சனி, 6 ஜூலை, 2013

இளவரசன் திவ்யா

”ஊருல ஒலகத்தில எங்க கத போலவும் நடக்கலயா...”

இளையராஜாவின் கிராமிய மணம் கமழும் இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலம்..
 இளம் உள்ளங்கள்...... குறிப்பாக பதின்பருவம் என்பது மிகவும் சிக்கலானது. உள்ளங்கள் இடமாறும் வயது.. அதற்கான காரணங்கள் எவை என்று எப்படி அறுதியிட்டுச் சொல்ல இயலும்.. 20 - 30 வருடங்களுக்கு முன்பே நமது பார்வைகள் மாறித்தான் போயிருக்கின்றன.. சாதி மதம் மொழி இனம் பேதம் என்று எத்தனையோ விஷயங்களில் much water flow under the bridge என்றே சொல்ல வேண்டும். காரணம் உலகம் மேலும் மேலும் ஜனநாயகப் பட, நமது பொதுப் புத்தி என்பது கணிசமான அளவிற்கு மாறித்தான் போய் உள்ளது.

இந்த நேரத்தில்தான்.. அரசியல் ஒரு தனிப்பட்ட வாழ்க்கைவரை பாய்ந்திருக்கிறது. 

வயது அந்தஸ்து சமூகக் கட்டுப்பாடு போன்ற விஷயங்களை அந்த ஜோடி பார்க்கவில்லை என்று குற்றம் சாட்டுவது எளிதுதான்.. அப்படி ஒரு வாதத்திற்கு அவர்கள் தவறே செய்திருந்தாலும் அதைத் தட்டிக் கேட்டும் உரிமை என்பது அந்தந்த குடும்ப உறுப்பினர்களைச் சார்ந்தது..  முழுக்க முழுக்க private affair.....

என்னவென்று சொல்வது... அந்தச் சின்னப் பையனின் மரணம் உண்மையில் ஈரக்குலையை நடுங்க வைத்துவிட்டது. என்ன சொல்லி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை...

கருத்துகள் இல்லை :