சனி, 15 ஆகஸ்ட், 2015

தமிழில் ஒரு ஈரானிய சினிமா....

Image result for kaaka muttai

முதலில் காக்கா முட்டை படம் வெளியாகி வெகுநாட்களுக்குப் பிறகு விமர்சனம் எழுதுவதற்கு மன்னிக்கவும். ...ஏதோ விஜய் டிவியின் தயவில் பார்க்க நேரிட்டது... வாழ்க விஜய் டிவி....அசிங்கமாக தைய்யா தக்கா என்று குதிக்கும் நமது  செந்தமிழ்த் திரைப்படங்களுக்கு மத்தியில் இப்படி ஒரு ரத்தினம் எப்போதோ வந்து திக்குமுக்காட வைக்கிறது...

யார் அந்தப் பையன்கள் மற்றும் படத்தை எழுதி இயக்கிய மணிகண்டன் அவர்கள்.. ???

ஈரானியப் படம் offbeat மேற்குலக செதுக்கிய சிற்பப்படங்கள் என்று சிலாகிப்பது தேவையற்றது என்று நான் உணர்ந்த தினம் இது...  

நிச்சயமாக நம்மிடம் உள்ள படைப்பாளிகள் உலகத் தரத்திற்கு சற்றும் சளைக்காதவர்கள்தான் என்பதை அந்த ஆண்டவன் மீது சத்தியமாக கூறுகிறேன்...

ஆனால் அவர்களை எப்படி இனம் காண்பது...

காக்கா முட்டை.....

நமது contemporary வாழ்க்கையை சமகால சமூகத்தை அதன் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை  அழுத்தம் திருத்தமாக முகத்தில் அறைந்தாற் போல் தோலுரித்துக் காட்டும் வன்மையாக படம்... 

குப்பத்து வாழ்க்கை... தீப்பெட்டி போன்ற இடத்தில் அவர்கள் வசிக்கும் அல்லது அண்டும் வீடு போன்ற ஒரு இடத்தைக் காண்பிப்பதாகட்டும்

சிறு பிரச்சனையை கிடைத்தாலும் அதை எப்படி அரசிலாக்கி சம்பாதிக்கலாம் என்று துடிக்கும்  பிழைப்புவாத கட்சிகளாகட்டும்

டிவியின் TRP RATING கிற்காக அதை ஊதிப் பெருக்கும் ஊடகங்களின் பெரும் பசியாகட்டும்

அதை வைத்து காசு பார்க்கும் ரவுடிகளாகட்டும்

நடுவில் போலீஸ் தனது வேலையை காட்டுவதாகட்டும்

எத்தனை நடந்தாலும் எதுவும் தெரியாத அந்தப் பையன்களின் அப்பாவி தாயாகட்டும்

இறுதியில் லாபதிற்காக ஒரு தேர்ந்த முதலாளி என்ன செய்வானோ அதை செய்து விஷயத்தை முடித்துவைத்ததாகட்டும்...

உண்மையாக சினிமா ரசிகர்கள் தமிழ்ச் சினிமா மேலும் மேன்மையுற வேண்டும் என்று உண்மையாக நம்பும் ரசனை மிக்கவர்கள்  மணிகண்டன்களை உயர்த்த வேண்டும்... 

இதோ... இதோ.... தமிழில் ஒரு ஈரானிய சினிமா....

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

சுந்தர் பிச்சை.......


  1. Image result for sundar pichai

  2. மைக்ரோசாஃப்டின் தலைவராக சத்ய நாராயண நாதெள்ள வந்த போதும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது,,,

ஆனால் தற்போது சுந்தர் பிச்சை கூகிளின் தலைராக வரும் போது அது இரட்டிப்பு மகிழ்ச்சியாகிறது,,

அது வேறு ஒன்றுமில்லை... தமிழர் என்பதால்.....

நான் மொழிப்பித்தனல்லன்...

இருப்பினும் ,,,,,

தனி மகிழ்ச்சி,,,,

வாழ்க சுந்தர்...

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

சசிபெருமாள்- மதுவிலக்கு- ராஜாஜி

புரட்சியும் போராட்டக்களமும் தமிழக சூழலில் கேலிப் பொருளாகத்தான் இருக்கிறது... இருப்பினும் நாம் அவ்வப்போது சில உண்மையான மகாத்மாக்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்... நம் கண் முன் தோன்றி மறைந்து கொண்டிருக்கிறார்கள்..... அப்துல்கலாம் மறைவை ஒட்டி  மிக வேதனையான தருணம் சசிபெருமாள் என்கிற காந்தியவாதியின் மறைவு...

வியாழன், 30 ஜூலை, 2015

அப்துல் கலாம்...

கடையடைப்பு செய்யச் சொல்லி எவரும் வற்புறுத்தவில்லை....ஆனால் பெரும்பான்மை கடைகள் மூடப்பட்டிருந்தன.....மக்கள் நடமாட்டம் நகரில் காணப் படவில்லை....ஒரு “பந்தைப்“ போல தெருக்கள் காட்சியளித்தது இன்று....

படித்தவர்கள் மட்டுமல்ல பாமரர்களும்கூட உண்மையில் வருந்திய ஒரே இழப்பு....

ஆட்டோ ஓட்டுனர்கள, கூலித் தொழிலாளிகள் முதல் மாணவர்கள் அரசு தனியார் ஊழியர்கள் அனைவரும் தன்னெழுச்சியாக எந்த அரசும் கேட்டுக் கொள்ளாமல்  அஞ்சலிக் கூட்டம்  செலுத்துகிறார்கள்... போஸ்டர் ஒட்டுகிறார்கள் ப்ளக்ஸ் பேனர்கள் வைக்கிறார்கள்...

ஆக மொத்தம் மக்கள் ஒரு தன்னெழுச்சியாக நாடெங்கும் திரண்டார்கள்..
இந்த மகா மனிதனுக்கு... 

வரலாற்றில் மகாத்மா காந்திக்குப் பிறகு உண்மையில் மக்கள் அஞ்சலி நடந்தது இன்றுதான்...
Image result for abdul kalam stills

அப்துல் கலாம்.... வாழ்க நீ எம்மான்....
என்றும் உன் புகழ் நீடித்து நிலைத்து நிற்கும்....

வெள்ளி, 24 ஜூலை, 2015

நடிகர் சண்டை....

நடிகர் சங்கம் பற்றிய  செய்திகளை அவ்வப்போது படிக்க  நேர்கிறது.   நடிகர் சங்கம் தேர்தல் பற்றிய   வழக்கு இன்னமும் நிலுவையில்  இருக்கயில் தீர்ப்பு வந்தபின் தான்  தேர்தல் பற்றி தெளிவாகும் ...

செவ்வாய், 14 ஜூலை, 2015

இசைத் தேன்.....




காதில் தேனைப் பாய்ச்சியவர்......
கண்களில் நீரைப் பாய்ச்சிவிட்டார்......


வெள்ளி, 10 ஜூலை, 2015

ஆபத்தான பாதை...

பீஹார் மாநிலத்தின் மேலவைக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் பாதிக்கு மேல் கிரிமினல் வழக்கு உள்ளவர்களாம் என்கிற செய்தியைப் படிக்க நேரிட்டது.....

இந்தப் பக்கம் மத்திய பிரதேசத்தில்  நடப்பது எல்லாமே விபரீதம்தானோ  என்று எண்ணத் தோன்றுகிறது...  முதலில் யூனியன் கார்பைட் படுகொலைகள் தற்போது “வியாபம்“ என்கிற  SERVICE COMMISSION ... பொதுவாக எல்லா மாநிலத்திலும் அந்தந்த மாநில சர்வீஸ் கமிஷன் பரிட்சையில் ஊழல்கள் இருக்கும்... தமிழகத்திலும் நாம் கேள்விப் படுகிறோம்,....  ஆனால் ம.பி யில் நடப்பது வெறும் ஊழல்கள் மட்டுமல்ல கிட்டத்தட்ட 48 படுகொலைகள்... அனைவரும் இந்த ஊழல்கள் வெளிவர காரணமானவர்கள்... “அட அது அதிகம் பேசறாங்க சார்.. ஒரு ஏழு அல்லது எட்டு (?) பேர்தான் இருக்கும்...“ என்கிறார்கள் ஆளும் கட்சி ஆதரவாளர்கள்...

சற்றும் ஏற்க முடியாத கொடுமைகள் இவைகள்... ஊழல்களைக் கூட சகித்துக் கொண்டு வாழ்ந்துவிடலாம்... படுகொலைகளை சற்றும் ஏற்க முடியாது....

மக்களின் சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் பெரும் ஆபத்திற்கான அறிகுறிகள் இவைகள்...

முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியவை....