ஞாயிறு, 11 டிசம்பர், 2016

ஜெ ஜெ சில குறிப்புகள்.....


Image result for jayalalitha pictures
சற்று காலதாமதமாக எழுதுவதால் இந்தத் தலைப்பு உட்பட அனைத்தும் எழுதப்பட்டுவிட்டது..  ஜெ யைப் பற்றி பல பேட்டிகள் கட்டுரைகள் காட்சி ஊடகங்கள் சமூக வலைத் தளங்கள் என்று எழுதிக் குவிக்கப்பட்டுள்ளது..  அதில் முற்போக்கு பிற்போக்கு சாதியவாதம் மதவாதக் கருத்துக்கள் இடது சாரி பார்வை என்று கொட்டிக் கிடக்கிறது

இவற்றில் எது உண்மை ... வழக்கப்படி காலம் பதில் கூறும்...

என்னைப் பொருத்தவரை முதலில் ஜெ இறந்தார் என்பதையே நம்ப முடியவில்லை.. கடந்த ஆகஸ்ட் மாதம்கூட அவர் பேட்டியை பார்க்க நேர்ந்தது...  உடல் ரீதியாக எந்த வித கோளாறு இருந்ததாக தெரியவில்லை.. அப்படி ஒரு தகவலும் இருப்பதாகவும் தெரியவில்லை....

பொதுவாகவே பெண் என்பதாலும் அவர் சுபாவத்தாலும் அவரைப் பற்றிய எந்த வித செய்திகள் வருவதை விரும்பதாக நபர் தான் அவர்   என்பது தற்போது புரிகிறது..  75 நாட்கள் சிகிச்சை பெற என்ன காரணம் என்பது பற்றி கௌதமி கூட கேள்விகள் எழுப்பும் அலங்கோலம் நடைபெறுகிறது..

உண்மையில் அப்போலோ நிர்வாகம் ரிச்சர்ட் பேலே போன்றவர்கள் பொய்கள் கூற என்ன அவசியம் .. அவர்களை நம்ப மாட்டேன் என்பதும் ஏற்றக்  கொள்ள மாட்டேன் என்பதும் புரியவில்லை..     சி ஆர் சரஸ்வதி கூறியபடி ஜெயலலிதா   தன்னைப் பற்றியோ தன் உடல்நிலை பற்றியோ     பிறர் தெரிந்து கொள்ள விருப்பப்பட்டிருக்க மாட்டார்.. சி ஆர் சரஸ்வதி சொல்வதில் நியாயம் இருப்பதைப் போலவே தோன்றுகிறது... ஆனால் அரசியல் என்று வந்துவிட்டால் எதில் வேண்டுமானாலும் அரசியல் செய்யலாம்தானே..

மற்றபடி ஜெ என்றதும் நினைவுக்கு வருவது... அதிகாரம்.. போலீஸ் ... இதுதான் அவர் ஆட்சி முறை...

ஆனால் பெண்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு கணிசமாக உள்ளது என்பதை மறுக்க முடியாது.. அதன் காரணம் என்ன உளவியல் என்பது ஆராயப்பட வேண்டும்..  சாதாரண சாமானிய மக்கள் ஜெ மேல் அதீத பாசம் வைத்திருப்பதும் என்ன வித உளவியல் என்பது புரியவில்லை... இத்தனைக்கும் அவர் ஏழைகளின் தலைவர் என்பதை அதிமுக வேண்டுமானாலும் சொல்லலாம்... அவற்றில் சற்றும் உண்மையில்லை..

ஜெ யின் வாழ்க்கை என்பது BORN WITH SILVER SPOON  OR EVEN GOLDEN SPOON என்றுதான் சொல்ல வேண்டும்.. அவரே சட்டசபையில் அப்படி சொன்னதாக நினைவு ... ஏழைப் பங்காளன் ஏழைகளின் ராபின்வுட் என்பதெல்லாம் தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்வதுதான்.  சற்று நகைச்சுவையாக வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்..

அவரின் முதல் ஐந்தாண்டு கால ஆட்சியில்தான் சிதம்பரம் பத்மினி பாலியில் கொடுமை வாச்சாத்தி கொடுமை போலீஸ் கெடுபிடி போன்றவை நடந்தன.. ஆனால் அவற்றை பற்றி அவர் ஏதும் கூறியதாகத் தெரியவில்லை.. மாறாக இவற்றையெல்லாம் கண்டு கொள்ளத் தேவையில்லை என்றே கூறியிருந்தார்..    நீதியரசர் லட்சுமணன் மகன் மேல் வழக்கு பதிவு செய்ய அவர்  ஜெக்கு எதிரான வழக்கை எடுக்கவே மறுத்தார்

 அவரின் அடுத்த ஐந்தாண்டு ஆட்சியில் 1 லட்சம் அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ் மற்றும் சாலைப் பணியாளர் வேலையிழப்பும் நடந்தன..   செரினா  என்கிற பெண்ணின் மேல் கஞ்சா வழக்கு போன்றவை    அவர் ஆட்சியில் இல்லாத போதும்   மனதை பதைபதைக்க வைக்கும்  தர்மபுரி பஸ் எரிப்புக் கொடுமை சகிக்க முடியாமல் நடந்தது

 மூன்றாவது முறை  ஆட்சியின் போது  கமலின் விஸ்வரூபம் படத்திற்கு தடை   விஜய்யின் தலைவா படத்திற்கும் பிரச்சனை போன்றவை நடந்தன
அதே சமயம் ஜெயந்திரன் வழக்கு கலைஞரே தயங்கும் ராஜீவ்  கொலைக் குற்றவாளிக்கு ஆதரவான விடுதலை  சட்டசபை தீர்மானம்போன்றவை கணக்கிலெடுக்க வேண்டியுள்ளது..

ஆகச் சிறந்த ஆட்சி என்று சொல்ல முடியவில்லை என்றாலும் அவரின் சமீப கால ஆட்சியில் சற்றே mend ஆகியிருந்ததாகவே தெரிந்தது.. அவரின் மரணம் எதிர்பாராதது தீடீரென்று நிகழ்ந்துள்ளது..

எம்ஜியாரால் அரசியலில்  அறிமுகப்படுத்தப்படும் முன்பு ஒருவட இந்திய பத்திரிகை ”சான்ஸ் இல்லாத நடிகை”  என்று கேலி பேசியிருந்தது.. அதைப் பற்றி அவரே கைப்பட எழுதியிருந்த கடிதத்தில் தான் ராணி போல் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்...

ஆக அவர் கூற்றின்படி
அவர் ராணியாகவே வாழ்ந்தார் ராணியாகவே மறைந்தார்... 

வெள்ளி, 18 நவம்பர், 2016

அறுவை சிகிச்சை வெற்றிதான்.. ஆனால்...

சில  வாரங்களுக்கு முன்பு ஒரு வங்கிப் பெண் ஊழியர் மெதுவாக வேலை செய்யும் காட்சியை தனது தளத்தில் போட்ட ஜெயமோகன் அதை உடனடியாக எடுத்துவிட்டார்.. 

ஞாயிறு, 13 நவம்பர், 2016

சரியா தவறா..?

500 /1000 ரூபாய் விவகாரம் விஸ்வரூபமெடுத்து நிற்கிறது… சரியா தவறா என்கிற விவாதம்  பெருமளவில் காட்சி ஊடகங்களில் பேச்சுப் பொருளாக நடைபெற்று வருகிறது..

புதன், 9 நவம்பர், 2016

உலகெங்கும் வலதுசாரிப் புயல் ...

வலதுசாரிகள் செல்வாக்கு உலகெங்கும் பட்டொளி வீசிப் பறந்து வருகிறது என்பதை ட்ரம்ப் வெற்றி DRUM அடித்து சொல்கிறது...   

திங்கள், 24 அக்டோபர், 2016

உலக அதிபர் (?) போட்டி...

என்றுமில்லாத வகையில் தற்போது அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டி விசித்திரமாகச் சென்று கொண்டிருக்கிறது..  ஹிலாரி ட்ரம்ப் போட்டி என்பது   ஒரு பெண்ணுக்கும் ஆணுக்குமிடையே போட்டி என்ற ரீதியில் சென்று கொண்டிருக்கிறது..

ஆரம்பத்திலிருந்து ட்ரம்ப் பற்றி வந்த செய்திகள் வினோதமானவை.. முதலில் இந்தியர்களை கேலி செய்து பேசினார்.. முஸ்லிம் மக்களை இருக்க விடமாட்டேன் என்றார்.. தற்போது ஒரு பெண் அதிபரானால் ராணுவம் எப்படி சல்யூட் அடிக்கும் என்கிற படு மோசமான பிற்போக்கு வாதத்தை உதிக்கிறார்...  பொதுவாக அமெரிக்கா ஜனநாயகம் பரந்துபட்ட மக்களுக்கானாது என்றாலும் அவற்றில் தீவிர வலதுசாரி அம்சம் சற்று உறுத்தும்.. அதிலும் அடிப்படை மதவாதக் கருத்துக்கள் அதிகம் என்கிறார்கள்.. மேலும் ட்ரம்பின் வயது 70.. அவர் நிச்சயம் 15 வயதில் மதவாதக் கருத்துக்களுக்கு ஆளானாவர் என்பது அவரின் தற்போதையே பேச்சில் தெளிவாகத் தெரிகிறது...  லிங்கன் வழிவந்தவரா இவர் என்கிற எண்ணத் தோன்றுகிறது...
Image result for hillary and trump photos

அமெரிக்கா தன்னுடைய   அதிபரை    ஏறத்தாழ உலக அதிபர் என்கிற நிலையில்தான் நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது.  உலகெங்கும் கம்யூனிச அரசுகள் மண்ணைக் கவ்வியவுடன் அமெரிக்கா மேலும் அனைவர் மேல் அமர்ந்து கொண்டுதான் இருக்கிறது... இந்நிலையில் ட்ரம்ப் போன்ற குடியரசு கட்சியின் வேட்பாளர்களின் பேச்சுக்களின் தொனி சற்று விசித்திரமாகவும் ஆபத்தாகவும்தான் உள்ளது.. ஹிலாரி ஈமெயில்களை அழித்தார் போன்ற புகார்கள் இருந்தாலும்     ட்ரம்பின் எதிர்மறை அம்சத்தாலேயே ஹிலாரி   வெற்றி பெற்றுவிடுவார் போல் உள்ளது.. .

இந்தியாவை பலர் படு பிற்போக்கு நாடு என்றும் மத நம்பிக்கை       பெண்ணடிமைத்தனம் நிறைந்த நாடு என்றுதான் பலர் கூறுகிறார்கள்.. ஆனால் இப்படிப்பட்ட நாட்டில்தான் ஒரு பெண் விதவை  - நேரு சாஸ்த்ரிக்குப் பிறகு - சர்வ வல்லமை பொருந்தியவராக பெரிய தலைவராக இருந்திருக்கிறார்.. அதை சராசரி இந்திய மனம் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்

செவ்வாய், 4 அக்டோபர், 2016

தண்ணிரில் தள்ளாடும் உண்மை...

பல் இளித்துவிட்டது  நமது ஓட்டு வங்கி அரசியல்... ஜனநாயகத்தின் மிகப் பெரிய பலமாக இருக்கக் கூடிய அம்சம் இப்படி பலவீனமான போனது வரலாற்றுச் சோகம்தான்... 

 காவிரி விஷயத்தில் உண்மையாகப் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தவிர்த்து எந்தக் கட்சிக்கும் ஆத்மார்த்தமான நிலைபாடே கிடையாது.. எப்படி அரசியல் பண்ணலாம்.. என்ன லாபம் கிடைக்கும் என்பதையே குறிக்கோளாகச் செயல்படும் ஓட்டுக் கட்சிகள் சுயலாபத்தைத்தான் பார்ப்பார்கள் என்பது தெளிவாகிவிட்டது..  இந்த ஓட்டரசியல் கம்யூனிஸ்ட் கட்சிகளையும் விட்டுவைக்கவில்லை.. அவர்களாலும் தமிழகத்தில் ஒரு நிலைபாடும் கர்நாடகத்தில் ஒரு நிலைபாடும்தான் எடுக்க முடிகிறது... 

இதை வைத்து சீமான்கள் வளர ஒரு ராஜபாட்டை வேறு  போட்டுவிட்டார்கள்...  அனைத்து கட்சிகளும் அவரவர்கள் அரசியல் லாபம் பார்த்து விட்டார்கள்..

மீண்டும் உண்மை தனித்து விடப்பட்டிருக்கிறது...