ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

டிரைலாஜி (TRILOGY)...

பணியிடம் மாற்றத்தால் எதையும் எழுத முடியவில்லை.. ஆனால் பார்க்க முடிந்தது..  குறிப்பாக புரட்சி என்றால் என்ன  போராட்டம் என்றால் எப்படி இருக்கும் ....?  ஜல்லிக்கட்டுக்காக   மாணவர்கள் இளைஞர்கள் நடத்திய போராட்டம் ஒரு மிகப் பெரிய படிப்பினை...

எத்தனை பெரிய போராட்டத்திலும் இப்படிப்பட்ட ஒழுங்கு இருந்திருக்குமா என்பது தெரியவில்லை.. கடந்த வருடம் மத்திய அரசு வெறும் அனுமதி வழங்கிய போதே நான் இப்படி எழுதியிருந்தேன்::-
ஆனால் அந்தப் பதிவு காய்வதற்குள் மீண்டும் தடை வந்தது.. தற்போது அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறது.., மக்களின் கோபம் ஏன் என்பதைற்கு பல காரணங்கள் இருக்கிறது

1) கர்நாடகாவின் தண்ணீர் திறப்புக்கு முட்டுக்கட்டை மற்றும் தமிழர்கள் மீதான் தாக்குதல்
2) அரசியல் வாதிகள் சூது, ஊழல், மக்களின் பிரச்சனை மீதான்  மெத்தனம்
3) தமிழக மக்களின்  உண்மையான அபிலாஷைகளை பிரதிபலிக்காமல் வெற்றுக் கூச்சலிடும் சுயநலம் பிடித்த அனைத்து அரசியல் கட்சிகள்
4) நமது அமைப்புகளின் தடித்தனங்கள்

போன்றவை மக்களை கொதிப்படைய செய்திருக்கின்றன என்பது தெளிவாகப் புரிகிறது..

ஆனால் மத்திய அரசு அரசாணையை ஏற்றுக் கொண்டவுடன் அப்போதே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம்.. வழமையான நம்பிக்கையின்மை தலைமையின்மை ஆகிவற்றாலும் போராட்டத்தில் கலந்து கொண்டு அதிருப்தி கொண்ட ‘சிறு குழுக்கள்’ உட்புகுந்து தங்களின் அஜெண்டாவை உட்புகுத்தியதாலும் போலீஸ் தங்கள் வழக்கமான முகத்தைக் காட்டியது... அது ஒரு சோக முடிவு எனலாம்
                                                    +++++++
நான் சமீபத்தில் படித்த ஒரு அற்புதப் படைப்பு பின் தொடரும் நிழலின் குரல்.. அப்பப்பா... இத்தனை நாட்கள் இதை வாசிக்காமல் இருந்திருக்கிறேனே என்கிற குற்றவுணர்வுதான் மேலோங்கியது.. பொதுவாக ஜெமோவின் பெரும்பான்மை  படைப்புகள் படித்திருக்கிறேன்.. தினந்தோறம் அவர் வலைத்தளத்தை படிப்பதையே ஒரு கடமையாக செய்து வருகின்றேன்.. ஆனால் அந்த அற்புதப் படைப்பை ஏன் விட்டிருக்கிறேன்..
ஒரு நாவல் என் மனதைப் போட்டு பாடாய்ப் படுத்தும் என்பது ரொம்ப நாட்களுக்குப் பின் தற்போதுதான் பார்க்கிறேன்.. காரணம் எனது முப்பது வயதுகளில் கல்கத்தா நகர் வீதிகளில் UP UP SOCIALISM DOWN DOWN CAPITALISM என்று கத்திக் கொண்டு சென்றவன்தான்... சோவியத் வீழ்ச்சி பற்றி உலகில் சிறப்பான படைப்புகள் வந்திருக்கலாம்.. ஆனால் இந்தப் படைப்பு அதற்கு சற்றும் குறைவில்லாத படைப்பு... என் தொழிற்சங்கப் பணியில் அருணாச்சலம் அளவிற்கு அனுபவம் இல்லைதான்.. ஆனால் ஒரு 5 சதவிகிதம் அனுபவம் இருப்பதால் இது ஒரு ஆன்மாவைத் தொடும் படைப்பு.,, எனது கேள்விகளுக்கு இந்தப் படைப்பு பதில் கூறிகொண்டே செல்வதைக் கண்டு பிரம்மிப்பாக படித்து முடித்தேன்.. மீண்டும் சுவைக்கப் போகிறேன்...
(ஆனால் மார்க்சீய அறிமுகமில்லாதவல்கள், தொழிற்சங்க அனுபவம் இல்லாதவர்கள், சோவியத் பற்றி அறிமுகமில்லாதவர்கள், படுபிற்போக்கு மதவாத முதலாளித்துவ மனம் கொண்டவர்களால் புரிந்து கொள்ளவே முடியாத படைப்பு இது)
                                                     •••••••••••••
க சீ சிவகுமார்... 20 ஆண்டுகளுக்கு முன்னாள் மதுரையில் பார்த்தேன்.. முற்போக்கு கலை இலக்கிய அமைப்பில் இருந்தவர்.. அவருடன் பேசிக்       கொண்டிருக்கும் போது அவரின் விஷயஞானத்தைப் பார்த்து வியந்திருக்கிறேன்.. பல நாட்கள் சென்னையில் பார்க்கும் போது அவர் படைப்புகளைப் பற்றி பேசியிருக்கிறேன்.. வசீகரிக்கும் அவர் எழுத்து நடை எப்போதும் படிக்காமல் விடாது.. அன்னாரின் அகால மரணம் பேரதிர்ச்சிதான்...எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..

வியாழன், 5 ஜனவரி, 2017

த்தூ...............................

Image result for bangalore metro girl molested on new year 2017  photos

என்ன மாதிரியான நாட்டில் வாழ்கிறோம்... கொடிய விலங்குகள் வாழும் ஆப்பிரிக்க காட்டில்கூட தைரியமாய் உலவ முடியுமே..
ஆனால் பாண்ட் சட்டை அணிந்திருக்கும் “மக்களைப் போல் கயவர்கள்“ உலவும் நாட்டில் வாழ்வதே அஞ்சும் நிலை ஏற்படுகிறதே..
இச்சை தணிந்த பின்னர் கசக்கி எறியும் குப்பை காகிதமா பெண்கள்... இது மனித குல விரோதமில்லையா...
ஆத்திரம் தீர இந்தக் கயவர்களை சுட்டு வீழ்த்தத் தோன்றுகிறதே... சட்டம் காவல்துறையும் என்ன செய்து கொண்டிருக்கிறது...?

த்தூ.. சொறிபிடித்த விலங்குகளா... பாவம் விலங்குகள்கூட இப்படி நடந்து கொள்ளாதே...
 நம் நாட்டு ஆண்கள் இத்தனை பாலியல் வறட்சி பிடித்தவர்களா...? 

 அவமானம்.... வெட்கம்.... 

இந்த நாட்டில் வாழ்வதே  அச்சமாக இருக்கிறது....

ஞாயிறு, 11 டிசம்பர், 2016

ஜெ ஜெ சில குறிப்புகள்.....


Image result for jayalalitha pictures
சற்று காலதாமதமாக எழுதுவதால் இந்தத் தலைப்பு உட்பட அனைத்தும் எழுதப்பட்டுவிட்டது..  ஜெ யைப் பற்றி பல பேட்டிகள் கட்டுரைகள் காட்சி ஊடகங்கள் சமூக வலைத் தளங்கள் என்று எழுதிக் குவிக்கப்பட்டுள்ளது..  அதில் முற்போக்கு பிற்போக்கு சாதியவாதம் மதவாதக் கருத்துக்கள் இடது சாரி பார்வை என்று கொட்டிக் கிடக்கிறது

இவற்றில் எது உண்மை ... வழக்கப்படி காலம் பதில் கூறும்...

என்னைப் பொருத்தவரை முதலில் ஜெ இறந்தார் என்பதையே நம்ப முடியவில்லை.. கடந்த ஆகஸ்ட் மாதம்கூட அவர் பேட்டியை பார்க்க நேர்ந்தது...  உடல் ரீதியாக எந்த வித கோளாறு இருந்ததாக தெரியவில்லை.. அப்படி ஒரு தகவலும் இருப்பதாகவும் தெரியவில்லை....

பொதுவாகவே பெண் என்பதாலும் அவர் சுபாவத்தாலும் அவரைப் பற்றிய எந்த வித செய்திகள் வருவதை விரும்பதாக நபர் தான் அவர்   என்பது தற்போது புரிகிறது..  75 நாட்கள் சிகிச்சை பெற என்ன காரணம் என்பது பற்றி கௌதமி கூட கேள்விகள் எழுப்பும் அலங்கோலம் நடைபெறுகிறது..

உண்மையில் அப்போலோ நிர்வாகம் ரிச்சர்ட் பேலே போன்றவர்கள் பொய்கள் கூற என்ன அவசியம் .. அவர்களை நம்ப மாட்டேன் என்பதும் ஏற்றக்  கொள்ள மாட்டேன் என்பதும் புரியவில்லை..     சி ஆர் சரஸ்வதி கூறியபடி ஜெயலலிதா   தன்னைப் பற்றியோ தன் உடல்நிலை பற்றியோ     பிறர் தெரிந்து கொள்ள விருப்பப்பட்டிருக்க மாட்டார்.. சி ஆர் சரஸ்வதி சொல்வதில் நியாயம் இருப்பதைப் போலவே தோன்றுகிறது... ஆனால் அரசியல் என்று வந்துவிட்டால் எதில் வேண்டுமானாலும் அரசியல் செய்யலாம்தானே..

மற்றபடி ஜெ என்றதும் நினைவுக்கு வருவது... அதிகாரம்.. போலீஸ் ... இதுதான் அவர் ஆட்சி முறை...

ஆனால் பெண்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு கணிசமாக உள்ளது என்பதை மறுக்க முடியாது.. அதன் காரணம் என்ன உளவியல் என்பது ஆராயப்பட வேண்டும்..  சாதாரண சாமானிய மக்கள் ஜெ மேல் அதீத பாசம் வைத்திருப்பதும் என்ன வித உளவியல் என்பது புரியவில்லை... இத்தனைக்கும் அவர் ஏழைகளின் தலைவர் என்பதை அதிமுக வேண்டுமானாலும் சொல்லலாம்... அவற்றில் சற்றும் உண்மையில்லை..

ஜெ யின் வாழ்க்கை என்பது BORN WITH SILVER SPOON  OR EVEN GOLDEN SPOON என்றுதான் சொல்ல வேண்டும்.. அவரே சட்டசபையில் அப்படி சொன்னதாக நினைவு ... ஏழைப் பங்காளன் ஏழைகளின் ராபின்வுட் என்பதெல்லாம் தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்வதுதான்.  சற்று நகைச்சுவையாக வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்..

அவரின் முதல் ஐந்தாண்டு கால ஆட்சியில்தான் சிதம்பரம் பத்மினி பாலியில் கொடுமை வாச்சாத்தி கொடுமை போலீஸ் கெடுபிடி போன்றவை நடந்தன.. ஆனால் அவற்றை பற்றி அவர் ஏதும் கூறியதாகத் தெரியவில்லை.. மாறாக இவற்றையெல்லாம் கண்டு கொள்ளத் தேவையில்லை என்றே கூறியிருந்தார்..    நீதியரசர் லட்சுமணன் மகன் மேல் வழக்கு பதிவு செய்ய அவர்  ஜெக்கு எதிரான வழக்கை எடுக்கவே மறுத்தார்

 அவரின் அடுத்த ஐந்தாண்டு ஆட்சியில் 1 லட்சம் அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ் மற்றும் சாலைப் பணியாளர் வேலையிழப்பும் நடந்தன..   செரினா  என்கிற பெண்ணின் மேல் கஞ்சா வழக்கு போன்றவை    அவர் ஆட்சியில் இல்லாத போதும்   மனதை பதைபதைக்க வைக்கும்  தர்மபுரி பஸ் எரிப்புக் கொடுமை சகிக்க முடியாமல் நடந்தது

 மூன்றாவது முறை  ஆட்சியின் போது  கமலின் விஸ்வரூபம் படத்திற்கு தடை   விஜய்யின் தலைவா படத்திற்கும் பிரச்சனை போன்றவை நடந்தன
அதே சமயம் ஜெயந்திரன் வழக்கு கலைஞரே தயங்கும் ராஜீவ்  கொலைக் குற்றவாளிக்கு ஆதரவான விடுதலை  சட்டசபை தீர்மானம்போன்றவை கணக்கிலெடுக்க வேண்டியுள்ளது..

ஆகச் சிறந்த ஆட்சி என்று சொல்ல முடியவில்லை என்றாலும் அவரின் சமீப கால ஆட்சியில் சற்றே mend ஆகியிருந்ததாகவே தெரிந்தது.. அவரின் மரணம் எதிர்பாராதது தீடீரென்று நிகழ்ந்துள்ளது..

எம்ஜியாரால் அரசியலில்  அறிமுகப்படுத்தப்படும் முன்பு ஒருவட இந்திய பத்திரிகை ”சான்ஸ் இல்லாத நடிகை”  என்று கேலி பேசியிருந்தது.. அதைப் பற்றி அவரே கைப்பட எழுதியிருந்த கடிதத்தில் தான் ராணி போல் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்...

ஆக அவர் கூற்றின்படி
அவர் ராணியாகவே வாழ்ந்தார் ராணியாகவே மறைந்தார்... 

வெள்ளி, 18 நவம்பர், 2016

அறுவை சிகிச்சை வெற்றிதான்.. ஆனால்...

சில  வாரங்களுக்கு முன்பு ஒரு வங்கிப் பெண் ஊழியர் மெதுவாக வேலை செய்யும் காட்சியை தனது தளத்தில் போட்ட ஜெயமோகன் அதை உடனடியாக எடுத்துவிட்டார்.. 

ஞாயிறு, 13 நவம்பர், 2016

சரியா தவறா..?

500 /1000 ரூபாய் விவகாரம் விஸ்வரூபமெடுத்து நிற்கிறது… சரியா தவறா என்கிற விவாதம்  பெருமளவில் காட்சி ஊடகங்களில் பேச்சுப் பொருளாக நடைபெற்று வருகிறது..

புதன், 9 நவம்பர், 2016

உலகெங்கும் வலதுசாரிப் புயல் ...

வலதுசாரிகள் செல்வாக்கு உலகெங்கும் பட்டொளி வீசிப் பறந்து வருகிறது என்பதை ட்ரம்ப் வெற்றி DRUM அடித்து சொல்கிறது...