வெள்ளி, 30 செப்டம்பர், 2016

சரியான பதிலடிதான்..

காஷ்மீர் மாநிலம், யூரியில் சமீபத்தில், அதிகாலை வேளையில் தூங்கிக்கொண்டிருந்த  நமது ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான்  ஆதரவுத் தீவிரவாதிகள்     தாக்குதல் நடத்தியது படு கேவலமானது.

இந்தத் தீவிரவாதிகள் அழித்தொழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக்  கருத்தில்லை..   அநியாயமாக  நமது 18 ராணுவ வீரர்களை பலி கொடுக்க  நேர்ந்துவிட்டது,,

அதற்கு பதிலடியாக நேற்று நமது ராணுவ வீரர்கள் POKயில் தீவிரவாத முகாம்களை அழித்தொழித்திருக்கிறார்கள்.. அதில் பாக் ராணுவ வீரர்களும் உண்டு..

ஏற்கனவே சார்க் மாநாட்டில் இந்தியா பங்கேற்காததால் சார்க் மாநாடே காலியானது.. இத்தனை பட்டும் பாக் திருந்தாமல் காஷ்மீரத்தில் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தந்து கொண்டிருக்கிறது..

நேற்று நமது வீரர்கள் நடத்திய பதில் தாக்குதல் போன்ற மொழிகள்தான் அவர்களுக்குப் புரியும் என்றால் அதை தொடர்வதைத் தவிர வேறு மார்க்கமில்லை என்றே தோன்றுகிறது..
                                   

திங்கள், 19 செப்டம்பர், 2016

என்னத்தை சொல்ல...?

எதையும் சந்தேகத்திற்கிடமில்லாமல் நீரூபிக்க வேண்டும்… நீதிமன்றம் அப்படி இல்லாவிட்டால் முற்றிலுமாக நிராகரித்துவிடும்… அப்படி செய்ய முடியாத சூழலில் இப்படித்தான் எதிர்கொள்ள வேண்டுமா…,?

நம்முடைய புலனாய்வு ஒரு காலத்தில் பிரமாதமாகப் பேசப்பட்டது…  தற்போது இந்தத் துறை மட்டுமல்ல எல்லா  துறையும் பின்னடைவாகத்தான் இருக்கிறது… காரணம்…

அதிகார துஷ்பிரயோகம்..
லஞ்ச லாவண்யம்..
மெத்தனம்… அசிரத்தை..
அரசியல் தலையீடு..
சாதிப்பாகுபாடு..

இத்தனையும் மீறித்தான் நாம் வாழவேண்டியிருக்கிறது…  சில சமயங்களில் சில நல்ல விஷயங்களும் நடக்கிறது…


நான் எதை குறிப்பிடுகிறேன் என்று தெரிகிறதா… காவிரி பிரச்சனையைத்தான் சொல்கிறேன்… நீங்கள் வேறு எதையும் முடிச்சுப் போட்டுக் கொள்ளாதீர்கள்…

வியாழன், 8 செப்டம்பர், 2016

இதை எந்தக் கணக்கில் சேர்ப்பது...?

இன்று டெல்லியில் தேசிய கட்சிகள் ஒன்று சேர்ந்து காஷ்மீர் பிரச்சனையை விவாதித்தார்கள்..

அனைவரும் - கம்யூனிஸ்ட் கட்சிகள் சேர்த்து - ஒருமித்து இந்திய ஒருமைப்பாட்டுக்கு பங்கம் வரும் எந்த முடிவையும் ஆதரிக்க முடியாது என்று கூட்டு முடிவை எடுத்திருக்கிறார்கள்..

உண்மையில் ஆதரிக்கப்பட வேண்டிய செய்திதான் ..

ஆனால் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் அளவிற்கு மாண்டியாவில் கூடிய கன்னட வெறி அமைப்பினர் காவிரி தாவாவின் உச்ச நீதி மன்றத் தீர்ப்பை மதிக்காமல், தமிழக லாரிகளை அடித்து நொறுக்குவதும்  சாலைகளை துண்டிப்பதும்  தொடர் பந்த் செய்வதும் முதலில் நிறுத்த வேண்டிய அவசியம் உள்ளதா இல்லையா என்பதை அதே தேசிய கட்சிகள் கூற வேண்டும்,,,,

செய்வார்களா...? 

சனி, 6 ஆகஸ்ட், 2016

நம்மிடம்தான் பிரச்சனை....

தமிழ்மணத்தின் பல ஆண்டு கால வாசகன் நான்..  ஆனால் வலை தளம் தொடங்கியது மே 2013தான்… 

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

தையலை உயர்வு செய்கிறாயோ இல்லையோ... காப்பாற்று....

தஞ்சை அருகே இளம் பெண் கற்பழித்துக் கொலை...
விழுப்புரம் அருகே இளம் பெண் மண்ணென்ணை ஊற்றிக் கொலை...
வட இந்தியாவில் டெல்லி கான்பூர் பிரதான சாலையில் காவல் நிலையம் அருகே தாயும் மகளும் கற்பழிப்பு....

உண்மையில் உலகெங்கும் அதிகம் கற்பழிப்பு நடக்கும் நாடு நமது நாடுதானா... ( இதில் முதல் இரண்டு ரேங்கா... கேவலம்..)...

என்ன ஆயிற்று நம் நாட்டு ஆண்களுக்கு... உண்மையில் ஏதோ போதாமை குறைபாடு இருக்கும்... உடனடியாக ஒரு கவுன்சலிங் அனைத்து தரப்பு ஆண்களுக்குத் தர வேண்டும் என்றே தோன்றுகிறது...

ஊடகம் பெருகியதால் இத்தனை செய்திகள் என்பதில் ஒரளவு உண்மைதான்... முன்பு நடந்ததை வெளிக் கொண்டு வராத காரணத்தால் இதைப் பற்றி நமக்குப் பெரிதாகத் தெரியவில்லை....

ஆனால் உண்மையில் உடனடியாக ஒரு நல்ல கல்வி ஆண்களுக்கு அவசியம்... பெண்கள் என்றால் சக மனிதர்கள்தான் என்று....

திங்கள், 1 ஆகஸ்ட், 2016

கபாலிடா.....(ன்)

தற்போதுதான் கபாலி பார்க்க முடிந்தது... மிகப் பெரிய வணிகப் புயல் வணிக சுனாமியால் உடனடியாகப் பார்க்க இயவில்லை....
Image result for kabali


ரஜினி, ரஞ்ஜித், தலித் அடையாளம், பெரும் பட்ஜெட் என்று மாறி மாறி ரஜினியின் எந்தப் படத்திற்குமில்லாத ஒரு ஹைப்  இந்தப் படத்திற்கு        உருவாகிவிட்டது... ஒரு சாதாரண ஆனால்உ ண்மையான ரஜினி ரசிகனால் படத்தை பார்க்க முடியாமல் ITகாரர்கள் ஆக்கிரமித்துவிட்டார்கள் என்கிற குற்றச் சாட்டை வினவு உட்பட பல ஊடகங்கள்  ஆதாரத்துடன்    வெளியிட்டன... 

எல்லாம் ஒரு புறம் இருக்க...

ஒரு படத்தை படமாகப் பார்க்க வேண்டும் என்று பார்த்தால், இந்தப் படம் பற்றிய ஒரு தீர்க்கமான முடிவுக்கே வர முடியவில்லை... ஒரு புறம் ரஞ்ஜித் என்கிற புதுமை இயக்குனர்....... மெட்ராஸ் என்கிற கலைப்படைப்பை தந்தவர். 

மறுபெரும் ரஜினி என்கிற பெரிய பிம்பம்...  இன்ன பிற பிரபல நடிகரைவிட          உண்மையில் ரஜினி முறைப்படி நடிப்புக் கலையை பயின்றவர்... அவரின் உண்மையான திறமையை இது வரை  எந்தப் படமும்  வெளிக் கொண்டு வரவில்லை என்பதுதான் என் எண்ணம் ... காரணம் அவர் விரும்பியோ விரும்பாமல் அவரைத் தொடர்ந்த அந்த மாஸ் ஒளிவட்டம் ...   

அதையும் மீறி   ரஞ்ஜித்  கலைப் படமாக்க முயற்சித்திருக்கிறார்... ஆனால் வெற்றி பெற வில்லை என்பதுதான் உண்மை...  ஆக கலைப் படத்திற்கும் மசாலாவிற்கும் இடையே படம் அல்லாடுகிறது...

இன்னமும் முயற்சி தேவை ......



வியாழன், 28 ஜூலை, 2016

ஞானக் கூத்தன் மறைவு...



Image result for ஞானக் கூத்தன் படம்


கவிஞர் ஞானக் கூத்தன் மறைவு அதிர்ச்சியாக இருந்தது... 
அவரைப் பற்றியும் அவர் கவிதைகள் பற்றியும்  சில வருடங்களாகத்தான் அறிமுகம்....
அவர் கவிதைகள் படிக்க படிக்கத்தான் வாழ்க்கையின் பல பரிமாணங்களையே புரிந்து கொள்ளவே முடிந்தது...

அவரின் பிரபல கவிதை வரிகளே அவருக்கு அஞ்சலியாக கூறவதைத் தவிர வேற எதும் தோன்ற வில்லை....
""இரயிலின் கடைசிப் பெட்டியின் பின்புறம்போல்
சோகம் தருவது உலகில் வேறேது?"