இது சரியான கருத்தா.. தெரியாது.. ஆனால் என் மனதில் பட்ட சரியான கருத்து
திங்கள், 18 செப்டம்பர், 2017
வெள்ளி, 15 செப்டம்பர், 2017
உச்ச கட்ட குழப்பம் ...
அதிமுக ஜெக்கு பிறகு மூன்றாக உடைவதற்கு முன்பாக சசியை பொது செயலாளராக நியமனம் செய்தார்கள் . உடைந்த மூன்றில் இரண்டு சேர்ந்து கொண்டு சசியை பொது செயலாளர் இல்லை என்கிறார்கள் அவரை கட்சியை விட்டு நீக்கினார்களா என்றால் அதுவும் இல்லை ..
அதிமுக சட்டப்படி பொதுக்குழுதான் முழு அதிகாரம் படைத்தது .. அதனால் இதில் உள்ள குழப்படியால் என்ன செய்வது என்று முடிவு செய்யாமல் இனி ஜெக்கு பின் பொது செயலர் பதவிக்கு யாரும் இல்லை என்ற தீர்மானத்தை போட்டுள்ளார்கள்..
தினகரன் அணியோ GOVERNORரிடம் முதலமைச்சரை மாற்றுங்கள் என்று கோருவார்களாம்.. அதை கவர்னர் எப்படி செய்ய முடியும்..? அந்த கட்சியின் உள் கட்சி விவகாரம் இல்லையா போன்ற பல இடியாப்ப சிக்கலுடன் தமிழக அரசியல் இந்தியாவுக்கே வழி காட்டுகிறது..
அதிமுக வின் உச்ச கட்ட குழப்ப நிலைக்கு என்ன காரணம் என்று அலசவே தேவையில்லை காரணம் அது M.G.R- ன் வழி வந்த இயக்கம் முழுக்க முழுக்க தனி நபர் கவர்ச்சி தனி நபர் துதியால் ஆன ஒரு கட்சி எந்த தத்துவோமோ கொள்கையோ இல்லாத ஒரு கட்சி ...
திமுக வும் ஏறத்தாழ அப்படி வந்து விட்டாலும் சமூக நீதி மாநில உரிமை என்று சொல்லும்படியாக உள்ளது ...
ஆனால் MGRக்கு அடுத்து வந்த ஜெ முழுக்க முழுக்க அதை தனி நபர் செல்வாக்குடன் ஆட்டோகிராடிக் -தனமாக வளர்த்து வந்தார்... அது எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது ...
தமிழக அரசியல் என்றுதான் சரியான கொள்கை உடைய கட்சிகளால் வழிநடத்தப்படுமோ என்று ஏக்கமாக இருக்கிறது
சனி, 9 செப்டம்பர், 2017
திங்கள், 4 செப்டம்பர், 2017
NEET என்பது NEAT ஆக இருந்திருக்கலாமே ...
NEET
பற்றி நான் தான் தாமதமாக எழுதுகிறேன்
என நினைக்கிறேன் இந்த விஷயம் ஒரே
களேபரமாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக
விவாதிக்கப்படுகிறது..
இதுவரை
படித்த விஷயங்களிலிருந்து நாம் இப்படி தொகுத்துக்கொள்ளலாம்…
NEET
தமிழ் நாட்டில் மட்டும் எதிர்க்கப்படுகிறது ஏன்??
அணு
உலையை தன் மாநிலத்தில் நிறுவ விடாத கேரளாவும்
பினராயி விஜயனும் நீட்டை ஏற்பது ஏன்??
ஏற்கனவே
தமிழக அரசு மசோதாவில் தனியார்
மருத்துவ கல்லூரியில் மட்டும் NEETடை அமல் படுத்தலாம்
என சொல்லப்பட்டுள்ளதாம் … அதை செய்யாமல் விட்டது
ஏன்??
அனிதா
படித்த தனியார் பள்ளியில் 11 வகுப்பு
பாடம் சொல்லியே தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது
NEETல் அதிலிருந்துதான் கேள்விகள் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது CBSE சிலபஸ்
மட்டும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது என்பது உண்மையா...
தமிழ்நாட்டு
கல்வித்திட்டமே சரியானது என்றால் இதுவரை BITS
பிலானியில் ஒருவர் கூட சேர
முடியவில்லை என்பது உண்மையா..
தமிழ்நாட்டு
கல்வித்திட்டம் பல பத்து ஆண்டுகளை
மாற்றப்படவே இல்லை என்பது உண்மையா..
கர்நாடக
மாநிலத்தில் மருத்துவ கட்டண கொள்ளை நீட்டிற்கு
பிறகு குறைந்திருக்கிறது என்று பத்திரிக்கை செய்தி
கூறுகிறது… ஆகவே இந்த போராட்டத்திற்கு
ஆதரவு தனியார் கல்வி வள்ளல்கள்
பின்னணியில் இருக்கலாம் என்பது சரிதானே…
அனிதா
டெல்லி சென்று வர விமான
கட்டணம் தாங்கும் இடம் எல்லாம் கொடுத்து
பின் அவர் சார்பாக உச்சநீதிமன்றத்தில்
வழக்கு
தொடுக்கவில்லை என்ற செய்தி உண்மையா..
கல்வியாளர்கள்
என்ற பெயரில் பல NGO-க்கள்
இதன் பின்னல் இருக்கிறார்கள் என்பது
உண்மையா..
இந்த கேள்விகளை தெரிந்து கொண்ட பிறகு நீட் தேவையா இல்லையா என்பதை முடிவுசெய்யலாம்
ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017
எது உண்மையான இடம்...?
15 ஆண்டுகளுக்கு முன்பாக
கொடுத்த பாலியில் புகார்..
ஏற்கனவே கொலைக் குற்றச்சாட்டு வேறு தனியாக விசாரிக்கப்பட்டு வருகிறது...
தண்டனையை அறிவிக்க நீதிபதி
சிறைக்கே செல்லவேண்டிய நிலை..
எத்தனை பேர் பலி எத்தனை
வாகனம் தீக்கிரை எத்தனை நாசம்
எல்லாம் மனிதக் கடவுளுக்காக..
தேரா சச்சா சௌதா... உண்மையான இடமாம்.. என்ன உண்மையோ.....
தமிழகத்தில் பிரேமானாந்தா
கைது செய்யப்பட்டுள்ளார்...
நித்தியானந்தா புகார்
போது அவரது ஆசிரமமே அடித்து நொறுக்கப்பட்டது.
அவ்வளவு ஏன் ஒரு தீபாவளியின்
போது சங்கராச்சாரியே கைது செய்யப் பட்டார்..
இங்கே எந்த கலவரமும்
இல்லை... காரணம் பகுத்தறிவு பேசியதால்..
அதை நினைத்துப் பெருமையடைவோம்..
பிறருக்கு உதாரணமாக விளங்கினோம்...
வட இந்தியா எப்போது விழித்துக்
கொள்ளப் போகிறது...
ஞாயிறு, 30 ஜூலை, 2017
விக்ரமும் வேதாவும்
SUSPENSE AND THRILLER என்கிற இரண்டு வகை உள்ளது என்பார்கள்...

SUSPENSE என்பது நடிப்பவர்களுக்கும் தெரியாது அதைப் பார்க்கும் நமக்கும் தெரியாது...
THRILLER என்கிற வகை அதில் நடிப்பவருக்குத் தெரியாது ஆனால் பார்ப்பவர்களுக்குத் தெரியும் என்பார்கள்...
விக்ரம் வேதா இரண்டும் சேர்ந்த வகை... நல்ல விறுவிறுப்பு...
தமிழில் புதிய முயற்சி... வாழ்த்துக்கள் புதிய படைப்பாளிகளுக்கு...
SUSPENSE என்பது நடிப்பவர்களுக்கும் தெரியாது அதைப் பார்க்கும் நமக்கும் தெரியாது...
THRILLER என்கிற வகை அதில் நடிப்பவருக்குத் தெரியாது ஆனால் பார்ப்பவர்களுக்குத் தெரியும் என்பார்கள்...
விக்ரம் வேதா இரண்டும் சேர்ந்த வகை... நல்ல விறுவிறுப்பு...
தமிழில் புதிய முயற்சி... வாழ்த்துக்கள் புதிய படைப்பாளிகளுக்கு...
லேபிள்கள்:
திரைப்படம்
,
விக்ரம் வேதா
வியாழன், 13 ஜூலை, 2017
பிக் பாஸ் - முழுச் சாப்பாடு ஊறுகாயாக....
பிக் பாஸ் நிகழ்ச்சி சர்ச்சையாக வரும் முன் கமல் என்ன சொல்கிறார் என்று பார்த்தேன்.. பிறகு பார்க்கவில்லை.. ஆனால் சேரி சைவம் போன்று பல விஷயங்கள் நடந்த பின், அதை ஒட்டி கமலின் தன்நிலை விளக்கம், பிரஸ் மீட், அதை ஒட்டி டிவி விவாதம், என்று ஒரு ரவுண்டு கட்டி ஆடுகிறது பிக் பாஸ்...
என்னை பொறுத்தவரை அந்த நிகழ்ச்சி ஒரு ஊறுகாய் போல அதை முழுவதும் சாப்பாடாக சாப்பிட முடியுமா ...?
லேபிள்கள்:
கமல்
,
ரியாலிட்டி ஷோ
,
விஜய் டிவி
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)

