நினைத்தாலும் வெளியே வருவார்களா என்பது தெரியவில்லை..

இது ஒரு புறம் இருக்க,  இந்தக் குற்றச்சாட்டு உண்மையா என்பதை பார்க்கலாம்..  இதற்கு விடை ஆம் இல்லை என்று இரண்டும் சொல்ல வேண்டும்..

சாதாரண கூலி வேலை செய்யும் வட இந்திய உதிரி முஸ்லீம் மக்கள்தான் இவர்கள் மதத்தை அழிகிறார்களா என்றால்.. கேலிக்கூத்து பெரும் கேலிக்கூத்து என்று கத்த வேண்டும் போலுள்ளது….

அதே சமயம் உலகெங்கும் வஹ்ஹாபியர்கள் அச்சுறுத்தல் இருக்கிறது இல்லையா என்றால், ஆமாம் இருக்கிறது என்ற உண்மையும் சொல்லவேண்டும்.. இங்குதான் பிஜேபி அல்லாத கட்சிகள் தடுமாறுகின்றன… எங்கே இதை சொன்னால் நமக்கு சிறுபான்மை ஓட்டுக்கள் சிதறிவிடுமோ என்று அஞ்சுகிறது… வடநாட்டு இந்து மனப்பான்மைதான் ராகுலை மண்ணைக் கவ்வ வைத்தது…  சிறுபான்மையினரை பகைக்கக்கூடாது என்ற எண்ணம்,  வஹ்ஹாபிய அச்சுறுத்தலை சினிமாவாக நிழலில் பேசிய கமல், தேர்தல் சமயத்தில் இந்து தீவிரவாதம் என நிஜத்தில்  பேச வைத்தது..

ஒரு புறம் புல்வாமா தாக்குதல்  கொடுமை நடந்து முடிந்த உடன் இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையில் சர்ச்சில் நடந்த கொடுமையை    எந்த கட்சியும் (பிஜேபி தவிர)  பேச  மறுக்கின்றன .. 
  

இந்தத் தடுமாற்றம் இந்த கட்சிகளுக்கு தீரும் வரை பிஜேபியின் காட்டில் மழைதான்

அதை போல உழைக்கும் பிற்படுத்தப்பட்ட தமிழர்களின் சந்தேகத்தை தீர்க்கும் வரை  தாமரை தமிழகத்தில் மலருவதும் கடினம்தான்..


ஞாயிறு, 26 மே, 2019

தேர்தலும் படிப்பினைகளும் ( பாகம் 1).


பிஜேபியின் இரண்டாம் ஆட்டம் பல முற்போக்கர்களை வியப்படைய வைத்துள்ளது … அதிர்ச்சிக்கும்   உள்ளாகியிருக்கிறார்கள் .

தேர்தலுக்கு முன் அடியேன் பிஜேபி  200+ என்றும்     காங்  150+ என்றும் கூறியிருந்தேன்..    இதை சில பிஜேபி -எதிர்ப்பு நண்பர்கள் அடியேன் கூற்றை ஏற்கவில்லை..


  ஆனால் தேர்தலுக்கு  முன்னரே எனக்கு ஒரு உறுத்தல் இருந்தது.. ஏனோ பிஜேபிக்கு எதிராக வட இந்தியர்கள் இருப்பதை அடியேனின் மனம் எந்த நிமிடத்திலும் உணரவில்லை …   அதே சமயம் பிஜேபி குறைந்த MPகளுடன் ஆட்சி அமைக்கும் என்று நம்பினேன் …  

ராஜிவ் காலத்தில் போபோர்ஸ் பிரச்னையின் போது இந்திய முழுவதும் ஒரு எதிர்ப்பு இருந்ததை என்னால் பார்க்க முடிந்தது…  ஆனால் இந்த முறை மோடிக்கு எதிராக இந்தியர்கள் அதிலும் குறிப்பாக வட இந்தியர்கள் இல்லை என்று உணர முடிந்தது ..ஆனால் GST பணமதிப்பிழப்பு  போன்றவற்றால் மோடிக்கு   ANTI-INCUMBENCY இருக்கும் என எண்ணினேன்…  அதனால்தான் இந்த முறை மோடிக்கு 200+ என்று எழுதினேன்.. அதன் பலன்களாக காங்கிற்கு 150+ என்று வரும் என்று கணித்தேன்..

 தேர்தலுக்கு பின் சில விஷயங்கள்  புலனாகிறது..


ஒரு முழக்கத்திக்கு ஆதரவாக ஒரு கட்சி கட்டப்பட்டால் அது நிச்சயம் எடுபடுகிறது.. அதுவே அந்த முழக்கம் நிலவும் சூழலுக்கு எதிராக இருந்தால் அதை மக்கள் நிராகரிக்கிறார்கள் பிஜேபியின் இந்து முழக்கம் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்..


தனிநபர் துதியை வைத்து கட்டப்பட்ட கட்சிகள் MGR, ஜெ யின் அதிமுக..


 காங்கிரஸுக்கும் இந்தப் பிரச்சனை  உள்ளது ராஜிவ் அதன்  பிறகு சோனியா அதன்  பிறகு ராகுல் பிரியங்கா என்று தனிநபர் முன்னிலை படுத்தும் கட்சியாகி விட்டது…. இந்தியாவில் பெரும்பாலும் அவ்வாறான கட்சிகள்தான் உள்ளன.. ஆந்திராவின் மாநிலக் கட்சிகள் மொழியை முழக்கமாக வைத்திருக்கும் கட்சிகள் ஆகும். அங்கு பிஜேபி காங் எடுபடவில்லை,, YSR கட்சி நம்ம ஊர் தமிழ்மாநில மூப்பனார் போல் வந்துள்ளது. 


கம்யூ கட்சிகள் திட்டவட்டமான கொள்கைகள் உடைய கட்சியாகும்.. வரையறை செய்யப்பட்ட கொள்கையின் கீழ்கட்டப்பட்ட கட்சியாகும்


 ஆனால் உலகெங்கும் வலது சாரி அலை வீசும் காலகட்டத்தில் அவர்களால் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை .. தமிழக நிலையுடன் நாம் ஒப்பிட்டால்  இந்த விஷயம் எத்தனை வீரியமானது என்று புரியும்..


 தமிழக மண் என்பது பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகம் வாழும் இடம்….    குறிப்பாக 97% சதம் எனலாம்… இந்த மண்ணில்தான் பெரியாரின் நாத்திகப் பிரச்சாரம்  கடுமையாக எடுபட்டது…. அதற்கு ஆயிரம்  காரணங்களை திராவிட ஆதரவாளர்கள் அடுக்கினாலும்,அடியேன் புரிந்து கொள்வது இதுதான்..




 பார்ப்பனர்கள் முன்னேறிவிட்டனர்நீங்கள் முன்னேற வேண்டும் என்றால்  எங்களை ஆதரிக்க வேண்டும் இல்லை என்றால் உங்களால் முன்னேற முடியாது என்கிற  பிரச்சாரத்தை திராவிட  இயக்கம் வலுவாக   எடுக்க  அதை பெரும்பான்மை  மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்…..


  பிராமணர்கள் ஆட்சிக்கு வந்தால் ஒதுக்கீட்டை எடுத்துவிடுவார்கள் என்கிற தீவிர பிரச்சாரம் பெரும்பான்மை பிராமணரல்லாத மக்களிடம் எடுபட்டது... ஆனால் பிராமணரல்லா பெரும் பகுதி மக்களின் இந்த உணர்வு நிலை ஒரளவு உண்மையும் கூட..

இந்த அச்ச உணர்வு தொடர்ச்சியாக பிராமணர் அல்லாத மக்களை திராவிட கட்சிகளை நோக்கித் தள்ளின.

இதுதானே தவிர தமிழக மக்கள் பிராமணர்களுக்கும் இந்துக் கடவுளர்களுக்கும் எதிரானவர்கள் என்பது பச்சைப் பொய்.  இது உண்மையாக இருந்தால் இங்கே பிராமணர்கள் அவர்கள் கௌரவத்துடன் வாழமுடியாது.  இந்துக் கடவுளர்களின் பெரும்பான்மை கோவில்கள் தமிழகத்தில்தான் உள்ளது.  இந்தியாவிலே அதிக அளவு பக்திமான் இங்குதானோ என்று வியக்கும் வண்ணம் நேர்த்திக்கடன்கள் வேண்டுதல் கூட்டங்கள் திருவிழாக் காலங்களில் அலைமோதுகிறது.  


இந்த ஒற்றைப் புள்ளிதான் தமிழக மக்களின் முழக்கமே தவிர இது நாத்திக பூமி என்பதை அடியேனால் துளியும் ஏற்க இயலவில்லை.   அதி தீவிர திராவிடர்கள் இதற்கு அவர்களுக்கு ஏற்ற விதத்தில் வியக்யானம் செய்து கொண்டுவருவார்கள்.


இவ்வித அதி தீவிர திராவிடர்கள் உண்மையில் வெகு சொற்ப சதவிகித்தினர்தான்.

இந்த அதி தீவிர திராவிடர்கள் சொல்வது பற்றியும் இந்தியாவின் பிஜேபியின் இந்து polarization பற்றியும் முஸ்லிம் வஹ்ஹாபியர்கள் பற்றியும் அடுத்த பதிவில் பார்க்கலாம்